திண்டுக்கல் நகரின் மத்தியில் மாநகராட்சிக்கு சொந்தமான பேரறிஞர் அண்ணா பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கல் சுற்றியுள்ள வெள்ளோடு, சிறு நாயக்கன்பட்டி, சின்னாளப்பட்டி, பெருமாள்கோவில் பட்டி, கலிக்கம்பட்டி, அதிகாரிப்பட்டி உட்பட பல கிராமங்களில் மல்லிகைபூ, ஜாதிப்பூ, முல்லைப்பூ, கனகாம்பரம், சம்மங்கி, செவ்வந்தி, ரோஸ், வாடாமல்லி போன்ற பூக்கள் பயிர் செய்யப்படுகின்றது.


Crime: ரூ.2000 கோடி போதை பொருள் கடத்தல்: சிக்கினார் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் - அதிரடி கைது!



இங்கு விளைகின்ற பூக்களை திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு நாள்தோறும் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். இங்கிருந்து தமிழகம் முழுவதும் மற்றும் கேரளா, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களுக்கு விற்பனைக்கு வியாபாரிகள் வாங்கி செல்வது வழக்கம். இங்கிருந்து சராசரியாக நாள் ஒன்றுக்கு 15 டன்  பூக்கள் வரை விற்பனைக்கு வியாபாரி வாங்கி செல்வார்கள்.


6+2 பார்முலா.. பாஜக கூட்டணியில் இணையும் சந்திரபாபு நாயுடு.. ஆந்திராவில் மெகா பிளான்!


நேற்று முதல் இன்று வரையில் மஹா சிவராத்திரி விசேச நாள் என்பதால் வழக்கமாக விற்கும் பூக்கள் விலை சற்று அதிகரித்தே காணப்பட்டது. திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இன்று  பூக்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.  இரண்டு தினங்களுக்கு முன் ரூ 500க்கு 700 விற்பனையான மல்லிகை பூ தற்பொழுது 1200 க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் ரூ 400க்கு விற்பனையான கனகாம்பரம் தற்பொழுது 600 விற்பனையாகிறது, அதேபோல், ரூ.300க்கு விற்பனையான முல்லைப் பூ தற்பொழுது ரூ. 800க்கு விற்பனை ஆகிறது, ரூ.300 க்கு விற்பனையான ஜாதிப்பூ தற்பொழுது ரூ 500 க்கு விற்பனையாகிறது.


 



"ஆசிரியர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் திமுக அரசு: கருத்து கூறினால் ஆசிரியை சஸ்பெண்டா?" ஈபிஎஸ் கண்டனம்


இதேபோல் தேனி மாவட்டத்திலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்க கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர். குறிப்பாக பூ மார்க்கெட்டுகளில் பூக்கள் வாங்க ஏராளமாேனார் குவிந்தனர். தேனி, கம்பம், சீலையம்பட்டி, ஆண்டிப்பட்டி பூ மார்க்கெட்டுகளில் பொறுத்தமட்டில் கடந்த சில நாட்களாக பூக்களின் விலை குறைந்து காணப்பட்டது. இந்தநிலையில் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு நேற்று பூக்களின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி கம்பம், ஆண்டிப்பட்டி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,500-க்கு விற்கப்பட்டது. அதேபோல் பிச்சிப்பூ, முல்லைப்பூ, கனகாம்பரம் ஆகிய பூக்களும் கிலோ ரூ.8,00 வரையில் விற்பனை ஆனது. வரத்து குறைந்ததால் ஆண்டிப்பட்டி பகுதியில் மல்லிகைப்பூவுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.