கரூர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் குற்றப் பிரிவு போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தவர் பத்மசீலன் வயது 52. இவர் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி மாலை பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், அவ்வழியாக சென்ற திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நாகை கோட்டை சவேரியார் பட்டி சேர்ந்த கூலித்தொழிலாளி தெய்வேந்திரன் என்கின்ற பாண்டி (வயது 64) பகுதியில் உள்ள ஒரு கடை முன் உறங்கிக் கொண்டிருந்தார். பத்மசீலன் தெய்வேந்திரனை எழுப்பி இங்கே உட்காரக் கூடாது என்று கூறியுள்ளார். 



 


இதில், ஆத்திரமடைந்த தெய்வேந்திரன் தான் மறைத்து வைத்திருந்த சேவல் சண்டையில் பயன்படுத்தும் கூர்மையான கத்தியால் போலீஸ் ஏட்டு பத்மசீலன் இடுப்பில் குத்தினார்.  இதில் படுகாயமடைந்த பத்மசீலனை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் பத்மசீலன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக வழக்கு கரூர் மகிளா விரைவு நடைபெற்று வந்தது. இதையடுத்து வழக்கு விசாரணை அனைத்தும் முடிந்த நிலையில் கரூர் மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமா பானு இதற்கான தீர்ப்பினை வழங்கினார்.


 


 




அந்த தீர்ப்பில் ஆபாசமாக திட்டியதற்காக மூன்று மாதகால சிறை தண்டனையும் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுப்பதற்காக இரண்டு ஆண்டுகால சிறை தண்டனையும் கொலை முயற்சி குற்றத்திற்காக பத்து ஆண்டு கால சிறை தண்டனை விதித்தனர்.




 


மேலும், அவதார தொகை கட்ட தவறினால் மேலும் 6 மாதகால சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் மதுபோதையில் குற்றத்தில் ஈடுபட்டதற்காக 3 மாத சிறை தண்டனையும் வழங்கி அதிரடி தீர்ப்பை அறிவித்தார். இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். ஏககாலத்தில் என தீர்ப்பு கூறப்பட்டு இருப்பதால் தெய்வேந்திரன் 10 ஆண்டுகால சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என தெரிவித்துள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண