மதுரை வாடிப்பட்டி - தாமரைப்பட்டி இடையேயான அவுட்டர் ரிங்ரோடு இன்று (ஜூலை 15) முதல் போக்குவரத்துக்கு திறந்து விடப்படுகிறது.
 
தென் மாவட்டங்களில் முக்கிய நகராக பார்க்கப்படும் மதுரையில் கடுமையான போக்குவரத்து நிலவுகிறது. இந்த சூழலில் பல்வேறு பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் வாடிப்பட்டி முதல் தாமரைப்பட்டி இடையேயான அவுட்டர் ரிங்ரோடு முதல் போக்குவரத்துக்கு திறந்து விடப்படுகிறது. இதனால் மதுரை மக்கள் பலரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
 
மதுரையில் திறக்கப்படும் முக்கிய சாலை - பொதுமக்கள் மகிழ்ச்சி
 
மதுரையின் போக்குவரத்து நெரிசலை  கட்டுப்படுத்த தென்பகுதியில் 1997 ல் மாட்டுத்தாவணி முதல் நகரின் கப்பலுார் ரிங் வரை ரோடு அமைக்கப்பட்டது. அதேபோல வடபகுதியில் மாட்டுத்தாவணி முதல் வேயர்காலனி, அய்யர்பங்களா, ஆனையூர் வழியாக பாத்திமா கல்லுாரி வரை இந்த ரோடு அமைந்துள்ளது. முப்பது ஆண்டுகளில் நகரின் பரப்பும், போக்குவரத்தும் அதிகரித்துள் ளதால்  இரண்டாவது  கட்டமாக அவுட்டர் ரிங்ரோட்டு சாலை தேவை ஏற்பட்டது. இதற்கான திட்டம் 1999 லேயே உருவானாலும் முதற்கட்ட பணிகள் 2020 ல் துவக்கப்பட்டது. கொரோனா நோய் தொற்று காலத்தில் பணிகள் தொய்வு ஏற்பட்டது.  அதற்கு பின்னதாக சாலைக்கான நிலம் கைப்பற்றும் வேலைகளில் தொய்வு ஏற்பட்டு தாமதானது. இந்நிலையில் சமீபத்தில் முழுப் பணிகளும்  முடிவுற்று  இன்று முதல் அதிகாரப்பூர்வமாக போக்குவரத்துக்கு திறந்து விடப்படுகிறது.
 
நான்கு வழிச்சாலை 
 
மதுரை -  திண்டுக்கல் முதல் மதுரை - மேலுார் சாலையில் சிட்டம்பட்டி, ரோட்டில் வாடிப்பட்டி தாமரைப்பட்டி வரை நெடுஞ்சாலை புதிய நான்கு வழிச்சாலையாக தேசிய ஆணையம் மூலம் இந்த ரிங்ரோடு அமைந்துள்ளது. இந்த ரோடு  மூலம் மதுரை மேலுார், தெற்குதெரு பகுதியினர், சிவகங்கை மதுரை வந்து சிக்காமல் பகுதியினர் நகருக்குள் நெரிசலில் திண்டுக்கல்லிற்கு போக முடியும். கன்னியாகுமரி பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை அடைய முடியும். வாடிப்பட்டியை சேர்ந்தவர்கள் மதுரை நகருக்குள் வராமல் மேலுார், காரைக்குடி, திருச்சிக்கு செல்ல முடியும்.
 
'அனிமல் பாஸ்' பாலம் வசதிகள் செய்யப்பட்டுள்ள
 
ரூ. 1000-த்தி 24 கோடி மதிப்பில் 30 கி.மீ., நீளத்திற்கு  அழகாக அமைக்கப்பட்ட சாலையில், பாலங்கள், பாலங்கள் 4 பெரிய 29 சிறிய உள்ளன. பசுமை வழிச்சாலையாக அமைக்கப்பட்டுள்ள இந்த ரோட்டில் வனவிலங்குகள் ரோட்டை கடந்து செல்வ தற்கு வசதியாக வேறெங்கும் இல்லாத வகையில் 'அனிமல் பாஸ்' பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கிராமங்கள் இணையும் பகுதிகளில் சர்வீஸ் ரோடும் உள்ளது. அலங்காநல்லுார் அருகே இலவங்குளத்தில் 'டோல்கேட்' அமைக்கப் பட்டுள்ளது. மதுரையின் வெளிப்புற பகுதியில் 2வது ரிங்ரோ டாக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்ப இதில் கேமரா, வாகனங்கள் ஓட வெடுக்க 'பே', கழிப்ப வசதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக தென் மாவட்டத்தில் முக்கிய சாலைகளில் இந்த அவுட்டர் ரிங் ரோடு அமையும் எனவும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.