திருமண விருந்தின்போது உற்றார் உறவினரோடு சேர்த்து தான் வளர்த்த தமிழ் என்ற ஜல்லிகட்டு காளைக்கு விருந்து வழங்கும் வகையில் மணமக்கள் தங்களது கைகளால் உணவுகளை வழங்கினர்.

 

மதுரையில் நடைபெறும் ஒவ்வொரு சம்பவங்களுக்கும் வித்தியாசமாக நடைபெறும். போஸ்டர் அடிப்பதில் ஆரம்பித்து, பொறிகடலை விற்பனை வரை வித்தியாசத்தை காட்டி அனைவரின் மனங்களை கவருவார்கள். அப்படியான மதுரை சம்பவம் ஒன்று நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 





 

மதுரை மேலமாசிவீதி பகுதியை சேர்ந்த மதன்பாபு இவருக்கு மதுரை கூடல்நகர் பகுதியை சேர்ந்த சுபத்ரா என்ற பெண்ணுடன் யா.ஒத்தக்கடையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணவிழாவிற்காக வரவேற்பு அளிக்கும் வகையில் வைக்கப்பட்ட பேனரில் யானை, ஜல்லிக்கட்டு காளைகள், நாய்கள் உள்ளிட்ட மணமகன் வளர்த்த விலங்குகளின் படங்கள் இடம்பெற்றிருந்தது. 



 

மேலும் திருமணத்திற்கு பின்பு நடைபெற்ற திருமண விருந்தின்போது உற்றார் உறவினரோடு சேர்த்து தான் வளர்த்த தமிழ் என்ற ஜல்லிக்கட்டு காளைக்கு விருந்து வழங்கும் வகையில் மணமக்கள் தங்களது கைகளால் உணவுகளை வழங்கினர். இதற்காக ஜல்லிக்கட்டு காளை திருமண மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டது. நாளுக்கு நாள் நாகரிகம் வளர்ந்துவரும் ஆன்ட்ராய்டு உலகத்தில் தான் வளர்க்கும் ஜீவராசியை தனது திருமணவிழாவிற்கு அழைத்துவந்து பெருமைப்படுத்திய மணமக்களின் செயலை கண்டு திருமணத்திற்கு வந்தவர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது. மதுரை என்றாலே எதிலும் வித்தியாசம் என்பதுபோல மணமக்கள் தாங்கள் வளர்த்த ஜல்லிக்கட்டு காளைக்கு மரியாதை தெரிவித்து உணவு வழங்கினர்.