தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் நடைபெற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற ஓ பன்னீர்செல்வம் பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தான் அரசியலுக்கு வந்தது முதல் இன்று வரை உள்ள நிகழ்வுகளை கூறினார். சட்டப் போராட்டங்கள் நடத்தி அதிமுகவின் மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக கூறிய ஓபிஎஸ்,  எம்ஜிஆர் கொண்டு வந்த சட்ட திட்டங்களை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வருவதே தன்னுடைய குறிக்கோளாகும் என்று கூறினார்.

Continues below advertisement

இரட்டை பதிவு முறையை கொண்டு வந்ததே எடப்பாடி பழனிச்சாமி தான் என்றும் கழகப் பொதுச் செயலாளராக எம்ஜிஆர் கொண்டு வந்த சட்ட திட்டங்களை நடைமுறையில் இருக்க வேண்டும் என்று நான் கூறியதாகவும் கூறினார். அதிமுக உரிமை மீட்பு குழு என்பது அதிமுகவின் மீண்டும் மீட்டெடுக்க தான் என்பது குறித்துக் கூறினார்.  கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தேனி பாராளுமன்ற தொகுதி மட்டுமே வெற்றி பெற்றதாகவும் கூறினார்.

Continues below advertisement

மேலும் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக பொறுப்பேற்று 11 தேர்தல் களத்தில் தோல்வியை சந்தித்துள்ளதாக விமர்சனம் செய்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் தான் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட நிலையில் தான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காக ஓ பன்னீர்செல்வம் என்ற பெயரில் 6 வேட்பாளர்களை தேர்தல் களத்தில் நிறுத்தி என்னை தோல்வியடைய செய்தனர். நான் என்ன தவறு செய்தேன். என்னை அரசியலில் இருந்து ஒரு முற்றிலும் ஓரம் கட்ட நினைப்பது ஏன்? இதுவரை கட்சியை மீட்பதற்காக எவ்வளவு போராட்டங்களையும், அவமானத்தையும் சந்தித்து வருகிறேன் என்று கூறினார். தொடர்ந்து பேசுகையில், நான் இனி சங்கர மடத்திற்கா செல்ல முடியும் என்றும் கேள்வி எழுப்பினர்.

டிடிவி தினகரன் பற்றி கேள்வி எழுப்பியதற்கு அவர் மீது மிகுந்த மதிப்பு மரியாதையும் எனக்கு உள்ளது அவர் பற்றி கூறுவதற்கு ஒன்றுமில்லை என்று கூறினார். திமுகவில் இணைவீர்களா? என்பது கேட்டதற்கு வழக்கமாக சட்டமன்றத் தேர்தல் முடிவடையும் பொழுது ஆளும் கட்சி சபாநாயகர் மற்றும் முதல்வரை பார்த்து மரியாதை தெரிவிப்பது நமது மரபாகும். அந்த மரபையே நான் கடைப்பிடித்து வாழ்த்துக்கள் தெரிவித்தேன்.  வேறு எந்த விஷயமும் இல்லை பத்திரிகையாளர் ஆன நீங்கள்தான் பல்வேறு காரணங்களை கூறி பல்வேறு விஷயங்களை பரப்பி வருகிறீர்கள் என்று கூறினார்.

மேலும் எடப்பாடி பழனிச்சாமி அழைத்தால் மீண்டும் அதிமுக செல்வீர்களா என்று கேட்டதற்கு, மதியாத தலைவாசல் மிதியாதே என்பதுதான் உண்மை என்று தனது பேட்டியை நிறைவு செய்தார். மேலும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பாதுகாத்து வந்த இயக்கத்தை மீட்டு மீண்டும் தொண்டர்கள் இயக்கமாக கொண்டு செல்வது எனது குறிக்கோள் என்றும் கூறினார்.

 வரும் சட்டமன்றத் தேர்தலில் நிர்பீர்களா என்ற கேள்வி எழுப்பியதற்கு நீங்களே கூறுங்கள் என்று பத்திரிகையாளர்கள் பார்த்து கூறினார். மொத்தத்தில் ஒரு மணி நேரம் தனது அரசியல் வரலாறை பத்திரிகையாளர் சந்திப்பில் கூறிய ஓ. பன்னீர்செல்வம் இனி வருங்காலத்தில் தனியாக நிற்பாரா?  வேறு கட்சிகளுடன் இணைவாரா? என்று கேள்விக்குறியில் உடனே தனது பத்திரிகையாளர் சந்திப்பை நிறைவு செய்தார். இன்னும் அவர் தனது நிலைப்பாடு குறித்து முழுமையாக எந்த தகவலும் கூறவில்லை என்பது உண்மை.