திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து மதுரை அமர்வு உத்தரவு.

முருகன் முதல்படை வீடு
 
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில், முதல் படைவீடு திருப்பரங்குன்றம். மதுரை மாநகரின் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் தென்மேற்கு திசையில் உள்ளது. திருப்பரங்குன்றம் முருகன் கோயில் வடக்கு முகம்பார்த்து அமைந்திருக்கிறது. சூர சம்ஹாரத்தை நிகழ்த்திக் காட்டி வாகைசூடி வந்த முருகனுக்கு தெய்வானையை திருமணம் முடித்துக் கொடுத்த இடமாகும். வீரன் முருகனின் வேலுக்கு மட்டும் அபிஷேகம் இங்கு மட்டும் நடப்பது சிறப்பானது.   எல்லா இடங்களிலும் அமர்ந்த நின்ற கோலத்தில் இருக்கும் முருகன் இங்கு தெய்வானையை மணந்த கோலத்தில் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். திருமண கோலத்தில் அருள் பாலிக்கும் முருகன் சுப்பிரமணிய சுவாமி எனும் நாமத்தால் அழைக்கப்படுகிறார். சுப்பிரமணியரின் அருகில் நாரதர், இந்திரன், பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி மேலே சூரியன் சந்திரன், கந்தகுகளும் இருக்கின்றனர். சுப்பிரமணியருக்கு கீழே தன்னுடைய சிறப்பு வாகனமான யானையும், ஆடும் உள்ளது. இப்படி பல்வேறு சிறப்பு கொண்ட திருப்பரங்குன்றத்திற்கு சர்ச்சைகளும் பஞ்சமில்லாமல் மாறியுள்ளது.
 
தீபத்தூண் பிரச்னை
 
இந்தாண்டு  திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிடக்கோரி ராம ரவிக்குமார் வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி  மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, அதிலும் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்  பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை எதிர்த்து பல்வேறு மனுக்கள்  தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த சூழலி தொடர்ந்து இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக விசாரணையில் மலை உச்சியில் உள்ள தூணில் பூஜை செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கு நிறுத்தி வைக்கப்படும் என தனி நீதிபதி தெரிவித்திருந்தார். 
 
மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன
 
 இந்நிலையில் தீபத்தூரில் தீபம் ஏற்ற உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கூறிய வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார் ஜோதிராமன் அமர்வு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து வழக்கை ஏப்ரல் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். தேவஸ்தானமே தீபத்தூணில் பூஜை செய்து இது போன்ற பிரச்னைகளை தவிர்க்கலாமே எனவும் கருத்து தெரிவித்தனர்.