கம்பம், போடி எல்லைகளில் கஞ்சா விற்பனை: அதிர்ச்சி! 35 கிலோ கஞ்சா பறிமுதல், பெண் உட்பட 3 பேர் கைது!
இரு மாநில எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள போடி, கம்பம் நகர் பகுதிகளில் இருபோக விவசாயத்திற்கு மட்டும் பிரபலமானது அல்ல, இங்கு கஞ்சா விற்பனையும் பிரபலமானது என கூறப்படுகிறது.

கேரள எல்லையை ஒட்டியுள்ள கம்பம் மெட்டு, குமுளி, கட்டப்பனை, வண்டிப்பெரியார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து கேரள மாநிலத்தவர்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக கம்பம் பகுதிக்கு அதிகம் வருவதுண்டு, அவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த வளர்ந்து வரும் நகரமாக கம்பம் திகழ்கிறது. அதேபோலத்தான் இரு மாநில எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள போடி நகர் பகுதியும், கம்பம் இருபோக விவசாயத்திற்கு மட்டும் பிரபலமானது அல்ல, இங்கு கஞ்சா விற்பனையும் பிரபலமானது என கூறப்படுகிறது.

கம்பம் பகுதியில் சட்டவிரோதமாக அதிக அளவில் கஞ்சா விற்பனை என்பது இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என புகார் எழுந்துள்ளது. தமிழக கேரள எல்லையை ஒட்டியுள்ள பகுதியாக இருப்பதால் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களும் குறிப்பாக இளைஞர்கள் அதிகம் கம்பத்திற்கு வந்து கஞ்சா வாங்கி கொண்டு செல்வது தற்போதும் தொடர்கதையாகி வருகிறது.இந்த நிலையில், ஒரிசாவில் இருந்து தமிழகத்திற்கு சொகுசு காரில் கஞ்சாவை விலைக்கு வாங்கி வந்து தேனி மாவட்டத்தில் விற்பனை செய்து வந்த பெண் உள்பட மூன்று பேர் கொண்ட கும்பலை குமுளி காவல் நிலைய போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 35 கிலோ கஞ்சா மற்றும் விற்பனை செய்து வைத்திருந்த ரூபாய் ஒரு லட்சம் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லையில் உள்ள குமுளி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக குமுளி காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலினை தொடர்ந்து காவல் ஆய்வாளர் சூரிய திலகரணி தலைமையில் லோயர் கேம்ப் சோதனைச் சாவடியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளனர்.அப்போது சொகுசு கார் ஒன்று சந்தேகப்படும்படியாக வருவதை பார்த்து வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த வாகனத்தில் 36 கிலோ கஞ்சாவை பெண் உள்பட 3 பேர் சாக்கு மூட்டையில் அடைத்து கொண்டு வந்தது தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அவர்கள் மூன்று பேர் கொண்ட அந்த கும்பலை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில்.

விசாரணையில் மதுரை முனிச்சாலை பகுதியைச் சேர்ந்த முனியசாமி பாலசுப்பிரமணியன் மற்றும் செல்வி ஆகிய மூன்று பேரும் கூட்டாக சேர்ந்து ஒரிசாவில் இருந்து கஞ்சாவை விலைக்கு வாங்கி வந்து தமிழகப் பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களிடமிருந்து 35 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் ஏற்கனவே கஞ்சா விற்பனை செய்து அவர்கள் வைத்திருந்த ரூபாய் ஒரு லட்சம் அவர்களது செல்போன் மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய சொகுசு காரினையும் பறிமுதல் செய்து அவர்களை சிறையில் அடைத்தனர். மேலும் கஞ்சா விற்பனையில் இவர்களுடன் யாரும் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தமிழக கேரள எல்லையில் உள்ள தேனி மாவட்டத்தில் அடிக்கடி கஞ்சா வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்ற சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது























