மேலும் அறிய
மதுரையில் ரோடு ஷோ நடத்தும் முதல்வரே இதையெல்லாம் செய்தீர்களா? - செல்லூர் ராஜூ கொடுக்கும் டிவிஸ்ட் !
மதுரை ஒரு ஆன்மீகமும் சுற்றுலா நகரமாக இருக்க வேண்டிய நிலையில், செயல்படுத்தாத திட்டங்கள் வளர்ச்சிக்கு தடையாக உள்ளன - செல்லூர் ராஜூ வேதனை.

செல்லூர் ராஜூ கேள்வி
Source : whats app
மதுரையில் ரோடு ஷோ நடத்த உள்ள முதல்வரே இதையெல்லாம் செய்தீர்களா? என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேள்வி.
மதுரையில் தமிழ்நாடு முதல்வர்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை விமான நிலையம் வருகை தந்தார். தொடர்ந்து பெருங்குடி பகுதியில் இருந்து மதுரை நகரின் பல்வேறு இடங்களில் 20 கிலோ மீட்டர் தூரங்களுக்கு ரோடு ஷோ செய்கிறார். தொடர்ந்து நாளை உத்தங்குடி பகுதியில் திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றக் கொள்கிறார். இதில் அதிமுகவின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் என பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கான முழு ஏற்பாடுகளை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி செய்து வருகிறார். இந்த நிலையில் மதுரை வரும் முதலமைச்சருக்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பல கேள்விகளை எழுப்பி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் பேசிய அவர்,
மதுரை வரும் முதல்வரே!! - செல்லூர் கே.ராஜூ கேள்வி
1. மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்திற்கான 615.92 ஏக்கர் நிலத்தில், இன்னும் 20 ஏக்கர் நிலம் பல மாதங்களாக ஒதுக்கப்படாமல் உள்ளது. இனியாவது இந்த நிலத்தை ஒதுக்கி பணிகளை தொடங்குவீர்களா?
2. அதிமுக ஆட்சியில் தொடங்கிய ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் இன்னும் முழுமையடையவில்லை. பெரியார் பேருந்து நிலையத்தில் கட்டிய வணிக வளாகம் திறக்கப்படாததால் ஆண்டுக்கு ₹7 கோடி வருவாய் இழக்கப்படுகிறது. இதற்குப் பதிலளிக்கச் செயல் எடுத்தீர்களா?
3. தாங்கள் 2022-ஆம் ஆண்டு அறிவித்த ரூ.280 கோடி மதிப்பிலான ஐ.டி. பார்க் திட்டம் எங்கே?இதற்குப் பொறுப்பான தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மதுரையை சேர்ந்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். இப்போதாவது திட்டத்தை செயலாக்குவீர்களா?
4. அதிமுக ஆட்சியில் தொடங்கிய முல்லைப்பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம், திமுக ஆட்சியில் திட்டமிட்டு தாமதப்படுத்தப்படுகிறது.திட்ட மதிப்பு ரூ.1,296 கோடியில் இருந்து ரூ1,685 கோடியாக உயர்ந்துள்ளது. இது தான் உங்கள் "விடியல்" ஆட்சியின் விளைவு என்றால், மக்கள் ஏற்க முடியுமா?
5. மதுரை 'எய்ம்ஸ்' மருத்துவமனை கட்டுமானம் இன்னும் முடியவில்லை.ஆனால், அதைச் சுற்றியுள்ள நிலங்களில் திமுகவினரின் 'ரியல் எஸ்டேட்' வளர்ச்சி மட்டும் கொடிக்கட்டி பறக்கிறது நடவடிக்கை எடுப்பீர்களா?
6. திட்டமிடல் இல்லாமலே அமைக்கப்பட்ட மேம்பாலன்கள் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளன. மதுரை ஒரு ஆன்மீகமும் சுற்றுலா நகரமாக இருக்க வேண்டிய நிலையில், இவைகள் வளர்ச்சிக்கு தடையாக உள்ளன. இதுதான் உங்கள் திட்டமிடலின் சிறப்பா?
என - அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லூர் K.ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement






















