மேலும் அறிய
மதுரை மக்களே.. உங்கள் குறைகளைத் தீர்க்க மாநகராட்சியில் புதிய வசதி - புகார் அளிக்க உடனே அழையுங்கள்!
பொதுமக்கள் தயங்காமல் தங்கள் குறைகளை தெரிவிக்க வேண்டும் என்றும், மக்கள் ஒத்துழைப்புடன் நகர சேவைகளை மேம்படுத்த முடியும் என்றும் மாநகராட்சி கேட்டுக் கொண்டுக் கொள்கிறேன்.

மாநகராட்சி அலுவலகம் மதுரை
Source : whatsapp
மக்களின் அன்றாட பிரச்னைகளை விரைவாக தீர்க்கும் நோக்கில் மதுரை மாநகராட்சி புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. நகரின் அடிப்படை வசதிகள் குறித்த புகார்களை இனி நேரடியாக தொலைபேசி மற்றும் WhatsApp மூலம் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மக்கள் தங்களின் புகார்களை தொலைபேசி வாயிலாக தெரிவிக்கலாம்.
மதுரை மாநகராட்சி பொதுமக்கள் எதிர்கொள்ளும் குடிநீர், சாலை, கழிவு மேலாண்மை உள்ளிட்ட அடிப்படை சேவை குறைகளை உடனடியாக தீர்க்கும் வகையில் புதிய புகார் பதிவு முறையை அறிவித்துள்ளது. இதன்படி, பொதுமக்கள் தங்களின் புகார்களை 90039 90030 இந்த எண்ணிற்கு தொலைபேசி வாயிலாக நேரடியாக தெரிவிக்கலாம். மேலும் புகார்களின் விவரங்களை புகைப்படம் அல்லது வீடியோவுடன் 96001 12811 இந்த எண்ணிற்கு WhatsApp மூலம் அனுப்பவும் வசதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரில் சுகாதாரம், குடிநீர் விநியோகம், கழிவுநீர் வடிகால், சாலை சேதம், தெருவிளக்கு பழுது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து பொதுமக்கள் எளிதாக தகவல் தெரிவிக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மக்கள் ஒத்துழைப்புடன் நகர சேவைகளை மேம்படுத்த முடியும்
மேலும் புகார் அளிக்கும் போது, சம்பந்தப்பட்ட இடத்தின் சரியான முகவரி மற்றும் விவரங்களை வழங்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைகளை விரைவாக ஆய்வு செய்து தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் தயங்காமல் தங்கள் குறைகளை தெரிவிக்க வேண்டும் என்றும், மக்கள் ஒத்துழைப்புடன் நகர சேவைகளை மேம்படுத்த முடியும் என்றும் மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement























