<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>kanchipuram</title><atom:link href="https://tamil.abplive.com/kanchipuram/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Fri, 12 Jun 2026 01:39:53 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[நாளை தவறவிட்டால் அப்புறம் வருத்தப்படுவீர்கள்! காஞ்சிபுரத்தில் 1000+ வேலைவாய்ப்புகள்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/district-collector-has-announced-that-a-massive-private-sector-job-fair-will-be-held-in-kanchipuram-tomorrow-with-over-1-000-vacancies-set-to-be-filled-tnn-263536</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/district-collector-has-announced-that-a-massive-private-sector-job-fair-will-be-held-in-kanchipuram-tomorrow-with-over-1-000-vacancies-set-to-be-filled-tnn-263536#respond</comments><pubDate>Thu, 11 Jun 2026 18:01:14 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/district-collector-has-announced-that-a-massive-private-sector-job-fair-will-be-held-in-kanchipuram-tomorrow-with-over-1-000-vacancies-set-to-be-filled-tnn-263536</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கிலும், தகுதியான நபர்களுக்குத் தனியார் துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தரும் வகையிலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பு முகாம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து நடத்தும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;முகாமின் சிறப்பம்சங்கள் மற்றும் நிறுவனங்கள் பங்கேற்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் நேரடியாகப் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி, சேவை, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் தங்களின் நிறுவனங்களுக்குத் தேவையான ஊழியர்களைத் தேர்ந்தெடுக்க இந்த மேடத்தைப் பயன்படுத்திக் கொள்ளவிருக்கிறார்கள். இந்த ஒரே முகாமின் மூலமாக 1000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களின் பிரதிநிதிகள் முகாமிற்கு நேரில் வருகை தந்து, தகுதியான நபர்களை நேர்காணல் மூலம் நேரடியாகத் தேர்வு செய்ய உள்ளனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;முகாம் நடைபெறும் நாள் மற்றும் முகவரி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தத் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை, 12.06.2026 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த வேலைதேடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், காலை 09.00 மணி முதல் இந்த முகாம் தொடங்குகிறது. காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இதற்கான நேர்காணல் மற்றும் தேர்வுத் நடைமுறைகள் அனைத்தும் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விண்ணப்பதாரர்களுக்கான முக்கிய வழிகாட்டுதல்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்பும் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அனைவரும் தங்களுடைய கல்விச் சான்றுகளின் நகல்கள் (Educational Certificates), தங்களின் தகுதி மற்றும் அனுபவத்தைக் குறிப்பிடும் விரிவான சுயவிவரக் குறிப்பு (Resume) மற்றும் தற்போதைய பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள் (Passport size photos) ஆகியவற்றைத் தவறாமல் நேரில் எடுத்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு தனியார் நிறுவனங்களில் பணியில் சேர விரும்புபவர்களுக்கு அனுமதி முற்றிலும் இலவசம் என மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கூடுதல் தகவல்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய எண்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முகாம் தொடர்பான சந்தேகங்கள், தகுதிகள் அல்லது கூடுதல் விவரங்களை அறிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் 044-27237124 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு தங்களின் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/11/e2da3db3e1b8e10d356b2ce0f51eb34017811809871161319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[திடீரென மாறிய வானிலை.. சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு மக்களுக்கு வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/chennai-regional-meteorological-centre-has-announced-the-possibility-of-heavy-rain-in-11-districts-of-tamil-nadu-today-june-11-tnn-263437</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/chennai-regional-meteorological-centre-has-announced-the-possibility-of-heavy-rain-in-11-districts-of-tamil-nadu-today-june-11-tnn-263437#respond</comments><pubDate>Thu, 11 Jun 2026 06:58:03 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/chennai-regional-meteorological-centre-has-announced-the-possibility-of-heavy-rain-in-11-districts-of-tamil-nadu-today-june-11-tnn-263437</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல நிலவரத்தைப் பொறுத்தமட்டில், மத்திய வங்கக்கடல் பகுதி முதல் கடலோர கர்நாடகா வரை, கடலோர ஆந்திரா, தெலுங்கானா மற்றும் உள் கர்நாடகா வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதன் காரணமாக, தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் நேற்று காலை நிலவரப்படி அதற்கு முந்தைய 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவின்படி, அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;11 மாவட்டங்களில் கனமழைய பெய்யும் விவரம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மழைப்பொழிவின் பரவலைப் பொறுத்தவரை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், திருநெல்வேலி மற்றும் கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், ராணிப்பேட்டை ஆகிய 11 மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;அடுத்த சில நாட்களுக்கான மழை மற்றும் வெப்பநிலை மாற்றங்கள் குறித்த முன்னறிவிப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனைத் தொடர்ந்து வரும் நாட்களுக்கான வானிலை கணிப்பின்படி, நாளை முதல் வரும் 15ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. மேலும், கோடை வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும் விதமாக, இன்று முதல் வரும் 14ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாகக் குறையக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/11/5a55bfc26eb9b5d879ef217b3aaafbbf17811411099511319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம்: வெட்டிவேர் சப்பரத்தில் பெருமாள் வீதி உலா!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/perumal-street-walk-was-held-to-mark-the-closing-ceremony-of-the-vaikasi-brahmotsavam-at-the-kanchipuram-varadaraja-perumal-temple-tnn-262955</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/perumal-street-walk-was-held-to-mark-the-closing-ceremony-of-the-vaikasi-brahmotsavam-at-the-kanchipuram-varadaraja-perumal-temple-tnn-262955#respond</comments><pubDate>Sun, 7 Jun 2026 06:20:26 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/perumal-street-walk-was-held-to-mark-the-closing-ceremony-of-the-vaikasi-brahmotsavam-at-the-kanchipuram-varadaraja-perumal-temple-tnn-262955</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், உலகப் பிரசித்தி பெற்ற அத்தி வரதர் ஆலயம் என அழைக்கப்படுவதுமான காஞ்சிபுரம் அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோவிலின் வருடாந்திர வைகாசி பிரம்மோற்சவ பெருவிழா நேற்று இரவுடன் மிகச் சிறப்பாக நிறைவடைந்தது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரம்மோற்சவம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இவ்விழாவானது கடந்த மே மாதம் 28-ஆம் தேதி அன்று திருக்கோவில் கொடிமரத்தில் முறைப்படி கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, விழா நாட்களின் முக்கிய நிகழ்வுகளான உலகப் புகழ்பெற்ற கருட சேவை உற்சவம் மே 30-ஆம் தேதியும், லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்த திருத்தேர் உற்சவம் ஜூன் 3-ஆம் தேதியும் , மற்றும் தீர்த்தவாரி உற்சவம் ஜூன் 5-ஆம் தேதியும் பக்தி பரவசத்துடன் நடைபெற்று முடிந்தன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பிரம்மோற்சவத்தின் பத்து நாட்களும் வரதராஜ பெருமாள் நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும், வெவ்வேறு விதமான வாகனங்களில் எழுந்தருளி காஞ்சிபுரம் நகரின் ராஜ வீதிகளில் வலம் வந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மணமிக்க வெட்டிவேர் சப்பரத்தில் சுவாமி புறப்பாடு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விழாவின் நிறைவு நாளான நேற்று, வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயார்களுடன் வண்ணமயமான மலர்களாலும், மணமிக்க வெட்டிவேரினாலும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மண்டபம் போன்ற சப்பரத்தில் பேரருளாளன் எழுந்தருளினார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பக்தி கோஷங்களுடன் மாடவீதி உலா&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மங்கள இசை ஒலிக்க, பேண்டு வாத்தியங்கள் மற்றும் மேளதாள நாதஸ்வர வாத்தியங்கள் முழங்க பெருமாளின் வீதி உலா தொடங்கியது. பஜனை கோஷ்டியினர் பக்தி பாடல்களைப் பாடி வர, வேத விற்பன்னர்கள் வேத பாராயணம் செய்ய சன்னதி வீதி மற்றும் மாட வீதிகளில் பெருமாள் மெதுவாக உலா வந்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வெட்டிவேர் சப்பரத்தில் கம்பீரமாக காட்சியளித்த வரதராஜ பெருமாளை தரிசிக்க, வீதிகளின் இருபுறமும் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சுவாமி தங்கள் பகுதிக்கு வந்தபோது, கற்பூர ஆரத்தி காண்பித்து, தேங்காய், பழம் படைத்து பக்தி பெருக்கோடு வணங்கி வழிபட்டனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கொடியிறக்கத்துடன் விழா இனிதே நிறைவு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மாட வீதிகளை வலம் வந்த வெட்டிவேர் சப்பரம், இரவில் மீண்டும் திருக்கோவிலை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து, பிரம்மோற்சவ தொடக்கத்தின் போது ஏற்றப்பட்ட கருடாழ்வார் முத்திரை பதிக்கப்பட்ட கொடியினை, கோவில் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க முறைப்படி இறக்கி வைத்தனர். கொடியிறக்க நிகழ்வைத் தொடர்ந்து, இந்த ஆண்டிற்கான வைகாசி பிரம்மோற்சவ பெருவிழா நேற்று இரவுடன் முறைப்படி நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், உபயதாரர்களும் சிறப்பாக செய்திருந்தனர். விழா நடைபெற்ற 10 நாட்களும் காஞ்சிபுரம் மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/07/d622b0b950841c41c217d43e3e65f85017807933766431319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[​60 பைக்குகள்... 2 லாரிகள்... வேலூர் வரை நீளும் நெட்வொர்க்! ஸ்ரீபெரும்புதூரில் சிக்கிய கொள்ளை கும்பல்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/incident-in-which-police-officers-were-behind-a-bike-theft-incident-in-the-sriperumbudur-area-of-kanchipuram-district-has-come-as-a-shock-tnn-262942</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/incident-in-which-police-officers-were-behind-a-bike-theft-incident-in-the-sriperumbudur-area-of-kanchipuram-district-has-come-as-a-shock-tnn-262942#respond</comments><pubDate>Sat, 6 Jun 2026 20:24:17 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/incident-in-which-police-officers-were-behind-a-bike-theft-incident-in-the-sriperumbudur-area-of-kanchipuram-district-has-come-as-a-shock-tnn-262942</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக புதிய இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து மாயமாகி வந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த வாகன உரிமையாளர்கள், தங்களது வாகனங்களை மீட்டுத் தருமாறு ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் அடுத்தடுத்து புகார்களை அளித்தனர். இந்த தொடர் திருட்டு சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் பரப்பரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருந்தது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சிசிடிவி காட்சிகள் மூலம் சிக்கிய கொள்ளையர்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;புகார்களின் அடிப்படையில், குற்றவாளிகளைப் பிடிக்க ஸ்ரீபெரும்புதூர் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். சம்பவ இடங்களில் இருந்த சிசிடிவி (CCTV) கேமரா பதிவுகளை போலீசார் விரிவாக ஆய்வு செய்தனர். அதில் சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம் கண்டறியப்பட்டது. அந்த காட்சிகளின் அடிப்படையில் துப்பு துலக்கிய போலீசார், வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த சரத்பாபு (40) மற்றும் விமல்குமார் (31) ஆகிய இருவரை அதிரடியாகக் கைது செய்தனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் தங்களது பாணியில் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் திருடப்படும் புதிய இருசக்கர வாகனங்களை, அவர்கள் வேலூர் மாவட்டம் கணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குக் கொண்டு சென்று மிகக் குறைந்த விலைக்கு விற்றுள்ளனர். ஒரு பைக்கை வெறும் 7,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரையிலான விலைக்கு விற்று, சட்டவிரோதமாகப் பணம் சம்பாதித்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வேலியே பயிரை மேய்ந்த கதை: காவலரின் கூட்டு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த விசாரணையில் மிக முக்கிய திருப்பமாக, இவர்களின் திருட்டுத் தொழிலுக்குப் பின்னணியில் ஒரு போலீஸ்காரரே கைகோர்த்திருந்தது வெளிச்சத்திற்கு வந்தது. ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த, கணியம்பாடி மேற்குளத்தைச் சேர்ந்த தமிழ்நாடு பட்டாலியன் காவலர் மணிகண்டன் (32) என்பவருக்கு இந்த திருட்டு கும்பலுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காவலர் மணிகண்டன் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திலேயே வேலைப் பார்த்துக்கொண்டு, உள்ளூர் நிலவரங்களை வேவு பார்த்து இந்த திருட்டு கும்பலுக்கு ரகசியமாக உதவி செய்துள்ளார். மேலும், இருசக்கர வாகனங்களை விற்று வரும் பணத்தில் அவரும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டதாகக் கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்தனர். சட்டத்தைக் காக்க வேண்டிய காவலரே கொள்ளைக் கும்பலுக்கு உடந்தையாக இருந்த சம்பவம் காவல் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;2 லாரிகளில் பறிமுதல் மற்றும் நீதிமன்றக் காவல்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;குற்றவாளிகள் கொடுத்த தகவலின் பேரில், வேலூர் மாவட்டத்திற்கு விரைந்த போலீசார் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த திருட்டு வாகனங்களை மீட்டனர். மொத்தமாக 60-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டு, அவை வேலூரிலிருந்து 2 பெரிய லாரிகள் மூலம் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டன. இதையடுத்து, பைக் திருட்டில் ஈடுபட்ட சரத்பாபு, விமல்குமார் மற்றும் அவர்களுக்குத் துணையாக இருந்த காவலர் மணிகண்டன் ஆகிய மூவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/06/13b4f1242482cdc62567fa991b55233817807576043211319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[சென்னை - காஞ்சிபுரம் மக்களே அலர்ட்! - இத மட்டும் செய்ய தவறினால் தண்ணீருக்கு தவிக்க நேரிடும்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/we-will-learn-about-how-to-transform-the-suburbs-of-chennai-in-the-interests-of-the-global-environment-tnn-262740</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/we-will-learn-about-how-to-transform-the-suburbs-of-chennai-in-the-interests-of-the-global-environment-tnn-262740#respond</comments><pubDate>Fri, 5 Jun 2026 07:26:38 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/we-will-learn-about-how-to-transform-the-suburbs-of-chennai-in-the-interests-of-the-global-environment-tnn-262740</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் உலகம் முழுவதும் மிகக் கோலாகலமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. மனிதனின் பேராசையாலும், திட்டமிடப்படாத அதிவேக நகர்மயமாக்கலாலும் சிதைந்து வரும் பூமியைக் காக்க, உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு முக்கிய நாளாக இது அமைகிறது. ஆனால், தற்போதைய சூழலில் இது வெறும் விழிப்புணர்வுக்கான நாளாக மட்டும் கடந்து போகாமல், நமது வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்கான ஒரு மிக முக்கிய செயல்பாட்டு நாளாக மாற வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;குறிப்பாக, மிகவேகமாக வளர்ந்து வரும் சென்னை மற்றும் காஞ்சிபுரம் புறநகர்ப் பகுதி மக்களுக்கு இந்த நாளின் முக்கியத்துவம் முன்பை விட இப்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியும், பொருளாதார முன்னேற்றமும் மனித சமுதாயத்திற்கு எவ்வளவு முக்கியமோ, அதைவிட மிக முக்கியம் நாம் சுவாசிக்கும் தூய்மையான காற்றும், குடிக்கும் தண்ணீரும் ஆகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம், அகால மழை மற்றும் கடுமையான கோடை வெயில் என இயற்கை நமக்குத் தொடர்ந்து பல எச்சரிக்கைகளை விடுத்துக் கொண்டே இருக்கிறது. நம் குழந்தைகளுக்கு நாம் சேர்த்து வைக்கும் சொத்துக்களை விட, அவர்கள் வாழ்வதற்குத் தகுதியான ஒரு பசுமையான தூய்மையான சுற்றுச்சூழலை விட்டுச் செல்வதே நமது முதன்மைக் கடமையாகும் என்பதை நினைவூட்டவே இந்த நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னை மற்றும் காஞ்சிபுரம் தற்போதைய சுற்றுச்சூழல் சவால்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஒரு காலத்தில் ஏரிகளின் மாவட்டமாகப் புகழ்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க காஞ்சிபுரமும், அதனைச் சுற்றியுள்ள சென்னை புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், வண்டலூர், கூடுவாஞ்சேரி, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் மற்றும் குன்றத்தூர் போன்ற இடங்களும் இன்று மிகக் கடுமையான சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. இப்பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான நீர்நிலைகள், இன்று ஆக்கிரமிப்புகளாலும் தொழிற்சாலைக் கழிவுகள் கொட்டப்படுவதாலும் மிக வேகமாக மாசடைந்து வருகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாகக் குறைவதோடு, மழைக்காலங்களில் கடுமையான வெள்ள அபாயமும், கோடைக் காலங்களில் கடுமையான தண்ணீர்ப் பஞ்சமும் மாறி மாறி ஏற்படுகின்றன. மேலும், விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்புகளாகவும், வணிக வளாகங்களாகவும் மாறும் அதிவேக நகர்மயமாக்கல் காரணமாக, இப்பகுதியின் நுண் காலநிலை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மரங்கள் பெருமளவில் அழிக்கப்படுவதால், புறநகர்ப் பகுதிகளில் முன்பை விட வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுமட்டுமின்றி, புறநகர் பகுதிகளில் மக்கள் தொகை பெருகி வரும் அளவிற்கு, குப்பைகளை முறையாக மேலாண்மை செய்யும் திடக்கழிவு கட்டமைப்பு இன்னும் முழுமையடையவில்லை. இதனால் காலி மனைகளிலும், சாலையோரங்களிலும் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணின் வளத்தைக் கெடுப்பதோடு, அப்பகுதியில் உள்ள கால்நடைகளையும் கடுமையாகப் பாதித்து வருகின்றன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொதுமக்களின் அக்கறையும் அவசியமான கடமைகளும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது என்பது அரசாங்கத்தின் அல்லது உள்ளாட்சி அமைப்புகளின் வேலை மட்டுமே என்று பொதுமக்கள் யாரும் ஒதுங்கிவிட முடியாது. ஏனெனில், உண்மையான மாற்றம் என்பது எப்போதும் நம் வீட்டிலிருந்துதான் தொடங்க வேண்டும். சென்னை மற்றும் காஞ்சிபுரம் புறநகர் பொதுமக்கள், சுற்றுச்சூழல் மீது உண்மையான அக்கறை கொண்டு உடனடியாகச் செய்ய வேண்டிய சில முக்கியக் கடமைகள் உள்ளன. சொந்த இடம் அல்லது வீடு வைத்திருப்பவர்கள் தங்கள் வீட்டு வாசலிலோ அல்லது மொட்டை மாடியிலோ சிறிய அளவிலான தோட்டம் அமைக்க முன்வர வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;குடியிருப்பு சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து, அருகில் உள்ள பொது இடங்களில் மியாவாக்கி எனப்படும் அடர்வனக் காடுகள் முறையில் மரக்கன்றுகளை நடுவதன் மூலம் இப்பகுதியின் வெப்பத்தைக் குறைத்து, நிலத்தடி நீரை வெகுவாக உயர்த்த முடியும். மேலும், ஏரிகளின் மாவட்டம் என்ற பெருமையை மீட்டெடுக்க, நமது பகுதியில் உள்ள ஏரி மற்றும் குளங்களைத் தூர்வாரும் தன்னார்வப் பணிகளில் பொதுமக்கள் நேரடியாகவோ அல்லது நிதியுதவி மூலமாகவோ தங்களைப் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு முறையாகச் செயல்படுகிறதா என்பதை இந்த தினத்தில் உறுதி செய்வதும் அவசியமாகும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரத்தில் செய்ய வேண்டியது என்ன ?&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரம் பட்டு நகரமாகவும், சென்னை புறநகர்ப் பகுதிகள் முக்கிய வணிக மையங்களாகவும் விளங்குவதால், இங்கு பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு மிக அதிகமாக உள்ளது. எனவே, பொதுமக்கள் கடைக்குச் செல்லும்போது எப்போதும் துணிப் பைகளை அல்லது பாரம்பரிய மஞ்சள் பைகளைப் பயன்படுத்தும் வழக்கத்தைக் கொண்டு வர வேண்டும். நம் வீட்டில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை எனத் தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்குவதுடன், மக்கும் கழிவுகளை வீட்டிலேயே இயற்கை உரமாக மாற்றி செடிகளுக்குப் பயன்படுத்தலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இறுதியாக, சென்னை புறநகரில் இருந்து நகரின் பிற பகுதிகளுக்குச் செல்லும்போது, தனிநபர் வாகனங்களைத் தவிர்த்து புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் மாநகரப் பேருந்துகள் போன்ற பொதுப் போக்குவரத்தை அதிகளவில் பயன்படுத்துவதன் மூலம் காற்று மாசுபாட்டையும், போக்குவரத்து நெரிசலையும் பெருமளவு குறைக்க முடியும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;நமது பூமி, நமது பொறுப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இயற்கை மனிதனின் தேவைக்கான எல்லாவற்றையும் வழங்கும், ஆனால் அவனது பேராசைக்கானது அல்ல&quot; என்ற மகாத்மா காந்தியின் பொன்மொழிக்கு ஏற்ப நாம் வாழ பழக வேண்டும். சென்னை மற்றும் காஞ்சிபுரம் புறநகர்ப் பகுதிகள் பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் இதே வேளையில், சுற்றுச்சூழல் ரீதியாகவும் அவை வளர வேண்டும் என்பதே தற்போதைய காலத்தின் கட்டாயமாகும். பசுமையான மரங்களும், தூய்மையான நீர்நிலைகளும் இல்லாத எந்தவொரு வளர்ச்சியும் நிலையான வளர்ச்சியாக இருக்க முடியாது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;எனவே, இந்த உலக சுற்றுச்சூழல் தினத்தில், &quot;நான் இனி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாட்டேன், என் பகுதியில் ஒரு மரமாவது நடுவேன், நீர்நிலைகளைப் பாதுகாப்பேன்&quot; என்று ஒவ்வொரு பொதுமகனும் நெஞ்சார உறுதிமொழி ஏற்போம். நாம் இன்று செய்யும் இந்தச் சிறிய மாற்றம், நாளைய தலைமுறைக்கு நாம் தரும் ஆகச்சிறந்த உன்னத பரிசாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/05/35830079adbf3f56ab88904edb5d767017806245452101319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[காஞ்சிபுரம் தேர் திருவிழா: நகருக்குள் வாகனங்களுக்குத் தடை! பொதுமக்கள் கடும் எச்சரிக்கை!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/vehicle-traffic-has-been-banned-in-kanchipuram-in-view-of-the-chariot-festival-at-the-kanchipuram-varadaraja-perumal-temple-tnn-262468</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/vehicle-traffic-has-been-banned-in-kanchipuram-in-view-of-the-chariot-festival-at-the-kanchipuram-varadaraja-perumal-temple-tnn-262468#respond</comments><pubDate>Tue, 2 Jun 2026 17:39:48 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/vehicle-traffic-has-been-banned-in-kanchipuram-in-view-of-the-chariot-festival-at-the-kanchipuram-varadaraja-perumal-temple-tnn-262468</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான, உலகப் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில், வைகாசி மாத பிரம்மோற்சவம் மிக விமரிசையாக நடைபெற்று வருகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவத்திற்குப் பெயர் பெற்ற இக்கோவிலின் பிரம்மோற்சவ நிகழ்வுகள் பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த உற்சவத்தின் மிக முக்கிய நிகழ்வான தேரோட்டம், திருவிழாவின் ஏழாம் நாளான நாளை நடைபெற உள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தேரோட்டம் துவக்கம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனை முன்னிட்டு, காந்தி சாலையில் அமைந்துள்ள 10 டன் எடை மற்றும் 7 அடுக்குகள் கொண்ட பிரம்மாண்டமான திருத்தேரை, நாளை காலை 6:00 மணிக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் என். ஆனந்தன், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் தென்னரசு மற்றும் வனத்துறை அமைச்சர் ஆர். வி. ரஞ்சித் குமார் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்க உள்ளனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் தற்காலிக பேருந்து நிலையங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தேரோட்டத்தைக் காண மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், காஞ்சிபுரம் மாநகரப் பகுதியில் போக்குவரத்தில் மிக முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் காஞ்சிபுரம் மாநகருக்குள் கனரக வாகனங்கள் மற்றும் கார்கள் நுழைவதற்கு நாளை முழுவதும் முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதற்கென, மாநகரின் முக்கிய நுழைவாயில்களான ஓரிக்கை, ஒலிமுகமதுபேட்டை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் ரயில்வே நிலையம் ஆகிய