<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>madurai</title><atom:link href="https://tamil.abplive.com/madurai/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Sat, 2 May 2026 05:12:01 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[ரூ.3.க்கு நாமக்கல் முட்டை.. குறைந்த விலைக்கு முட்டை வாங்கிய பொதுமக்களுக்கு அதிர்ச்சி !]]></title><link>https://tamil.abplive.com/lifestyle/food/sivagangai-3-rs-namakkal-eggs-for-shock-to-the-public-who-bought-eggs-at-a-low-price-tnn-258074</link><comments>https://tamil.abplive.com/lifestyle/food/sivagangai-3-rs-namakkal-eggs-for-shock-to-the-public-who-bought-eggs-at-a-low-price-tnn-258074#respond</comments><pubDate>Fri, 1 May 2026 16:10:10 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ உணவு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/lifestyle/food/sivagangai-3-rs-namakkal-eggs-for-shock-to-the-public-who-bought-eggs-at-a-low-price-tnn-258074</guid><description><![CDATA[&lt;div dir=&quot;auto&quot;&gt;சிவகங்கையில் அழுகிய முட்டைகள் விற்பனை: குறைந்த விலைக்கு வாங்கிய பொதுமக்கள் வேதனை.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;குறைந்த விலையில் நாமக்கல் முட்டை&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;நாமக்கல் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டதாக கூறி, சிவகங்கை நகராட்சியில், பல்வேறு பகுதிகளில் வண்டிகளில் முட்டைகள் விற்பனை செய்யப்பட்டதாக தெரிகிறது. ஒரு முட்டை ரூ.3 முதல் ரூ.4 வரை குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடைகளில் ரூ.6 முதல் ரூ.7 வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது. குறைந்த விலை காரணமாக பொதுமக்கள் 30 முதல் 50 முட்டைகள் வரை வாங்கிச் சென்றுள்ளனர். ஆனால், மறுநாள் பயன்படுத்த முயன்றபோது பல முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததாகவும், துர்நாற்றம் வீசியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். மேலும், சில முட்டைகள் சிறிய அளவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;கெட்டுப்போன முட்டை&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;சிவகங்கை மேலூர் சாலையைச் சேர்ந்த கட்டிட பொறியாளர் விக்னேஷ் (30) என்பவர் 30 முட்டைகள் வாங்கியதாகவும், பின்னர் அவற்றை வேகவைத்தபோது கெட்டுப்போனது தெரியவந்ததாகவும் கூறினார்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;இந்த முட்டைகள் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டியவை ஆக இருக்கலாம் என்றும், தற்போது பள்ளிகள் விடுமுறையில் இருப்பதை பயன்படுத்தி வெளியில் விற்பனை செய்யப்படுகிறதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய முட்டைகள் பொதுமக்களுக்கு ஏன் விற்பனை செய்யப்படுகின்றன என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;கடும் வெயில் காலம் என்பதால் உணவுப் பொருட்கள் விரைவில் கெட்டுப்போகும்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மேலும், கடந்த சில நாட்களாக உணவகங்களில் உணவுத்துறை அதிகாரிகள் சோதனைகள் நடத்தப்படவில்லை என்றும், கடும் வெயில் காலம் என்பதால் உணவுப் பொருட்கள் விரைவில் கெட்டுப்போகும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது. இதனால், முட்டை விற்பனையாளர்கள் மற்றும் உணவகங்களில் தீவிர சோதனைகள் நடத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உடனடி ஆய்வு மேற்கொண்டு, தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/01/23b6088d33d853cf87876c2aea24a5241777631959309184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[Madurai Chithirai Festival ; வைகை ஆற்றிற்குள் டோனி, அஜித் படத்தை காண்பித்து உற்சாகமடைந்த இளைஞர்கள் !]]></title><link>https://tamil.abplive.com/spiritual/madurai-chithirai-festival-youth-excited-by-showing-dhoni-and-ajith-film-in-the-vaigai-river-tnn-258073</link><comments>https://tamil.abplive.com/spiritual/madurai-chithirai-festival-youth-excited-by-showing-dhoni-and-ajith-film-in-the-vaigai-river-tnn-258073#respond</comments><pubDate>Fri, 1 May 2026 15:58:18 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ ஆன்மிகம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/spiritual/madurai-chithirai-festival-youth-excited-by-showing-dhoni-and-ajith-film-in-the-vaigai-river-tnn-258073</guid><description><![CDATA[&lt;p&gt;மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் தடுமாறி கீழே விழுந்த பக்தர்கள் மூன்று பேர் மயக்கம் பரபரப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நல்வாய்ப்பாக குழந்தைகள் கூட்டநெரிசலில் இருந்து தப்பினர்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கள்ளழகர் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வாக கள்ளழகர் என்று காலை 5:47 மணிக்கு வைகை ஆற்றில் பச்சை பட்டுடுத்தி&amp;nbsp; எழுந்தருளினார். முன்னதாக கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் பகுதியான ஆழ்வார்புரம் வைகை ஆற்றுப்பகுதிக்கு முக்கிய பிரமுகர்கள் மற்றும் அனுமதி அட்டையுடன் வந்த பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மூன்று முறை தொடர்ச்சியாக பிரதான வாசல் வழியாக அனுமதி அட்டைப்பெற்ற பக்தர்களை அனுப்பிய போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் திடிரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது காவல்துறையினர் தடுத்ததால் திடீரென பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி கீழே விழுந்தனர். அப்போது ஒருவருக்கொருவர் மிதித்ததில் இரண்டு பெண்கள் மற்றும்&amp;nbsp; மூதாட்டி என மூன்று பேர் காயமடைந்தனர். நல்வாய்ப்பாக குழந்தைகள் கூட்டநெரிசலில் இருந்து தப்பினர்.&lt;/p&gt;
&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div&gt;&lt;strong&gt;அனுமதி அட்டை உள்ள நபர்களை முறையாக அனுமதிக்க வேண்டுமென அறிவுரை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மூச்சு திணறல் ஏற்பட்ட மூதாட்டி பத்திரமாக மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மதுரையில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் பகுதியில் அனுமதி அட்டை பெற்றவர்களை அனுமதிப்பதில் பல்வேறு குளறுபடிகள் நீடித்ததால் அதிகளவிற்கான நபர்கள் ஆழ்வார்புரம் வைகை ஆற்று பகுதியில் கூடினர். இதனால் தொடர்ந்து அந்த பகுதி நெருக்கடியான சூழல் உருவானது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் நேரடியாக சென்று அனுமதி அட்டை உள்ள நபர்களை முறையாக அனுமதிக்க வேண்டுமென காவல்துறையினரிடம் அறிவுறுத்தினார்.&lt;/div&gt;
&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div&gt;&lt;strong&gt; மகேந்திர சிங் தோனி மற்றும் அஜித் புகைப்படங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் நெரிசலின்றி பக்தர்களை அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்ட நிலையில் பின்னர் பாதுகாப்புடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் பகுதியை சுற்றிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடிய நிலையில் அங்கு நின்று கொண்டிருந்த இளைஞர்கள் தங்களது கைகளில் மகேந்திர சிங் தோனி மற்றும் அஜித் புகைப்படங்களை வைத்தவாறு முழக்கங்களை எழுப்பினர். இதனிடையே பல்லாயிரக்கணக்கானோர் கூடிய கூட்டத்தின் நடுவே சிறுவன் ஒருவரை இளைஞர்கள் சூழ்ந்து தாக்குவது போன்ற நிகழ்வு நடைபெற்றது சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது. இதனைப் பார்த்த காவல்துறையினர் அங்கு சென்று அவர் சிறு தடியடி நடத்தி கலைய செய்தனர்.&lt;/div&gt;
&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/01/06df35596b58d477137502e792e232781777631276940184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[ராமநாதபுரத்தில் 1000 ஆண்டு பழமையான மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு !]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/ramanathapuram-1000-year-old-mahavira-sculpture-discovered-in-melathuval-tnn-258068</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/ramanathapuram-1000-year-old-mahavira-sculpture-discovered-in-melathuval-tnn-258068#respond</comments><pubDate>Fri, 1 May 2026 13:49:15 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/ramanathapuram-1000-year-old-mahavira-sculpture-discovered-in-melathuval-tnn-258068</guid><description><![CDATA[&lt;p&gt;ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே மேலத்தூவலில் 1000 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;பழமையான சமணத் தீர்த்தங்கரர் &lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;முதுகுளத்தூர் அருகே மேலத்தூவலில் ஒரு பழமையான சமணத் தீர்த்தங்கரர் இருப்பதாக வேல்முருகன் என்ற போலீஸ்காரர் கொடுத்த தகவலை அடுத்து சென்னையில் இருக்கும் அகிம்சை நடைக் குழுவைச் சேர்ந்த தமிழ்ச் சமணர்கள் அச்சிற்பத்தை உள்ளூரைச் சேர்ந்த கருப்பணன் மற்றும் ஊர் மக்கள்&amp;nbsp; உதவியுடன் எளிய அளவிலான ஒரு பள்ளிக் கட்டி பாதுகாக்க ஏற்பாடு செய்தனர். இதை நேரில் ஆய்வு செய்த ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு இதுபற்றிக் கூறியதாவது,&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;சமண மதம் பரவி இருந்த தடயங்கள்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;ராமநாதபுர மாவட்டத்தில் கிழக்கு கடற்கரைப் பெருவழியில் புல்லக்கடம்பன், புல்லூர், மேல அரும்பூர், புல்லுக்குடி, புல்லங்குடி, கோரைக்குட்டம், பொக்கனாரேந்தல், மேலக்கிடாரம், மேலச்செல்வனூர், மாறந்தை ஆகிய ஊர்களிலும், திருப்புல்லாணியில் இருந்து மதுரை, கேரளா செல்லும் பெருவழியில் கீழச்சீத்தை, கீழச்சாக்குளம், பசும்பொன், கமுதி ஆகிய ஊர்களிலும், ராமநாதபுரம் மதுரை பெருவழியில் மஞ்சூர், கலையூர், அருங்குளம், சூடியூர் ஆகிய ஊர்களிலும், தொண்டியிலிருந்து ஆனந்தூர்&amp;nbsp; வழியாக மதுரை செல்லும் பெருவழியிலும் சமண மதம் பரவி இருந்த தடயங்களும், தீர்த்தங்கரர் சிற்பங்களும் கிடைத்துள்ளன. இம்மாவட்டப் பெருவழிகள் அடுத்த மாவட்டங்களில் தொடரும்போது அப்பகுதியிலும் சமணத்தடயங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;மகாவீரர் காட்சியளிக்கிறார்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மேலத்தூவலில் 3 அடி உயரம், 2 அடி அகலம் உள்ள கருங்கல் சிற்பத்தில் தாமரைப்பீடத்தின் மேல் மகரத் தண்டுள்ள சிம்மாசனத்தில் அர்த்தபரியங்க ஆசனத்தில் அசோக மரத்தின் கீழ் அமர்ந்தநிலையில் மகாவீரர் காட்சியளிக்கிறார். அவர் தலையின் மேல் முக்குடை அமைப்பும், அவருக்குப் பின்புறம் பிரபாவளி எனும் ஒளிவட்டமும் உள்ளன. இரு சாமரதாரிகள் அவரின் இருபுறமும் உள்ளனர். முக்குடை சமண சமயச் சின்னம் ஆகும். இதன் காலம் கி.பி.11-ம் நூற்றாண்டாகக் கருதலாம்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள் &lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;சமணப்பள்ளிகள் பெரும்பாலும் சமண வணிகர்கள் வணிகப் பெருவழி, சிறுவழிகளில் தங்கியிருந்து வணிகம் செய்த இடங்களில் அமைக்கப்பட்டதாகவே உள்ளன. பல இடங்களில் தீர்த்தங்கரர் சிற்பத்தை மட்டும் வைத்து வழிபடும் எளிமையான பள்ளிகள் தான் இருந்துள்ளன. அத்தகைய ஒரு சமணப்பள்ளி இவ்வூரில் இருந்துள்ளது. இவ்வூரில் உள்ள திடலில் இரும்புக் காலத்தைச் சேர்ந்த வழுவழுப்பான கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள் 20 ஏக்கர் பரப்பளவில் சிதறிக் கிடக்கின்றன. சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இரும்புக் காலம் முதல் இவ்வூர் மக்கள் குடியிருப்பாக இருந்துள்ளதற்கு இது ஆதாரமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அங்கு நடந்த கும்பாபிஷேக விழாவில் மண்ணில் பாதியளவு புதைந்த நிலையில் இருந்த மகாவீரர் சிற்பத்துக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர்.&amp;nbsp; அகிம்சை நடைத் தலைவர் பேராசிரியர் கனக அஜித தாஸ், சிறுபான்மை ஆணைய உறுப்பினர் பொன் ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட அகிம்சை நடை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.&lt;/div&gt;
&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/01/19e9a3891cad26eca60d5db302e4f8c21777623518019184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[கள்ளழகரை குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வு வெகுவிமர்சையாக நடைபெற்றது !]]></title><link>https://tamil.abplive.com/spiritual/madurai-theerthavari-event-to-cool-down-the-kallazhakas-was-held-with-much-criticism-tnn-258061</link><comments>https://tamil.abplive.com/spiritual/madurai-theerthavari-event-to-cool-down-the-kallazhakas-was-held-with-much-criticism-tnn-258061#respond</comments><pubDate>Fri, 1 May 2026 13:09:26 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ ஆன்மிகம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/spiritual/madurai-theerthavari-event-to-cool-down-the-kallazhakas-was-held-with-much-criticism-tnn-258061</guid><description><![CDATA[&lt;p&gt;மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா - கள்ளழகரை வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து கள்ளழகரை குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வு வெகுவிமர்சையாக நடைபெற்றது - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சித்திரைத் திருவிழா 2026&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை நோக்கிவந்த கள்ளழகர் இன்று காலை வைகையாற்றில் தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி லட்சக்கணக்கான பக்தர்கள். புடை சூழ வைகையாற்றில் எழுந்தருளினார். இதனையடுத்து ஆழ்வார்புரம் மற்றும் வைகை வடகரை ஆகிய பகுதியில் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளினார். இதை தொடர்ந்து மதிச்சயம் பகுதியில் உள்ள ராமராயர் மண்டபத்தில் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் மீது அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திகடனாக தோப்பரை பைகளை பயன்படுத்தி தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;ஆரவாரத்துடன் உற்சாகமாக தீர்த்தவாரி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முன்னதாக கள்ளழகர் முன்பாக வரும் கள்ளழகர் கோவில் மற்றும் விசிறிகளுக்கு பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து உற்சாகமாக வரவேற்றனர. தீர்த்தவாரியின்போது கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி கோஷத்துடன் தண்ணீரை பீய்ச்சி அடித்து ஆடிபாடி ஆரவாரத்துடன் உற்சாகமாக தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;பாரம்பரிய முறைப்படி ஆட்டுத்தோல் தோப்பரையை பயன்படுத்தியவருக்கு மட்டுமே அனுமதி&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;முன்னதாக&amp;nbsp; பிரஷர் பம்புகளை பயன்படுத்தி சுவாமி மீது தண்ணீர் பீய்ச்சுவதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் மதிச்சியம் ராமராயர் மண்டபத்திற்கு பிரஷர் பம்புகளுடன் வந்த பக்தர்கள் வெளியேற்றப்பட்டனர். பாரம்பரிய முறைப்படி ஆட்டுத்தோல் தோப்பரையை பயன்படுத்தியவர் மட்டுமே தண்ணீரை பீய்ச்சி அடித்து தீர்த்தவாரி செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/01/12e8a17ba3c4cff6dd5f7c5b46449a4d1777621128866184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்... மனமுருக கள்ளழகரை தரிசித்த பக்தர்கள் !]]></title><link>https://tamil.abplive.com/spiritual/kallazhagar-dressed-in-green-silk-rose-from-the-vaigai-river-devotees-were-filled-with-joy-tnn-258030</link><comments>https://tamil.abplive.com/spiritual/kallazhagar-dressed-in-green-silk-rose-from-the-vaigai-river-devotees-were-filled-with-joy-tnn-258030#respond</comments><pubDate>Fri, 1 May 2026 08:10:20 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ ஆன்மிகம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/spiritual/kallazhagar-dressed-in-green-silk-rose-from-the-vaigai-river-devotees-were-filled-with-joy-tnn-258030</guid><description><![CDATA[&lt;p&gt;லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் கோவிந்தா பக்தி கோஷம் விண்ணதிர பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;சித்திரைத் திருவிழா 