Just In





ஜிம்மில் செம ஒர்க்அவுட்... மயங்கி விழுந்த இளைஞர்.. கேரளாவில் நடந்த சோகம்
உடற்பயிற்சி சீராக செய்தால் அது உங்களின் உடல் எடையை சரியாக வைத்து, இதய நோய்களைத் தவிர்த்து மன அழுத்தத்தில் இருந்து விடுபடச் செய்யும்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த சல்மான் என்ற இளைஞர் மயங்கி விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
உடலுக்கு உடல்பயிற்சி மிக மிக அவசியம். என்னதான் உணவில் கட்டுப்பாடுகள். சீரான தூக்க பழக்கவழக்கம் இருந்தாலும் கூட உடற்பயிற்சி இல்லாவிட்டால் பல்வேறு வாழ்வியல் நோய்களும் வரிசைக் கட்டிக்கொண்டு வந்து சேரும். அது வயது ஆக ஆக உடற்பயிற்சியின்மை ரத்த சர்க்கரை தொடங்கி நிறைய நோய்களை வரவேற்கும். உடற்பயிற்சி சீராக செய்தால் அது உங்களின் உடல் எடையை சரியாக வைத்து, இதய நாள நோய்களைத் தவிர்த்து மன அழுத்தத்தில் இருந்து விடுபடச் செய்யும்.
ஆனால் அதுவே அளவுக்கு மிஞ்சினால் அது உங்கள் உடலில் குறிப்பாக மூளையில் பல்வேறு உபாதைகளை ஏற்படுத்தும் எனக் கூறுகின்றனர். ஆகையால் உடற்பயிற்சியை செய்யும்போது உங்கள் உடல் அளவு வயது எடை திறனுக்கு ஏற்ப தகுந்த பயிற்சியாளரிடம் ஆலோசனை பெற்று உடற்பயிற்சி செய்ய வேண்டும். பொதுவாக ஒரு வளர்ந்த நபர் வாரத்தில் 5 முதல் 6 மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. அல்லது அதே நபர் 2 அரை மணி நேரம் கடுமையான உடற்பயிற்சி செய்யலாம். இதையெல்லாம் மீறி அதீத உடற்பயிற்சி செய்தால் சிக்கல்தான்.
"தோப்பு கொஞ்சம் பொறுங்க.. அதான் நான் பேசுறேன்ல" முன்னாள் அமைச்சரிடம் எகிறிய இந்நாள் அமைச்சர்!
சமீப காலங்களில் உடற்பயிற்சி செய்யும் நபர்கள் குறிப்பாக உடற்பயிற்சி செய்யும் இடத்தில் மயங்கி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருவதை பார்க்கலாம்.ம்அப்படிதான் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட அம்பலவயல் பகுதியில் உடற்பயிற்சி நிலையம் ஒன்று அமைந்துள்ளது. அதே பகுதியை சல்மான் என்ற இளைஞர் தினமும் இந்த உடற்பயிற்சி நிலையத்தில், உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். இந்த நிலையில் வழக்கம் போல நேற்று காலை உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி மேற்கொண்டு வந்த போது திடீரென மயங்கி விழுந்தார்.
உடனடியாக அங்கு இருந்தவர்கள் சல்மானை மீட்டு கோழிக்கோடு மாவட்டத்திற்கு கொண்டு சென்றனர் அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது சல்மான் உயிர் பிரிந்ததாக தெரிவித்தனர். பயிற்சி நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்த காட்சிகள் பதிவான நிலையில் தற்போது இது குறித்த காட்சிகள் வெளியாகி உள்ளது, மயங்கி விழுந்து இறந்ததாக கூறப்பட்ட நிலையில் தொடர்ந்து முழு விவரங்கள் ஒரு தரப்பில் பின்னர் தெரிவிக்கப்படும் என மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி மேற்கொண்டிருந்த 20 வயது இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.