நான்கு இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் இந்த தற்காலிக நிலையங்களிலேயே நிறுத்தப்பட வேண்டும் என்றும், அங்கிருந்து பக்தர்கள் மாநகருக்குள் சென்று வர வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பலத்த போலீஸ் பாதுகாப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும், நெரிசலின்றி பக்தர்கள் தரிசனம் செய்யவும் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், கோவில் வளாகம் மற்றும் தேர் செல்லும் வீதிகளில் தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பக்தர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி, திருத்தேர் உற்சவத்தை சிறப்பான முறையில் கொண்டாடுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;[yt]&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/knQa9zQN4sg?si=j9GdrkBTtFIT7jpb&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;[/yt]&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/02/4959fb3f575e47c9b0b94fe724f83ff217804020416531319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Parandur Airport: பரந்தூர் விமான நிலையம் வருமா? வராதா? முதல்வர் வசம் செல்லும் ரிப்போர்ட்!]]></title><link>https://tamil.abplive.com/news/chennai/airports-authority-will-submit-a-research-report-to-the-chief-minister-regarding-the-need-for-a-paranthur-airport-tnn-262370</link><comments>https://tamil.abplive.com/news/chennai/airports-authority-will-submit-a-research-report-to-the-chief-minister-regarding-the-need-for-a-paranthur-airport-tnn-262370#respond</comments><pubDate>Tue, 2 Jun 2026 07:36:44 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ சென்னை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/chennai/airports-authority-will-submit-a-research-report-to-the-chief-minister-regarding-the-need-for-a-paranthur-airport-tnn-262370</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்தில் அதிகரித்து வரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கையைக் கையாள, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் இடப்பற்றாக்குறையைச் சமாளிப்பது தற்போதைய காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது. தற்போதைய மீனம்பாக்கம் விமான நிலையம் தினசரி 60,000-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் 400-க்கும் மேற்பட்ட விமான நகர்வுகளைக் கையாண்டு வந்தாலும், அங்கு நிலவும் இடப்பற்றாக்குறை மற்றும் உள்கட்டமைப்பு சவால்களால் எதிர்கால வளர்ச்சிக்கான விரிவாக்கப் பணிகளை மேற்கொள்வது கடினமாக உள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பல சர்வதேச நாடுகளுக்கு நேரடி விமானங்களை இயக்க முடியாத சூழல் நிலவுவதால், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 5,600 ஏக்கர் பரப்பளவில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 3,700 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 1,700 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பொருளாதார வளர்ச்சி மற்றும் 'ஏரோட்ரோபோலிஸ்' திட்டம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பரந்தூர் விமான நிலையத்தைச் சுற்றி 'ஏரோட்ரோபோலிஸ்' (Aerotropolis) என்ற நவீன வணிக மற்றும் பொருளாதார மண்டலத்தை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் நவீன சரக்குக் கிடங்குகள், ஏற்றுமதி-இறக்குமதி மையங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் உருவாக்கப்படும். இதன் விளைவாக, சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களின் தொழில் வளர்ச்சி பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும், நவீன ஓடுபாதைகள் மற்றும் அகலமான வான்வெளித் தளங்கள் அமைக்கப்படுவதால், ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு நேரடி விமானங்களை இயக்க முடியும், இது மாநிலத்தின் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;திட்டத்தின் எதிர்கால நோக்கம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த விமான நிலையமானது அடுத்த 30 முதல் 50 ஆண்டுகால பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசியல் சூழலில், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக விவசாயிகளிடையே நிலவும் போராட்டங்கள் மற்றும் திட்டத்தின் மீதான சில சந்தேகங்கள் இருந்தாலும், மாநிலத்தின் வளர்ச்சிக்கு இந்தத் திட்டம் மிக அவசியம் என்று கருதப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஆய்வறிக்கை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் அதிகாரிகளுடன் இணைந்து, விமான நிலைய ஆணையம் சுற்றுச்சூழல் தாக்கம் மற்றும் போக்குவரத்து இணைப்பு குறித்த ஆய்வுகளை முடித்துள்ளது. இந்த விரிவான ஆய்வறிக்கையை முதலமைச்சரிடம் விரைவில் சமர்ப்பிக்க ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டவுடன், திட்டத்தைச் செயல்படுத்துவதில் உள்ள தெளிவு பிறக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/02/65e242fb9dc6858e16087bd6794f277317803659599131319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[வைகாசி பிரம்மோற்சவம்: தங்கப்பல்லக்கில் மோகினி திருக்கோலத்தில் வரதராஜ பெருமாள்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/occasion-of-the-brahmotsava-festival-of-the-kanchipuram-varadaraja-perumal-temple-varadaraja-perumal-appeared-before-the-devotees-in-the-mohini-tnn-262345</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/occasion-of-the-brahmotsava-festival-of-the-kanchipuram-varadaraja-perumal-temple-varadaraja-perumal-appeared-before-the-devotees-in-the-mohini-tnn-262345#respond</comments><pubDate>Mon, 1 Jun 2026 18:30:29 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/occasion-of-the-brahmotsava-festival-of-the-kanchipuram-varadaraja-perumal-temple-varadaraja-perumal-appeared-before-the-devotees-in-the-mohini-tnn-262345</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதும், உலகப் பிரசித்தி பெற்ற அத்தி வரதர் கோவில் என்று போற்றப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், வைகாசி மாத பிரம்மோற்சவம் மிகுந்த பக்தியுடனும், வெகு விமர்சையாகவும் நடைபெற்று வருகிறது. இந்த உற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான 5-ம் நாள் காலை உற்சவம் இன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு, வரதராஜ பெருமாள் விசேஷ அலங்காரங்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மோகினி திருக்கோலத்தில் அருள்பாலித்த பெருமாள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;5-ம் நாள் காலை உற்சவத்தின் சிறப்பம்சமாக, வரதராஜ பெருமாள் எழில்மிகு 'மோகினி' திருக்கோலத்தில் எழுந்தருளினார். நீல நிறப் பட்டு வஸ்திரங்களை அணிந்து, விலைமதிப்பற்ற திருவாபரணங்கள் மற்றும் தங்கத்தால் மெருகூட்டப்பட்ட ஜடை அலங்காரத்துடன் பெருமாள் ஜொலித்தார். மேலும், பஞ்சவர்ண மலர் மாலைகளை அணிந்து, பேரழகுடன் காட்சியளித்த பெருமாளைக் காணக் கண்கள் கோடி வேண்டும் என்று பக்தர்கள் மெய்சிலிர்த்தனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ராஜ வீதிகளில் பவனி வந்த தங்கப்பல்லக்கு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அலங்கரிக்கப்பட்ட தங்கப்பல்லக்கில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள், கோவிலில் இருந்து புறப்பட்டு காஞ்சிபுரத்தின் முக்கிய ராஜ வீதிகள் வழியாக வீதி உலா வந்தார். பாதம் தாங்கிகள் பல்லக்கைச் சுமந்து வர, மேள தாளங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஓதப்பட, பெருமாள் பவனி வந்த காட்சி பக்தர்களை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தியது. வழிநெடுகிலும் திரண்டிருந்த திரளான பக்தர்கள், 'கோவிந்தா, கோவிந்தா' என்று பக்தி முழக்கமிட்டு சுவாமியை தரிசித்தனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பக்தர்களின் வெள்ளத்தில் மிதந்த வீதிகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கோவிலின் ராஜ வீதிகளில் பெருமாள் பவனி வந்தபோது, வீட்டின் வாசல்களிலும், சாலைகளின் ஓரங்களிலும் காத்திருந்த பக்தர்கள் தங்கள் இல்லங்களுக்கு வந்த பெருமாளைத் தேங்காய், பழம் வைத்து வழிபட்டனர். சாலையின் இருபுறமும் பக்தர்கள் பெரும் திரளாகக் கூடியிருந்ததால், காஞ்சிபுரம் நகரே பக்தி வெள்ளத்தில் மிதந்தது. பல நாட்களாகக் காத்திருந்து இந்த வைபவத்தைக் காணும் பக்தர்களுக்கு, மோகினி திருக்கோலத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாளின் தரிசனம் மிகுந்த மனநிறைவைத் தருவதாக அமைந்தது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/01/afba26652a7873f2824b9c4b3d91f01a17803187827381319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[காஞ்சிபுரம் டவர் விவகாரம்: என் ஆபீஸ்லேயே டவர் இருக்கு - கலெக்டர் சொன்ன அதிரடி பதில்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/kanchipuram-district-collector-d-sneha-iasgave-an-explanation-to-the-public-who-came-to-complain-about-the-tower-issue-in-kanchipuram-district-tnn-262342</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/kanchipuram-district-collector-d-sneha-iasgave-an-explanation-to-the-public-who-came-to-complain-about-the-tower-issue-in-kanchipuram-district-tnn-262342#respond</comments><pubDate>Mon, 1 Jun 2026 18:22:33 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/kanchipuram-district-collector-d-sneha-iasgave-an-explanation-to-the-public-who-came-to-complain-about-the-tower-issue-in-kanchipuram-district-tnn-262342</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் நகராட்சிக்கு உட்பட்ட செல்லப்பெருமாள் நகரில் 2,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியின் மக்கள் நெருக்கமான குடியிருப்புகளுக்கு இடையே, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் சார்பில் 5ஜி செல்போன் டவர் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில், குடியிருப்புகளுக்கு மிக அருகில் டவர் அமைப்பதால், அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சால் முதியவர்கள், குழந்தைகள் மற்றும் நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள் என்று அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஆட்சியரிடம் குவிந்த புகார்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த விவகாரம் தொடர்பாக, அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்று, மாவட்ட ஆட்சியர் சினேகாவிடம் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து கோரிக்கை மனு அளித்தனர். செல்போன் டவர் அமைப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரச் சீர்கேடுகள் குறித்துத் தங்கள் கவலைகளை அவர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஆட்சியரின் விளக்கம் ஏற்படுத்திய அதிர்ச்சி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சினேகா, செல்போன் டவர்களால் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படும் என்பதற்கு இதுவரை அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று தெளிவுபடுத்தினார். சென்னை போன்ற பெருநகரங்களிலேயே மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு நடுவே ஏராளமான டவர்கள் செயல்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், &quot;எனது அலுவலகத்தின் மாடியிலேயே செல்போன் டவர் உள்ளது; இருப்பினும் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. இத்தகைய டவர்கள் அமைக்கப்பட்டால், அந்தப் பகுதியில் தொலைத்தொடர்பு சிக்னல் தொடர்பான பிரச்சினைகள் தீர வாய்ப்புள்ளது&quot; என்று விளக்கம் அளித்தார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;அடுத்தகட்ட போராட்டத்திற்கு அழைப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆட்சியரின் இந்த விளக்கத்தால், மனு அளிக்கச் சென்ற படித்த பெண்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். தங்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பார் என்று எதிர்பார்த்த இடத்தில், அதற்கு மாறான கருத்து தெரிவிக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்துள்ளனர். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் டவர் அமைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள மக்கள், இந்தத் திட்டம் கைவிடப்படாவிட்டால், அடுத்தகட்டமாகப் பெரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/01/358a3a9fae08994b1d89153b57a2bab617803182825241319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்: இரு பிரிவினரிடையே மீண்டும் மோதல்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/clash-has-erupted-again-between-the-vadakalai-and-women-s-groups-at-the-kanchipuram-varadaraja-perumal-temple-tnn-262237</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/clash-has-erupted-again-between-the-vadakalai-and-women-s-groups-at-the-kanchipuram-varadaraja-perumal-temple-tnn-262237#respond</comments><pubDate>Mon, 1 Jun 2026 07:37:46 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/clash-has-erupted-again-between-the-vadakalai-and-women-s-groups-at-the-kanchipuram-varadaraja-perumal-temple-tnn-262237</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலின் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த மே 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் போது, சுவாமி வீதி உலா வரும் வேளையில், நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி சுவாமிக்கு முன்பாக தென்கலை பிரிவினர் திவ்ய பிரபந்தம் பாடிச் செல்லவும், சுவாமிக்கு பின்புறம் வடகலை பிரிவினர் வேத பாராயணம் செய்து செல்லவும் முறை வகுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான இன்று, சந்திர பிரபை வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக வரதராஜ பெருமாள் எழுந்தருளி வீதி உலா வந்தார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வடகலை மற்றும் தென்கலை மோதல்&amp;nbsp;&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வீதி உலாவின் ஒரு பகுதியாக, சுவாமி கங்கைகொண்டான் மண்டபத்தில் எழுந்தருளியபோது, கோஷ்டியில் பாடல்கள் பாடுவது மற்றும் பூஜைகள் செய்வது தொடர்பான நடைமுறைகள் குறித்து வடகலை மற்றும் தென்கலை பிரிவைச் சேர்ந்தவர்களிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அந்த மண்டபப் பகுதியே பெரும் பரபரப்புக்கு உள்ளானது. உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தலையிட்டு, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தினர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஒவ்வொரு பிரம்மோற்சவத்தின் போதும், இதுபோன்ற காரணங்களுக்காக இரு பிரிவினரும் தொடர்ச்சியாக மோதலில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இத்தகைய நிகழ்வுகள், சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் மன அமைதியைக் குலைப்பதுடன், பெரும் அசௌகரியத்தையும் ஏற்படுத்துகின்றன. புனிதமான வழிபாட்டுத் தலத்தில் நடக்கும் இத்தகைய மோதல் போக்கு, பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் முகம் சுளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கோயில் நிர்வாகமும் காவல்துறையும் இணைந்து, வரும் நாட்களில் இத்தகைய மோதல்கள் நடைபெறாமல் பக்தர்களின் தரிசனத்திற்கு உரிய பாதுகாப்பு மற்றும் அமைதியான சூழலை உறுதி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/01/6f65ab10cb05f016f924507761db0ced17802796299671319_original.jpg" width="220"/></item></channel></rss>