2026&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் வழங்கும் பொருட்டு சுந்தரராஜபெருமாள் கள்ளழகர் வேடமிட்டு&amp;nbsp; வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. இந்தாண்டிற்கான கள்ளழகர் சித்திரைத் திருவிழா கடந்த 27 ஆம் தேதி தொடங்கிய நிலையில் 3வது நாள் நிகழ்வாக நேற்றைய முன் தினம் மதுரை மாவட்டம் அழகர்மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் கோயிலில் இருந்து சுந்தராஜபெருமாள் தங்கப்பல்லக்கில் கள்ளழகர் வேடமிட்டு மதுரை நோக்கி புறப்பட்டாகினார். பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயில் முன்பு கண்டாங்கி பட்டுடுத்தி கள்ளழகர் வேடமிட்டு தங்க பல்லக்கில் மதுரை நோக்கி வந்த புறப்பாடாகி பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளினார்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;ஆயிரம்பொன் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;நேற்று அதிகாலை மதுரை நகருக்குள் வந்த கள்ளழகரை வரவேற்கும் வகையில் மூன்றுமாவடி எனுமிடத்தில் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.&amp;nbsp;அதனைத்தொடர்ந்து புதூர், ஆத்திகுளம், சொக்கிகுளம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் சர்க்கரை தீபத்தை ஏந்தி கள்ளழகரை வரவேற்றனர். தொடர்ந்து நள்ளிரவு&amp;nbsp; தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோயிலில் திருமஞ்சணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிவித்துகொண்டு வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனையடுத்து அதிகாலை 3 மணியளவில் மதுரை தல்லாகுளம் பகுதியிலுள்ள கருப்பணசாமி கோயில் முன்பாகவுள்ள ஆயிரம்பொன் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;ஆடிப்பாடியும் உற்சாகமாக வரவேற்றனர்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;இதை தொடர்ந்து வைகையாற்றை நோக்கி புறப்பட்ட கள்ளழகரை தமுக்கம் பகுதி தொடங்கி கோரிப்பாளையம், ஆழ்வார்புரம் பகுதிகளில் வரவேற்கும் வகையில் கள்ளழகர் மற்றும் கருப்பணசாமி வேடமிட்ட பக்தர்கள் தண்ணீர் பீச்சியடித்தும், ஆடிப்பாடியும் உற்சாகமாக வரவேற்றனர்.&amp;nbsp;வைகையாற்று பகுதிக்குள் கள்ளழகர் தங்க குதிரையில் வருகை தரும்போது&amp;nbsp; வெள்ளிக்குதிரையில் வீரராகவ பெருமாள் எழுந்தருளி கள்ளழகரை&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;வரவேற்றார்.&amp;nbsp;வைகையாற்றில் எழுந்தருள வந்த கள்ளழகரை ராமர் பாதம் தாங்கிகள் முன்னே வர சக்கரை தீபம் ஏற்றி பெண்கள் வரவேற்றனர்.&amp;nbsp;அப்போது வைகை ஆற்றில் கூடியிருந்த லட்சக்கணக்காண பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், சர்க்கரைதீபம் ஏந்தியும் கோவிந்தா, கோவிந்தா என விண்ணதிரும் வகையில் பக்தி கோஷங்களில் மத்தியில் பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் தாமரை இலைகள், மலர்களால் நிரப்பபட்டிருந்த வைகையாற்று பகுதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத்தொடர்ந்து தங்க குதிரையில் கள்ளழகர் மூன்று முறை வரை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.&amp;nbsp;தொடர்ந்து ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள இந்து அறநிலையத்துறை மற்றும் வீரராகவப்பெருமாள்&amp;nbsp; மண்டகப்படிகளில்&amp;nbsp; கள்ளழகர் மற்றும் வீர ராகவ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள்&amp;nbsp;செய்யப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டது.&amp;nbsp; ஒரு மணி நேரத்திற்கு மேலாக சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. இதனையடுத்து இராமராயர் மண்டகப்படியில் நடைபெறும் தீர்த்தவாரி எனப்படும்&amp;nbsp;நிகழ்ச்சிக்காக கள்ளழகர் புறப்பட்டார்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;2 டன் வண்ண மலர்களால் மண்டகப்படி அலங்கரிக்கப்பட்டிருந்தது&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;முன்னதாக வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சிக்காக 2டன் வண்ண மலர்களால் மண்டகப்படி&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் மேம்பாலம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு முதல் அதிகாலை வரை மின்னொளியில் ஜொலித்தது. கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியையொட்டி இரும்புவேலிகள் அமைக்கப்பட்டு மாநகர காவல். ஆணையர் அபிஷேக் தீக்&amp;zwnj;ஷித் தலைமையில் பலத்த காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.&amp;nbsp;கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும்&amp;nbsp;நிகழ்ச்சியை காண்பதற்காக மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்ட, மாநிலங்களை சேர்ந்த பல லட்சக்கணக்கான பக்தர்களால் தல்லாகுளம் முதல் வைகை ஆறு வரை மக்கள் வெள்ளதால் நிரம்பி&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டது.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;நேர்த்திக்கடன்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;வைகையாறு முழுவதும் பக்தர்களின் வெள்ளம்போல பக்தர்களின் தலையாக காட்சியளித்தது. கள்ளழகர் எழுந்தருளியபோது வைகையாற்று நீரை தெளித்து உற்சாகத்துடன் நடனமாடினர்.&amp;nbsp;வைகையாற்றை சுற்றிலும், தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பிற்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர். அவசரகால மருத்துவ உதவிக்காக மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வைகையாற்றின் கரையோரங்கில் அமரந்து மொட்டையடித்து தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/01/72ba6660bd0a1d9e254e7b0f13d34df11777603192410184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[அதிகாலையில் ஆற்றில் இறங்கும் கள்ளழகர்.. வழிநெடுக சர்க்கரை தீபம் ஏந்தி மக்கள் வரவேற்பு !]]