தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கள உதவியாளர் பணியிடங்களுக்கான செய்முறை தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தகவல். 

Continues below advertisement

போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி

 விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB), பணியாளர் தேர்வாணையம் (SSC) மற்றும் ரயில்வே ஆட்சேர்பு வாரியம் (RRB) போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.  

Continues below advertisement

மின்கம்பம் ஏறுவதற்கான இலவசப் பயிற்சி

 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலகம் மற்றும் Wifi வசதியுடன்  கூடிய கணினி ஆய்வகம் உள்ளது.  தற்போது, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TNEB) கள உதவியாளர் (Field Assistant) – Wireman / Electrician பணியிடங்களுக்கான செய்முறை தேர்விற்கு (Practical) மின்கம்பம் ஏறுவதற்கான இலவசப் பயிற்சியானது விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக நடைபெறவிருக்கிறது.  

பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்டு பயன்பெறலாம்

இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக பதிவு செய்வது அவசியமாகும்.  எனவே, செய்முறை தேர்விற்குத் தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.