மதுரையில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு ஏடிஎம் இயந்திரம் முழுவதுமாக எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீ மளமளவென பரவ தொடங்கி ஏடிஎம் இயந்திரம் முழுவதிலும் எரிந்துள்ளது.
மதுரை மாநகர் கீரைத்துறை அருகே உள்ள புது மாகாளிப்பட்டி பகுதியில் உள்ள அரசுடமை வங்கியான (கனரா ) வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்., மையம் செயல்பட்டு வந்துள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில் நாள்தோறும் ஏராளமான வாடிக்கையாளர்கள் பணம் எடுத்து பயன்படுத்தி வந்ததால் எப்போதும் பணம் நிரப்பி வந்துள்ளனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் ஏடிஎம் மையத்தில் முழுவதிலும் பணம் நிரப்பப்பட்ட நிலையில் இன்று காலை திடீரென ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து புகை வெளியேறி உள்ளது. பின்னர் சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவ தொடங்கி ஏடிஎம் இயந்திரம் முழுவதிலும் எரிந்துள்ளது. இதையடுத்து அருகில் உள்ள பொதுமக்கள் அனுப்பானடி தீயணைப்புத் துறையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஏடிஎம் இயந்திரத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தீ விபத்து ஏற்பட்டதற்கு ஏசியில் ஏற்பட்ட மின்கசிவாக இருக்கலாம் ஏ.டி.எம்., இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டதற்கு ஏசியில் ஏற்பட்ட மின்கசிவாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல் தெரியவருகிறது. இந்த தீ விபத்து குறித்து கீரைத்துறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்டமாக ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் மூலமாக தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்தான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஏடிஎம் இயந்திரம் முழுவதுமாக எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அருகில் ஏதேனும் சிசிடிவி கேமராக்கள் இருக்கிறதா ? என்பதை குறித்தான விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. மதுரையில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு ஏடிஎம் இயந்திரம் முழுவதுமாக எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.