மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் செய்தியாளர்களை  சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,


சுற்றுப்பயணம் குறித்த கேள்விக்கு


கூடிய விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். 


 




நாளை அமித்ஷாவை சந்தித்தால் மேகதாது பற்றி விவாதிக்கப்படுமா என்ற கேள்விக்கு


ஏற்கனவே மேகதாது பற்றி விரிவான அறிக்கை கொடுத்துள்ளேன். தமிழ்நாட்டுடைய அனுமதி, அங்கீகாரம் இல்லாமல் மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்ட முடியாது. இதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளது.


ஒடிஷா ரயில் விபத்து மத்திய அரசின் இயலாமையை மறைப்பதற்கான காரணம் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு


ஒடிஷா ரயில் விபத்து மனித உள்ளங்களை உருக்கி, கசக்கி பிழிகிற விபத்தாக தான் உலக நாடுகள் தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து இருக்கிறது.


மைத்ரேயன் பிஜேபியில் இணைந்திருப்பது குறித்த கேள்விக்கு:


எங்கிருந்தாலும் வாழ்க.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - அதிக கடன் வாங்கும் பட்டியலில் முதலிடத்தில் கொண்டு சென்று தமிழகத்தை சீரழித்து விட்டார் ஸ்டாலின்- ஆர்.பி.உதயகுமார்











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண