மேலும் அறிய
மதுரையில் 10 மணி நேரமாக சென்னை, திருச்சி உள்ளிட்ட வடமாவட்டத்திற்கு பேருந்து இல்ல... காத்திருந்த பயணிகள் !
வைகாசி விசாகத்திற்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டதால் மதுரையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்ல பேருந்துகள் குறைவாக இயக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

பேருந்துநிலையம்
Source : whatsapp
10 மணி நேரமாக சென்னை, திருச்சி உள்ளிட்ட வடமாவட்டத்திற்கு பேருந்து இல்ல...! காத்திருந்த பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டு பேருந்து எங்கே? என ஆவேச கேள்வி.
மாட்டுத்தாவணி பேருந்து நிலையம்
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், ஓசூர் மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு தமிழ்நாடு மாவட்டம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு அரசு போக்குவரத்து சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு 9:00 முதல் தற்பொழுது வரை சென்னை, திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு பேருந்து இல்லாமல் 10 மணி நேரத்துக்கு மேலாக பேருந்து நிலையத்தில் காத்திருந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் முன்பாக சாலை மறியலில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஈடுபட்டனர்.
போக்குவரத்து நெரிசல்
இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பேருந்துகள் பேருந்து நிலையம் முன்பாக நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் அங்கு வந்த மாட்டுத்தாவணி போலீசார் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பேருந்தை ஏற்பாடு செய்து தருவதாக பேச்சுவார்த்தை நடத்தி உறுதி அளித்ததைத் தொடர்ந்து சாலை மறிகளை கைவிட்டு பேருந்து நிலையத்திற்குள் சென்றனர்.
வைகாசி விசாகத்திற்கு கூடுதல் பேருந்துகள்
இரவு முதல் அதிகாலை வரை வந்த பேருந்துகள் அனைத்திலும் நேம் போர்டுகள் ஆப் செய்யப்பட்டு வருவதாகவுன், அதேபோல கூடுதலாக 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை சீட்டுக்கு வசூல் எக்ஸ்ரா செய்வதாகவும் பயணிகள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர். அரசு போக்குவரத்து துறை சார்பில் இது குறித்து கேட்ட பொழுது "வைகாசி விசாகத்திற்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டதால் மதுரையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்ல பேருந்துகள் குறைவாக இயக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion




















