ஊதிய உயர்வு, சங்கம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கடந்த பல நாட்களாக போராட்டதில் ஈடுபட்டு வந்த ஸ்ரீபெரம்பதூர் சாம்சங் ஊழியர்கள்  போராட்டத்தை கைவிட்டு இன்று முதல் பணிக்கு திரும்பியுள்ளனர்.  தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இதனையடுத்து சாம்சங் நிறுவனம் ஊழியர்களின் கோரிக்கைகளை செய்து தருவதாக ஒத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.