></title><link>https://tamil.abplive.com/spiritual/madurai-river-early-in-the-morning-welcomed-by-the-people-carrying-a-sugar-lamp-to-lead-the-way-tnn-258024</link><comments>https://tamil.abplive.com/spiritual/madurai-river-early-in-the-morning-welcomed-by-the-people-carrying-a-sugar-lamp-to-lead-the-way-tnn-258024#respond</comments><pubDate>Fri, 1 May 2026 00:04:19 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ ஆன்மிகம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/spiritual/madurai-river-early-in-the-morning-welcomed-by-the-people-carrying-a-sugar-lamp-to-lead-the-way-tnn-258024</guid><description><![CDATA[&lt;div&gt;கள்ளழகர் சித்திரைத் திருவிழா - மதுரை மாநகர் ரிசர்வ்லைன் தொடங்கி தல்லாகுளம் வரையிலான மண்டகப்படிகளில் கண்டாங்கி பட்டுடுத்தி தங்க பல்லக்கில் எதிர்சேவையாற்றிவரும் கள்ளழகர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி முழக்கத்தோடு சர்க்கரை தீபமேந்தி வரவேற்கும் பக்தர்கள்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என புகழ்ந்து அழைக்கப்படுவது. 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றானதுமான மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலையடிவாரத்தில் உள்ள கள்ளழகர் திருக்கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 27 ஆம் தேதி தொடங்கியது. நேற்று மாலை சுந்தராஜபெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக தங்கப்பல்லக்கில் அழகர்மலையிலிருந்து நேற்று மாலை மதுரையை நோக்கி புறப்பாடாகினார். பின்னர் அப்பன்திருப்பதி, கள்ளந்திரி, கன்னனேந்தல் வழியாக வந்த கள்ளழகர் இன்று அதிகாலை மதுரை மாநகர் பகுதியான மூன்றுமாவடி பகுதிக்கு&amp;nbsp; கண்டாங்கி பட்டுடுத்தி தங்கப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகருக்கு பிரமாண்டமாக எதிர்சேவை நடைபெற்றது.&lt;/div&gt;
&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div&gt;&lt;strong&gt;மண்டகப்படிகளில் எதிர்சேவையாற்றி எழுந்தருளிவருகிறார்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் புதூர், டி.ஆர்.ஓ காலனி வழியாக ரிசர்வ் லைன் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு வந்தடைந்த கள்ளழகர், மாலை 4 மணி முதல் ரிசர்வ்லைன் தொடங்கி அவுட்போஸ்ட் வழியாக தல்லாகுளம் பகுதியில் உள்ள ஏராளமான மண்டகப்படிகளில் எதிர்சேவையாற்றி எழுந்தருளிவருகிறார். எதிர்சேவை நிகழ்வை தொடர்ந்து இன்று இரவு தல்லாகுளம் அம்பலகார மண்டகப்படியில் எழுந்தருளும் கள்ளழகர் நள்ளிரவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோயிலில் திருமஞ்சனமாகி ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை ஏற்று வெட்டிவேர் சப்பரத்தில் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பார். பின்னர் இரவு 3 மணியளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோவில் முன்பாக ஆயிரம்பொன் சப்பரத்தில் காட்சியளிப்பார். அதனை&amp;nbsp; தொடர்ந்து தங்க குதிரை வாகனத்தில் கோரிப்பாளையம் ஆழ்வார்புரம் வழியாக புறப்பாடாகி நாளை அதிகாலை 5.35 மணி முதல் 5.55 மணிக்குள் வெள்ளி குதிரை வாகனத்தில் வீர ராகவ பெருமாள் வரவேற்க கள்ளழகர் வைகையாற்றில் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் எழுந்தருளவுள்ளார். இதை தொடர்ந்து&amp;nbsp; ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. கள்ளழகர் எதிர்சேவையின் போது மதுரை மாநகர் பகுதியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சர்க்கரை தீபம் ஏந்தியபடி கோவிந்தா கோவிந்தா என பக்திகோஷங்கள் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.&lt;/div&gt;
&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/05/4624c324c73c5617b886838155e711041683265579319184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[மதுரை கோட்ட ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. மின்சார ரயில் என்ஜின்களை இயக்க சிறப்பு ஏற்பாடு !]]></title><link>https://tamil.abplive.com/news/madurai/madurai-kota-train-passengers-special-arrangements-to-operate-electric-train-engines-tnn-258022</link><comments>https://tamil.abplive.com/news/madurai/madurai-kota-train-passengers-special-arrangements-to-operate-electric-train-engines-tnn-258022#respond</comments><pubDate>Thu, 30 Apr 2026 22:35:03 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ மதுரை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/madurai/madurai-kota-train-passengers-special-arrangements-to-operate-electric-train-engines-tnn-258022</guid><description><![CDATA[&lt;p&gt;ரயில் பாதை அருகே உள்ள மரங்கள் பற்றிய தகவல்களை அருகிலுள்ள ரயில் நிலைய அதிகாரி அல்லது ரயில்வே கேட் பாதுகாவலரிடம் தெரிவிக்கலாம்.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;ரயில் பாதைகள் 100 சதவீதம் மின்மயமாக்கப்பட்டுள்ளன&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மதுரை கோட்டத்தில் ரயில் பாதைகள் 100 சதவீதம் மின்மயமாக்கப்பட்டுள்ளன. அனைத்து ரயில்களும் மின்சார என்ஜின்கள் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன. மின்சார ரயில்களை தங்கு தடையின்றி இயக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ரயில் பாதை மின் கம்பி வடங்களை பராமரிக்க மற்றும் திடீர் பழுதுகளை சரி செய்ய ரயில் பாதையில் இயங்கும் வகையிலான 18 சிறப்பு ரயில் பெட்டிகள் தயார் நிலையில் உள்ளன.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;ரயில் பெட்டி சேவை துவக்கி வைக்கப்பட்டது.&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;திடீர் பழுதுகளை சரி செய்யும் வகையில் இவற்றை மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, பழனி, காரைக்குடி, ராஜபாளையம், ராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் தனி ரயில் பாதை அமைத்து தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 28) அன்று நாசரேத் ரயில் நிலையத்தில் தனி ரயில் பாதையுடன் மின்சார பராமரிப்பு ரயில் பெட்டி சேவை துவக்கி வைக்கப்பட்டது.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;ரயில்வே கேட் பாதுகாவலரிடம் தெரிவிக்கலாம்.&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மேலும் மானாமதுரை, தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, புனலூர் ஆகிய ரயில் நிலையம் இந்த வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த&amp;nbsp; பராமரிப்பு பெட்டியில் சிறிய பணிமனை போன்ற அமைப்புடன் ஜெனரேட்டர், மின்கம்பி வடம் அருகே சென்று பழுது பார்க்க தானாக உயரும் லிப்ட் அமைப்புடன் கூடிய சதுரப் பெட்டி உட்பட தேவையான கருவிகள் அனைத்தும் உள்ளன. ரயில் பாதைக்கு அருகே இரண்டு மீட்டர் தூரத்தில் வளர்ந்துள்ள மரங்களால் ரயில் மின்சார கம்பிவடங்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் இதுபோல ரயில் பாதை அருகே உள்ள மரங்கள் பற்றிய தகவல்களை அருகிலுள்ள ரயில் நிலைய அதிகாரி அல்லது ரயில்வே கேட் பாதுகாவலரிடம் தெரிவிக்கலாம்.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/30/d9240c672c19192928d89cb7cced1a011777568676114184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[ரஜினி கோயிலில் ஆட்டோக்காரர் கெட்டப்பில் 'பாட்ஷா' கட்-அவுட்... 16 வகை அபிஷேகத்துடன்  வழிபாடு !]]></title><link>https://tamil.abplive.com/news/madurai/baadshah-cut-out-on-auto-driver-ketupat-at-rajinikanth-temple-worship-with-16-types-abhishekam-tnn-258019</link><comments>https://tamil.abplive.com/news/madurai/baadshah-cut-out-on-auto-driver-ketupat-at-rajinikanth-temple-worship-with-16-types-abhishekam-tnn-258019#respond</comments><pubDate>Thu, 30 Apr 2026 22:00:35 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ மதுரை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/madurai/baadshah-cut-out-on-auto-driver-ketupat-at-rajinikanth-temple-worship-with-16-types-abhishekam-tnn-258019</guid><description><![CDATA[&lt;p&gt;உழைப்பாளர் தின ஸ்பெஷல் - திருமங்கலம் ரஜினி கோயிலில் ஆட்டோக்காரர் கெட்டப்பில் 'பாட்ஷா' கட்-அவுட்... 16 வகை அபிஷேகத்துடன்&amp;nbsp; வழிபாடு.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;ரஜினி கோயிலில் வழிபாடு&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;​&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஒரு தீவிர ரசிகரான முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக் என்பவர் கருங்கற்களால் ஆன இரண்டு சிலைகளை பிரதிஷ்டை செய்து 'ரஜினி கோயில்' கட்டி வழிபாடு நடத்தி வருகிறார். இங்கு தினந்தோறும் காலை, மாலை என இரு வேளைகளிலும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், மே தினத்தை (உழைப்பாளர் தினம்) உழைப்பின் உன்னதத்தை போற்றும் வகையில் ஒரு வித்யாசமான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரஜினிகாந்த் நடித்த&amp;nbsp; 'பாட்ஷா' படத்தில் அவர் ஆட்டோ ஓட்டுநராக வரும் கதாபாத்திரத்தை நினைவுபடுத்தும் வகையில், ஆட்டோ அருகில் ரஜினி நிற்பது போன்ற கட்-அவுட் கோயிலில் வைக்கப்பட்டிருந்தது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;இனிப்புகள் வழங்கப்பட்டன.&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;அந்த கட்டவுட்டிற்கு ​மே தின விழாவின் ஒரு பகுதியாக, ​பால், பன்னீர், தயிர், இளநீர்,​ சந்தனம், தேன் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.​ அபிஷேகத்தை தொடர்ந்து, உழைப்பாளர்கள் அனைவரும் வாழ்வில் எல்லா வளமும் பெற வேண்டும் என வேண்டி தீபாதாரணை காண்பிக்கப்பட்டது. உழைப்பாளர் தினத்தின் அடையாளமாக, ரஜினி சிலைக்கு முன்பாக அவரது 'கூலி' படத்தின் புகைப்படத்தோடு, தொழிலாளர்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய கட்டிங் பிளேடு, திருப்புலி, நட்டு, போல்டு உள்ளிட்ட கருவிகளைக் கொண்டு &quot;HAPPY LABOUR'S DAY&quot; என்ற எழுத்து வடிவத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தொடர்ந்து தொழிலாளர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;HAPPY LABOUR'S DAY&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;​ இதனை தொடர்ந்து ரஜினி ரசிகர் கார்த்திக் பேசியபோது..,&quot; தொடர்ந்து நாங்கள் அவதான்டாக மே தினத்தை குலதெய்வ ரஜினி கோயிலில் கொண்டாடுவதாகவும், உழைப்பாளர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக, அவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஸ்பேனர், போல்ட் மற்றும் நட் போன்ற இரும்பு கருவிகளைக் கொண்டே &quot;HAPPY LABOUR'S DAY&quot; என்ற எழுத்து வடிவிலான அலங்காரத்தை இந்த ஆண்டு கோவிலில் அமைத்துள்ளதாகவும்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&quot;நாட்டின் முன்னேற்றத்திற்கு முதுகெலும்பாக இருக்கும் தொழிலாளர்கள் அனைவரும் வாழ்வில் மேலோங்க வேண்டும் என்பதே எங்கள் பிரார்த்தனை&quot; என்று கூறிய கார்த்திக், தன் குடும்பத்தினருடன் இணைந்து அருள்மிகு ஸ்ரீ ரஜினி கோவில் சார்பாக அனைத்து உழைப்பாளர்களுக்கும் தனது&amp;nbsp; வாழ்த்துகளைத் தெரிவித்தார்.