மானாமதுரை அருகே வானில் தோன்றிய இரட்டை வானவில்: மகிழ்ச்சியடைந்த பொது மக்கள் !
வானில் தெளிவாக இரட்டை வானவில் தோன்றியது. இதனை அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்ததுடன், பலர் தங்களது செல்போன்களில் புகைப்படமாக பதிவு செய்தனர்.

எதிரும் புதிருமான சூரியனும், மழையும் வானவில்லால் இணைந்தன; மனிதன் தான் எப்போது ஒன்று சேர்வானோ!” என்ற வாசகத்துடன் பலரும் இந்த காட்சியை பகிர்ந்து வருகின்றனர்.
அழகிய இரட்டை வானவில் தோன்றி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா கோச்சடை பகுதியில் மழைக்கு பின் வானில் அழகிய இரட்டை வானவில் தோன்றி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. இன்று மாலை நேரத்தில் வெயிலும், சாரல் மழையும் ஒரே நேரத்தில் நிலவிய நிலையில், வானில் தெளிவாக இரட்டை வானவில் தோன்றியது. இதனை அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்ததுடன், பலர் தங்களது செல்போன்களில் புகைப்படமாக பதிவு செய்தனர்.
வானவில் இயற்கையின் அழகை மேலும் மெருகூட்டியது.
பசுமை நிறைந்த வயல்வெளி பின்னணியில் தோன்றிய வானவில் இயற்கையின் அழகை மேலும் மெருகூட்டியது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களிலும் பரவி வருகின்றன. “எதிரும் புதிருமான சூரியனும், மழையும் வானவில்லால் இணைந்தன; மனிதன் தான் எப்போது ஒன்று சேர்வானோ!” என்ற வாசகத்துடன் பலரும் இந்த காட்சியை பகிர்ந்து வருகின்றனர்.
Before You Go
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
ட்ரெண்டிங் செய்திகள்






















