கொடைக்கானல் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. காடுகளின் பரிசு என்று மொழிபெயர்க்கும் ஒரு பெயருடன், இந்த இடத்தின் அமைதியும், அழகும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள இந்த அற்புதமான இடம் மூடுபனி காடுகள், மயக்கும் நிலப்பரப்புகள், அமைதியான ஏரிகள் மற்றும் இனிமையான வானிலை ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. இயற்கையாகவே, மலைவாசஸ்தலத்தின் இந்த அம்சங்கள் ஒவ்வொரு ஆண்டும் பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றது என சொல்லலாம்.  கோடைகாலங்களில் பல லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கும் இடமாகவும் உள்ளது. 

Continues below advertisement

கொடைக்கானலில் கோடை விழாவில் முக்கிய நிகழ்வாக படகு போட்டி மற்றும் படகு அலங்கார போட்டி நடைபெற்றது.  கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தாலும் கோடை விடுமுறை கொண்டாடுவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்நிலையில் கொடைக்கானலுக்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் விதமாக வருடம் தோறும் கோடை விழா நடைபெறும். இந்த ஆண்டு கோடை விழா 62வது மலர் கண்காட்சியுடன் கடந்த 24 ஆம் தேதி துவங்கி மலர்கள் கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. தினம் தோறும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்து வந்த நிலையில் முக்கிய நிகழ்வாக இருக்கக்கூடிய படகு போட்டி மற்றும் படகு அலங்கார போட்டி கொடைக்கானலில் வீசி வந்த பலத்த காற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.   நேற்றுடன் கோடை விழா முடிவு பெற்ற நிலையில் கொடைக்கானலில் படகு போட்டி மற்றும் படகு  அலங்கார போட்டி கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் நடைபெற்றது.

Continues below advertisement

தமிழ்நாடு படகு குழாமில் நடைபெற்ற இப்போட்டி நான்கு பிரிவுகளில் நடைபெற்றது. இரட்டையர்கள்,  கலப்பு இரட்டையர்கள், ஜோடிகள் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. மேலும் நான்கு பிரிவுகள் கீழ் நடைபெற்ற இப்போட்டிகளில் பலரும் படகு போட்டியில் பங்கேற்றனர். மேலும் வழக்கமாக படகு செலுத்தும் படகோட்டிகளுக்கும் போட்டிகள் நடைபெற்றது. படகு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சுற்றுலாத் துறை சார்பாக பரிசுகளும் வழங்கப்பட்டது .

மேலும் படகு போட்டியில் மகிழ்ச்சியுடன் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து படகு அலங்கார போட்டியும் நடைபெற்று முடிந்தது. படகு அலங்கார போட்டியில் பிரையன்ட்  பூங்கா சார்பாக பூக்களால் ஆன மரம், மீன்வளத்துறை சார்பாக அரசின் நடைமுறைப்படுத்தப்பட்ட செயல் திட்டங்கள், வருவாய் துறை சார்பாக அரசு திட்டங்கள் பட அலங்கார போட்டியில் கலந்து கொண்டது. மேலும் படகு போட்டி மற்றும் படகு அலங்கார போட்டியில் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு மகிழ்ச்சியுடன் தங்களுடைய சுற்றுலாவை நிறைவேற்றம் செய்தனர்.  நேற்றுடன் மலர் கண்காட்சி, கோடை விழா நிறைவடைந்தது. மேலும் பள்ளி கோடை விடுமுறையின் கடைசி நாளான நேற்று கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது. இதனால் பிரையண்ட் பூங்கா, நட்சத்திர ஏரி, குணா குகை, கோக்கர்ஸ் வாக், மோயர் பாயிண்ட், பில்லர் ராக், பைன் பாரஸ்ட், பசுமை பள்ளத்தாக்கு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கொடைக்கானலில் இதமான வெயில், குளிர் என்ற சீதோஷ்ண நிலை நிலவியதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

.