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/30/63b07de484555c1029475114b09334d21777565958762184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வுக்கான முன்னேற்பாட்டு பணிகள் தீவிரம் !]]></title><link>https://tamil.abplive.com/spiritual/madurai-preparations-are-in-full-swing-for-the-event-where-kallazhagar-will-rise-in-the-vaigai-river-tnn-257988</link><comments>https://tamil.abplive.com/spiritual/madurai-preparations-are-in-full-swing-for-the-event-where-kallazhagar-will-rise-in-the-vaigai-river-tnn-257988#respond</comments><pubDate>Thu, 30 Apr 2026 14:25:43 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ ஆன்மிகம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/spiritual/madurai-preparations-are-in-full-swing-for-the-event-where-kallazhagar-will-rise-in-the-vaigai-river-tnn-257988</guid><description><![CDATA[&lt;p&gt;கள்ளழகர் சித்திரைத் திருவிழா கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வுக்கான முன்னேற்பாட்டு பணிகள் தீவிரம்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;சித்திரைத் திருவிழா 2026&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கள்ளழகர் சித்திரைத் திருவிழாவின் சிகரநிகழ்வாக நாளை அதிகாலை கள்ளழகர் ஆழ்வார்புரம் பகுதியில் உள்ள வைகையாற்று பகுதியில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறும் பகுதியில் முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமடைந்துள்ளது. கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் பகுதியில் நான்கு புறங்களிலும் மூன்றடுக்கு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. வைகையாற்று ஏவி மேம்பாலத்தின் கீழ் பக்தர்கள் வருவதை தடுக்கும் வகையில் தகர தகடுகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;நெற்கதிர்களாலும் அலங்கரிக்கப்படுகிறது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கள்ளழகர் எழுந்தருளும் பகுதியில் உள்ள லாலா சத்திரம் மண்டகப்படி மற்றும் இந்து சமய அறநிலைத்துறை மண்டகப்படிகளை அலங்கரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. இதற்காக அழகர்கோவில் பகுதியில் இருந்து நெற்கதிர்களும், பெருமாளுக்கு உகந்த விருச்சி பூக்கள் ஸ்ரீரங்கத்தில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் மதுரை மல்லிகை, செண்பகம், மனோரஞ்சிதம், மரிக்கொழுந்து, பெங்களூரு ரோஸ், ஜர்புரா, தாஜ்மஹால் ரோஜ், கிஷாந்தம், சாங்க் ஆப் இன்டியா மற்றும் தாமரைப்பூ, துளசி, அருகம்புல் உள்ளிட்ட பூக்களை பயன்படுத்தி அலங்கரிக்கப்படவுள்ளது. செல்வம் செழிக்க வேண்டி செல்வமாலை ( காசு மாலையும், விவசாயம் செழிக்க கரும்பு, நெற்கதிர்களாலும் அலங்கரிக்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;காலணிகளை வீசினால் கைது நடவடிக்கை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளும் பகுதியில் வர்ணம் பூசப்பட்டுள்ளதோடு, லாரிகள் மூலமாக தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. வர்ணம் பூசப்பட்டுள்ளது. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் பகுதியில் வரக்கூடிய பக்தர்கள் வெடிகுண்டு தடுப்பு பிரிவினரின் சோதனைக்கு பின்பாக அனுமதிக்கப்பட உள்ளனர். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வுக்காக 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் வைகை ஆற்றிற்கு சிறிதளவு தண்ணீர் வந்தடைந்துள்ளது. கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வின் போது காலணிகளை வீசினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வின் போது பிரஷர் பம்புகளை பயன்படுத்தினால் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் உயர்நீதிமன்ற உத்தரவை மேற்கோள்காட்டி&amp;nbsp; காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;காவல்துறையினர் தொடர் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மதுரை தல்லாகுளம், கோரிப்பாளையம் ஆழ்வார்புரம், வைகையாற்று பகுதி என வழிநெடுகிலும் பொதுமக்கள், பக்தர்கள் நடமாட்டத்தை கண்காணிக்க மாநகர காவல் துறை மூலமாக 500க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏ ஐ உதவியுடன் முன் வழக்குகள் உள்ள குற்றவாளிகளை கண்டறியும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வுகள் முழுவதிலும் 300க்கும் மேற்பட்ட சீருடை அணியாத காவல்துறையினர் தொடர் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் பகுதிகளில் வைகையாற்றில் நெல்பேட்டை மற்றும் ஆழ்வார்புரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகள் வழியாக மட்டும் பக்தர்கள் ஆற்றிற்குள் இறங்கி கள்ளழகரை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் நடமாட்டம் ட்ரோன் கேமரா மூலமாக தொடர் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர். முக்கிய பிரமுகர்கள் வருகைக்கான தனி வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பந்தல்குடி கால்வாய் வழியாக கழிவுநீர் கலந்த தண்ணீர் வைகை ஆற்றுக்குள் ஓடுவதால் துர்நாற்றம் வீசி வருவதாக பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளி விடுமுறை, கோடை விடுமுறை, உள்ளூர் விடுமுறை காரணமாக 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் 3000 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். நாளை அதிகாலை 5.35 மணி தொடங்கி 5.55 மணிக்குள் கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளவுள்ளார். இதனிடையே கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுவதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தங்களது குழந்தைகளுக்கு மொட்டை அடித்துக் கொள்ளும் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.&lt;/p&gt;
