ஆப்பிரிக்காவில் கடற்கொள்ளையர்களால் பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட தேனி பொறியாளர். நடந்தது என்ன?

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர அந்தக் கப்பல் இரண்டாம் நிலை அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.  மற்றொருவர் சதீஷ்குமார் செல்வராஜ் இவர் கரூர் பகுதியைச் சேர்ந்தவர்.

Continues below advertisement

சரக்கு கப்பலில் பயணம் செய்த இரண்டு தமிழக பொறியாளர்கள் உட்பட 10 இந்திய மாலுமிகளை ஆப்பிரிக்க கடல் கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளார்கள். காத்தி சென்றவர்களிடமிருந்து நகை ,பணம், செல்  போன்றவற்றை கொள்ளையடித்த கொள்ளையர்கள் அந்த கப்பலில் உள்ளவர்களை பணயக்கைதியாக இழுத்து சென்றுள்ளனர்.  அவர்களை மீட்க வேண்டுமென குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Continues below advertisement


உலகில் இரண்டாவது பெரிய கண்டம் ஆப்பிரிக்கா ஆகும். இது இருண்ட கண்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கண்டத்தில் ஏராளமான நாடுகள் உள்ளன. அவற்றில் தென்னாபிரிக்கா உட்பட ஒரு சில நாடுகள் தவிர பெரும்பாலான நாடுகள் ஏழ்மையில் உள்ளன. இங்கு பல நாடுகளில் சட்டத்தின் ஆட்சியில் நடப்பதே இல்லை. கடலோர நாடுகளில் உள்ளவர்கள் கப்பல்களை கடத்திச் செல்வது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் ஆப்பிரிக்கா கண்டத்தின் கிழக்குப் பகுதியில் அரபிக் கடலை ஒட்டியுள்ள சோமாலியா நாட்டில் நிறைய கடற்கொள்ளையர்கள் உள்ளனர். இவர்கள் இந்திய பெருங்கடல் வழியாக செங்கடல் பகுதியில் மத்திய தரை கடல் நோக்கி செல்லும் கப்பல்களையும் அங்கிருந்து வரும் கப்பல்களையும் அடிக்கடி தாக்கி கொள்ளையடித்து செல்கின்றனர். இதை தடுப்பதற்கு இந்தியா உட்பட பல நாடுகள் போர்க்கப்பல்களையும் அங்கு நிறுத்தி உள்ளன.

இப்படிப்பட்ட நிலையில் ஆப்பிரிக்க கண்டத்தில் மேற்குபகுதியில் அட்லாண்டிக் கடல் எல்லையை கொண்ட சில நாடுகளில் கடற்கொள்ளையர்கள் உள்ளனர். இவர்களும் அவ்வப்போது அசம்பாவித செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆப்பிரிக்க கண்டத்தில் மேற்கு பகுதியில் டோகோ என்ற நாடு உள்ளது. இந்த நாட்டிலிருந்து சற்று தென்கிழக்கு சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த கப்பலின் பெயர் பிட்டுறிவர் என்பதாகும்.  பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்டது.  ரூபா ஹஸ்பாலிட் என்ற நிறுவனம் இதை இயக்கி வருகிறது.  இந்த கப்பல் 2022 ஆம் ஆண்டு சீனாவில் கட்டப்பட்டதாகும். 475 அடி நீளம் கொண்டது. இந்த கப்பலில் சில மாலுமிகளும் இருந்துள்ளனர்.  கடத்தப்பட்ட 10 பேரில், 7 பேர் இந்தியர்கள். 3 பேர் ரோம் நாட்டைச் சேர்ந்தவர்கள் . 7 இந்தியர்களில் ஒருவர் தேனி பொம்மையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த பொறியாளர் லட்சுமணபிரதீப் (32) ஆவார் கப்பல் நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது , ஒரு படையில் வந்த கொள்ளையர்கள் அந்த கப்பலை சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் அங்கு உள்ளவர்களை அச்சுறுத்தி அவர்களிடம் இருந்த பணம் நகை போன்ற பல்வேறு பொருள்களை கொள்ளையடிப்பதுடன் அந்த சரக்கு கப்பலை மட்டும் விட்டுவிட்டு  அதில் இருந்தவர்களை கடத்தியுள்ளனர்.


தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர அந்தக் கப்பல் இரண்டாம் நிலை அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.  மற்றொருவர் சதீஷ்குமார் செல்வராஜ் இவர் கரூர் பகுதியைச் சேர்ந்தவர். மேலும் பீகாரை சேர்ந்த சந்திப் குமார் சிங் மினிடாய் தீவுப் பகுதியைச் சேர்ந்தவர்.  மற்றும் சிலர் உள்ளனர்.  இவர்கள் அனைவரும் மார்ச் 17ஆம் தேதி என்று கடந்து செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தேனி மாவட்டத்தை சேர்ந்த பொறியாளரை மீட்க கோரி குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத்சிங்கை சந்தித்து மனு கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தமிழகஅரசுக்கும், வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கும் மாவட்ட நிர்வாகம் இதுகுறித்த தகவலை அனுப்பி உள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola