மேலும் அறிய

Flood: காஞ்சிபுரம் பாலாற்றில் வெள்ளம்! வாலாஜாபாத்-அவளூர் பாலம் மூடல், 20 கிராம மக்கள் தவிப்பு!

"காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பாலாற்றில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களாவது அடைந்துள்ளனர்"

காஞ்சிபுரத்தில் பருவமழை தொடங்கியதால் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகளில் தண்ணீர் வர தொடங்கியுள்ளது. இது மட்டும் இல்லாமல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாலாறு மற்றும் செய்யாறு ஆகிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகின்றன. பாலாறு மற்றும் செய்யாறு ஆகிய ஆறுகளுக்கு ஜவ்வாது மலை மற்றும் ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் பெய்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

20 கிராம மக்கள் தவிப்பு

பாலாறு பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் இருந்து அவலூர் செல்லும் தரைப்பாலம் முற்றிலுமாக வாகன போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. வாலாஜாபாத் பாலாற்றில் 11,000 கன அடி நீர் செல்வதால் வாலாஜாபாத்தில் இருந்து அவலூர் மற்றும் அங்கம்பாக்கம், கம்பராஜபுரம், தம்மனூர், இளையனர் வேலூர், காவாந்தண்டலம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு போக்குவரத்து தடை செய்யப்பட்டபோது, நடந்து செல்ல பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். இன்று பாலத்தை கடந்து தண்ணீர் செல்வதால், நடந்து செல்லவும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த பாலத்தில் கனரக வாகனங்கள் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் என அனைத்து விதமான வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் தடைபட்டிருப்பதால் வாகனங்களில் இந்த பாலத்தை கடக்க வேண்டுமென்றால், 30 கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

பொதுமக்கள் கடும் பாதிப்பு 

வாலாஜாபாத் மற்றும் 20க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கக்கூடிய மிக முக்கிய பலமாக இந்த பாலம் இருந்து வருகிறது. இந்த பாலத்தை பயன்படுத்தி தான், தொழிற்சாலைக்குச் செல்லும் ஊழியர்கள், கட்டுமானம் மற்றும் உள்ளிட்ட தொழிலில் ஈடுபடும், தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர். பாலத்தில் வாகனங்கள் செல்லாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

பொதுமக்களின் எதிர்பார்ப்பு என்ன ?

கடந்த 2021 ஆம் ஆண்டு பாலாற்றில் சென்ற வெள்ளத்தின் போது இந்த பாலம் சேதமடைந்தது. அப்போது இந்த பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் சுமார் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து வாலாஜாபாத் அவளூர் இடையிலான தரைப்பாலம் மட்டுமே அமைக்கப்பட்டது. 

அப்போதே பகுதி மக்கள் உயர்மட்ட மேம்பாலம் அமைத்திருந்தால், இந்த பிரச்சனை இருந்திருக்காது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
சபரிமலையில் தொடரும் சோகம் 9 நாட்களில் 9 பக்தர்கள் உயிரிழப்பு ! மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்க காரணம் என்ன? சுகாதாரத்துறை எச்சரிக்கை!
சபரிமலையில் தொடரும் சோகம் 9 நாட்களில் 9 பக்தர்கள் உயிரிழப்பு ! மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்க காரணம் என்ன? சுகாதாரத்துறை எச்சரிக்கை!
Sheikh Hasina: வெந்த புண்ணில் பாய்ந்த வேல்; ஊழல் வழக்கு; வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை
வெந்த புண்ணில் பாய்ந்த வேல்; ஊழல் வழக்கு; வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை
TN Weather Red Alert: டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva
ஒரே நொடியில் பறிபோன உயிர் இந்திய வீரர் உயிரிழப்பு பரபரப்பு CCTV காட்சி | Volley Ball Player Hardik Death
தவெகவில் செங்கோட்டையன் பாஜகவின் SLEEPER CELL விஜய்யை காலி செய்ய திட்டமா? | Sengottaiyan Vs TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
சபரிமலையில் தொடரும் சோகம் 9 நாட்களில் 9 பக்தர்கள் உயிரிழப்பு ! மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்க காரணம் என்ன? சுகாதாரத்துறை எச்சரிக்கை!
சபரிமலையில் தொடரும் சோகம் 9 நாட்களில் 9 பக்தர்கள் உயிரிழப்பு ! மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்க காரணம் என்ன? சுகாதாரத்துறை எச்சரிக்கை!
Sheikh Hasina: வெந்த புண்ணில் பாய்ந்த வேல்; ஊழல் வழக்கு; வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை
வெந்த புண்ணில் பாய்ந்த வேல்; ஊழல் வழக்கு; வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை
TN Weather Red Alert: டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
காஞ்சிபுரம் பெண்களே! ரூ.10 லட்சம் கடன் & 25% மானியம்! TWEES திட்டம்: உடனே விண்ணப்பிங்க!
காஞ்சிபுரம் பெண்களே! ரூ.10 லட்சம் கடன் & 25% மானியம்! TWEES திட்டம்: உடனே விண்ணப்பிங்க!
Cyclone Ditwah: வங்கக் கடலில் உருவானது ‘டிட்வா‘ புயல்; தமிழகத்தை நோக்கி நகரும் என வானிலை மையம் அறிவிப்பு
வங்கக் கடலில் உருவானது ‘டிட்வா‘ புயல்; தமிழகத்தை நோக்கி நகரும் என வானிலை மையம் அறிவிப்பு
White House Gun Shoot: வெள்ளை மாளிகை துப்பாக்கிச்சூடு; ஆப்கானியர்களின் குடியேற்ற கோரிக்கைகளை நிறுத்தி வைத்த அமெரிக்கா
வெள்ளை மாளிகை துப்பாக்கிச்சூடு; ஆப்கானியர்களின் குடியேற்ற கோரிக்கைகளை நிறுத்தி வைத்த அமெரிக்கா
TN RED ALERT: ரெட் அலர்ட்... உடனே இந்த 12 மாவட்டங்களுக்கு செல்லுங்க- ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
ரெட் அலர்ட்... உடனே இந்த 12 மாவட்டங்களுக்கு செல்லுங்க- ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
Embed widget