&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/30/acb4c31fb3fac058edd6f913592a788b1777539297084184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[சமத்துவத்தின் அடையாளமாக ஜொலிக்கும் கள்ளழகர் சித்திரைத் திருவிழா !]]></title><link>https://tamil.abplive.com/spiritual/madurai-kallazhagara-chithirai-festival-shines-as-a-symbol-of-equality-tnn-257984</link><comments>https://tamil.abplive.com/spiritual/madurai-kallazhagara-chithirai-festival-shines-as-a-symbol-of-equality-tnn-257984#respond</comments><pubDate>Thu, 30 Apr 2026 13:57:16 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ ஆன்மிகம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/spiritual/madurai-kallazhagara-chithirai-festival-shines-as-a-symbol-of-equality-tnn-257984</guid><description><![CDATA[&lt;p&gt;பக்தர்கள் நிம்மதியா தரிசனம் பண்ணனும் அதுக்காக இரவெல்லாம் கண் முழிச்சு எல்லாம் ஏற்பாடு பண்ணுவோம் - இஸ்லாமிய தம்பதி பேட்டி.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;சித்திரைத் திருவிழா 2026&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக அழகர்மலை அடிவாரத்தில் உள்ள அழகர் கோயிலில் இருந்து சுந்தராஜபெருமாள் நேற்று கண்டாங்கி பட்டுடுத்தி கள்ளழகர் வேடத்தில் தங்க பல்லக்கில் மதுரையை நோக்கி புறப்பட்டார். இந்நிலையில் இன்று காலை மதுரை மூன்றுமாவடி பகுதியில் இருந்து கள்ளழகருக்கு எதிர்சேவை நிகழ்வானது நடைபெற்றது.&amp;nbsp; வழிநெடுகிலும் உள்ள மண்டகப்படிகளில் கள்ளழகர் தங்க பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்துவருகிறார். கோடை வெயிலின் தாக்கம் உள்ள நிலையில் கள்ளழகரை தரிசிக்க வரும் பக்தர்களுக்காக பல்வேறு அமைப்பினரும் தொண்டு நிறுவனங்களும் சாலையோரங்களில் நீர் மோர் பந்தல் அமைத்தும் அன்னதானம் வழங்கியும் வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;கள்ளழகர் எதிர் சேவை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் மதுரை கோ. புதூர் கற்பகவிநாயகர் காலனி பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய தம்பதியான காதர்பாய் - சுல்தான் பீவி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கள்ளழகர் எதிர் சேவையின் போது பக்தர்கள் நிழலில் நின்றபடி சாமி தரிசனம் செய்வதற்காகவும் கள்ளழகரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு இளைப்பாறுவதற்காகவும் பக்தர்களின் தாகத்தை தீர்ப்பதற்காக சாலையின் இருபுறங்களிலும் சாமியானா பந்தல் அமைத்தும், நீர்மோர் பந்தல் அமைத்தும் வருகின்றனர். தங்களது குடும்பத்துடன் இரவு முழுவதிலும் கண் விழித்து தங்களது சொந்த செலவில் கோ.புதூர் பகுதியில் சாமியானா பந்தல் அமைத்து கள்ளழகரின் பக்தர்கள் நிழலில் நின்று சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;நீர்மோர்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீர் மோர் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கி வருகின்றனர். மேலும் பக்தர்களுக்கு புளியோதரை உள்ளிட்ட உணவுகளையும் வழங்கினர். கள்ளழகர் சித்திரைத் திருவிழாவிற்கு வருகை தரும் அனைவரையும் வரவேற்கிறோம் என்ற பதாகைகளோடு மும்மதத்தைச் சார்ந்த கடவுள்களின் உருவப் படங்களை வைத்து நீர்மோர் பந்தல் அமைத்துள்ளனர். கள்ளழகர் எதிர்சேவை தொடங்கி மீண்டும் கோயிலுக்கு திரும்பும் வரையும் சாலையின் இருபுறங்களிலும் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இது குறித்து பேசிய இஸ்லாமிய தம்பதியினர்...&quot;&lt;/strong&gt;&amp;nbsp; எங்க மச்சான் அழகர் எங்கள பாக்க வர்றாரு சந்தோஷம் எல்லாரும் நிம்மதியா சாமி கும்பிட வேண்டும் என்பதற்காக சாமியானா பந்தல் அமைக்கிறோம். நீர் நாங்கள் வருசம்வருசம் கள்ளழகரை பார்க்கும் போது குழந்தை போல மாறி மகிழ்ச்சியாக இருப்போம். ஒவ்வொரு ஆண்டும் சொந்த செலவில் பக்தர்களுக்காக செய்து வருகிறோம். கடவுளுக்காக செய்வதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. கடவுளுக்கு செய்யும் போது தான் அனைத்து செல்வங்களும்&amp;nbsp; கிணற்றில் அள்ள அள்ள தான் நீர் ஊரும் என்ற வகையில் கடவுளுக்கு செய்வது ஈடு செய்ய இயலாதது கொடுக்க கொடுக்க வரும் என தெரிவித்தனர். மேலும் கள்ளழகர் எதிர்சேவையில் வரும் போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் ஆனால் மீண்டும் கோட்டை நோக்கி திரும்பும் போது கவலையாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து பக்தர்களுக்காக இந்த சேவையை செய்து வருகிறோம். பக்தர்கள் மனநிம்மதியோடு சாமி தரிசனம் செய்வது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி என தெரிவித்தனர். தாயாக பிள்ளையாக இருந்து இது போன்று செய்து வருகிறோம் என தெரிவித்தார்&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/30/8e5feee46175418f9efbf055bc8ff2e91777537582620184_original.jpeg" width="220"/></item></channel></rss>