தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறைசாலை பணியாளர் சங்கம் சார்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அம்சராஜ் கூறும்போது,"தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம் சார்பாக 25வது ஆண்டு தொடக்க விழா மற்றும் மாநில மாநாட்டை திண்டுக்கல் மாவட்டத்தில் நடத்துவதாக தீர்மானித்துள்ளோம். கடந்த 25 ஆண்டுகளாக நெடுஞ்சாலைத் துறையில் தனியார் மையமாக்கலை எதிர்த்து போராட்டத்தை நடத்திக் கொண்டே இருக்கிறோம். மக்களின் சேவை துறையாக நெடுஞ்சாலை துறை இருக்க வேண்டும் என்பதற்காக அதனை பாதுகாத்து 25 ஆண்டுகால போராட்டம் இன்றும் நீடித்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மாநில நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அமைப்போம் என சொல்லி இருக்கிறார்.





இது தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் போல் இருக்கும் என கூறியுள்ளார்.தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு கிலோ மீட்டர் சாலை அமைக்க 18 லட்சம் ரூபாய் செலவாகும் என்ற நிலையில் மத்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் ஒரு கிலோமீட்டர் சாலை அமைக்க 250 கோடி செலவு செய்ததாக அதில் முறைகேடு நடந்திருப்பதாக செய்தியை வெளியிட்டுள்ளார்.இந்த நிலையில் தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மாநில நெடுஞ்சாலை துறை ஆணையம் அமைப்பது என்பதும், ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் அவருக்கு நெருக்கமான நபரை நியமிப்பதாக செய்தி வெளியாகி கொண்டு இருக்கிறது.




நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அமைப்பதன் மூலமாக அது தனியார் பராமரிப்பதற்கு முறைகேடு நடப்பதற்கு வழிவகுக்கும்.அரசின் விதிகள் பெருமளவில் செலவாகும். 3500 நிரந்தர பணியிடம் ஒழிக்கப்படும். கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பறிக்கப்படும். இதுபோன்ற தனியார் மயமாக்கல் கொள்கை எதிர்த்த போராட்டத்தை தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கும் என நாங்கள் தீர்மானித்துள்ளோம்.




தற்போது திண்டுக்கல்லில் நடைபெற உள்ள மாநாட்டில் தனியார் மயமாக்கல் மூலம் ஏற்படும் பாதிப்புகள், சாலை பணியாளர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறோம்? வேலை இல்லாத இளைஞர்களின் வேலைவாய்ப்பு எவ்வாறு பறிபோகும் என்பதை கலை வடிவத்தில் கொண்டு செல்லக்கூடிய பிரச்சார இயக்கத்தை முன்னெடுக்கக்கூடிய வகையில் மக்களை சந்திக்க கூடிய நோக்கில் பயணிக்க போகிறோம். ஆகஸ்ட் 19ஆம் தேதி மாநில நெடுஞ்சாலை துறை ஆணையம் அமைக்கும் எதிர்த்து, நெடுஞ்சாலை சீரமைப்பு என்ற பெயரில் நிரந்தர பணியிடங்களை ஒழிக்கும் முடிவை எதிர்த்து சென்னை கிண்டியில் அமைந்துள்ள தலைமை பொறியாளர் அலுவலகத்தில் அனைவரும் ஒன்று கூடி அமைச்சரிடம் முறையீடு வைக்கின்ற இயக்கத்தை உருவாக்குவோம் என மாநில செயற்குழு தீர்மானித்துள்ளது.




தமிழக அரசு தனியார் மயமாக்கலை கைவிட வேண்டும். தங்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை கேட்டுக்கொள்கிறோம் அவ்வாறு நிறைவேற்றாத பட்சத்தில் தொடர்ந்து மக்களை திரட்டி போராட்டம் செய்யக்கூடிய நடவடிக்கைகளில் செல்ல வேண்டியிருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் தெரிவித்தார்.