Weather Update: வங்கக் கடலில் புயல் எச்சரிக்கை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மழை வெளுக்கப்போகுதா?
Weather Forecast Chengalpattu: "இன்று (25-10-2025) செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் மையம் தெரிவித்துள்ளது"

Today Rain Alert In Kanchipuram (25-10-2025): "வங்கக்கடையில் நாளை மறுநாள் மோந்தா புயல் உருவாக உள்ள நிலையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை முன்னறிவிப்பு குறித்து தெரிந்து கொள்வோம்"
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை
தமிழ்நாட்டில் கடந்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே, தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் கடந்த ஒரு வார காலமாக விட்டுவிட்டு, கனமழை பெய்து வருகிறது.
காற்றழுத்த தாழ்வு பகுதி
இந்தநிலையில், வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த சில நாட்களில் புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் 15 சென்டிமீட்டர் மழை அதிகபட்சமாக பதிவாகியுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு - வட மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, தென்கிழக்கு மற்றும் அதன் ஒட்டிய மத்திய வங்க கடல் பகுதியில், இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய உள்ளது. இது நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும், என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மோத்தா புயல்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிய பிறகு, இது தொடர்ந்து நகர்ந்து, தென்மேற்கு மற்றும் அதன் ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் நாளை புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 28ஆம் தேதி வரை இடி மின்னலுடன் லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் வானிலை நிலவரம் என்ன? Kanchipuram Weather Forecast Today (25-10-2025)
காஞ்சிபுரத்தை பொருத்தவரை இன்று (25-10-2025) மழை பெய்ய வாய்ப்பு குறைவு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை இன்று நாள் முழுவதும் மேகமூட்டத்துடன் காணப்படும். குளிர்ந்த வெப்பநிலை நிலவு என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. காஞ்சிபுரத்தை பொருத்தவரை நாளை (26-10-2025) பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு வானிலை நிலவரம் என்ன ? Chengalpattu Weather Forecast Today (25-10-2025)
செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை இன்று பரவலாக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை மற்றும் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோன்று இன்று காலை 10 மணி வரை வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மாலை மற்றும் இரவு நேரங்களில் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் மழைக்கு வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் வானிலை நிலவரம் என்ன? Thiruvallur Weather Forecast Today
திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை நேற்று பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் நேற்று 15 சென்டிமீட்டர் மழை வரை பதிவாகியது. இன்று காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை இன்று ஒரு சில இடங்களில், மழை பெய்ய வாய்ப்புள்ளது. பள்ளிப்பட்டு, செங்குன்றம் மற்றும் பூண்டி ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூரில் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் நிலை என்ன? Tamil Nadu Weather Update IMD Rain Prediction
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் இன்று பல்வேறு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.




















