ஒத்தக்கடை அருகே தற்காலிக குப்பை சேகரிப்பு மையம் அமைக்க அனுமதி அளித்து மதுரை அமர்வு உத்தரவு. உறுதிமொழியை பதிவு செய்து வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு.

Continues below advertisement

குப்பைகள் கொட்டுவதை தடுக்க உத்தரவிடக் கோரி

மதுரையைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர், ஒத்தக்கடை அருகே உள்ள சின்னக்குளம் மற்றும் அதனுடன் இணைந்த ஓடையை பாதுகாக்கும் வகையில், குப்பைகள் கொட்டுவதை தடுக்க உத்தரவிடக் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

Continues below advertisement

நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 

மதுரை கிழக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் தாக்கல் செய்த பதில் மனுவில், மக்கும் கழிவுகள் உயிரிவாயு மற்றும் உரம் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுவதாகவும், மக்காத கழிவுகள் மட்டும் தற்காலிகமாக சேகரிக்கப்பட்டு, பின்னர் மதுரை மாநகராட்சி பெருங்குடியில் உள்ள ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை மையத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதிகள் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டது.

மேலும், குப்பைகள் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு மட்டுமே அங்கு வைக்கப்படும் என்றும், இது நிரந்தர குப்பைக் கொட்டும் இடம் அல்ல என்றும் விளக்கமளிக்கப்பட்டது. பின்னர் இதனை பதிவு செய்த நீதிமன்றம்...," இந்த இடம் "சானிட்டரி லேண்ட்ஃபில்" அல்ல; தற்காலிக சேகரிப்பு மையம் மட்டுமே என்பதால், சாலிட் வேஸ்ட் மேலாண்மை விதிகளில் உள்ள தூர வரம்பு இவ்வழக்கில் பொருந்தாது. மேலும், சேகரிப்பு மையத்தைச் சுற்றி 20 அடி உயர தகர வேலி அமைக்கப்படும், குப்பைகள் 7 அடிக்கு மேல் குவிக்கப்படாது, மக்கும் கழிவுகள் அங்கு சேமிக்கப்படாது என்பதால் துர்நாற்றம் மற்றும் நீர்நிலை மாசுபாடு ஏற்படாது என அதிகாரிகள் உறுதியளித்தனர். இந்த உறுதிமொழி மீறப்பட்டால், பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம். இதையடுத்து, அதிகாரிகள் அளித்த உறுதிமொழியை பதிவு செய்த, நீதிபதிகள் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டது.