<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>kanchipuram</title><atom:link href="https://tamil.abplive.com/kanchipuram/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Sat, 2 May 2026 07:35:38 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[கருத்துக்கணிப்புகளை முறியடித்து அதிமுக 200 இடங்களில் வெல்லும்: கடம்பூர் ராஜு!]]></title><link>https://tamil.abplive.com/news/politics/former-minister-kadambur-raju-has-said-in-kanchipuram-that-the-aiadmk-will-win-defying-opinion-polls-tnn-258095</link><comments>https://tamil.abplive.com/news/politics/former-minister-kadambur-raju-has-said-in-kanchipuram-that-the-aiadmk-will-win-defying-opinion-polls-tnn-258095#respond</comments><pubDate>Fri, 1 May 2026 18:21:00 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ அரசியல் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/politics/former-minister-kadambur-raju-has-said-in-kanchipuram-that-the-aiadmk-will-win-defying-opinion-polls-tnn-258095</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளின் பாவ புண்ணியக் கணக்குகளை எழுதுபவராகக் கருதப்படும் சித்ரகுப்த சுவாமிக்கு, காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள நெல்லுக்கார தெருவில் தனிச்சன்னதியுடன் கூடிய பழமையான கோவில் அமைந்துள்ளது. இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத சிறப்பைப் பெற்ற இக்கோவிலில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ கர்ணகி அம்மாள் உடனுறை சித்திரகுப்தர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் மிக விமரிசையாக நடைபெற்றது. இந்தச் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று சாமி தரிசனம் செய்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வரலாறு திரும்பும் என நம்பிக்கை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தரிசனத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கடம்பூர் ராஜு, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் குறித்து அதிமுக எவ்விதக் கவலையும் கொள்ளவில்லை என்று தெரிவித்தார். கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது திமுக வெற்றி பெறும் என்றே பல கருத்துக்கணிப்புகள் கூறின, ஆனால் முடிவுகள் அதற்கு நேர்மாறாக அமைந்ததை அவர் சுட்டிக்காட்டினார். அப்போது ஆளுங்கட்சியாக இருந்த திமுக, எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைக் கூடப் பெற முடியாமல் போனதும், அதிமுக 203 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியதுமே வரலாறு என்று அவர் குறிப்பிட்டார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;எடப்பாடி IN - ஸ்டாலின் OUT&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போதைய தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசிய அவர், கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதியே தமிழக மக்கள் தங்களின் இறுதித் தீர்ப்பை வழங்கிவிட்டதாகக் கூறினார். அந்தத் தீர்ப்பு என்பது 'எடப்பாடி பழனிசாமி IN, மு.க. ஸ்டாலின் OUT' என்பதாகத்தான் இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், இம்முறை அதிமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் இமாலய வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். வாக்கு எண்ணும் நாளில் அதிமுகவின் பலம் என்ன என்பது தெரியவரும் என்றும், கட்சியின் வாக்கு சதவீதத்தை எவராலும் சரி செய்யவோ அல்லது பாதிக்கவோ முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;திரையுலகினர் வருகையும் அரசியல் தாக்கமும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நடிகர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; அரசியல் கட்சித் தொடங்கி வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், புதிய நடிகர்கள் அரசியலுக்கு வரும்போது இது போன்ற ஒரு தற்காலிகத் தாக்கம் ஏற்படுவது சகஜம்தான் என்றார். கடந்த 2006-ஆம் ஆண்டு விஜயகாந்த் அவர்கள் கட்சித் தொடங்கி முதன்முதலில் தேர்தலைச் சந்தித்தபோது, அவருக்கு மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடியதையும் கருத்துக்கணிப்புகள் அவருக்குச் சாதகமாக இருந்ததையும் நினைவு கூர்ந்தார். ஆனால், அந்தத் தேர்தலில் அவர் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றார் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், கடந்த 50 ஆண்டுகளில் பேரறிஞர் அண்ணாவுக்குப் பிறகு எம்.ஜி.ஆர் மட்டுமே கட்சித் தொடங்கி வெற்றி கண்ட ஒரே நடிகர் என்று குறிப்பிட்டார். மற்ற நடிகர்கள் யாராலும் அதிமுகவைப் போன்ற ஒரு மாபெரும் வெற்றியைப் பெற முடியாது என்பதே நிதர்சனம் என்று அவர் தனது பேட்டியில் தெரிவித்தார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/01/d41063c5a1b6a6c60c8cceca0dc0d58517776398277371319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[காஞ்சிபுரம் சித்ரகுப்த சுவாமி கோயில் சித்ரா பௌர்ணமி விழா: பக்தர்களின் எழுச்சிமிகு வழிபாடு!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/special-worship-service-was-held-at-the-chitragupta-temple-in-kanchipuram-on-the-occasion-of-chitra-pournami-and-thousands-of-devotees-participated-and-had-a-special-darshan-tnn-258087</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/special-worship-service-was-held-at-the-chitragupta-temple-in-kanchipuram-on-the-occasion-of-chitra-pournami-and-thousands-of-devotees-participated-and-had-a-special-darshan-tnn-258087#respond</comments><pubDate>Fri, 1 May 2026 17:54:44 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/special-worship-service-was-held-at-the-chitragupta-temple-in-kanchipuram-on-the-occasion-of-chitra-pournami-and-thousands-of-devotees-participated-and-had-a-special-darshan-tnn-258087</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சித்திரை மாதத்தின் முழு நிலவு தினமான சித்ரா பௌர்ணமி, மனிதர்களின் பாவ-புண்ணிய கணக்குகளை எழுதும் சித்ரகுப்த சுவாமிக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. தென்னிந்தியாவிலேயே சித்ரகுப்தருக்கென்று தனிச் சந்நிதி அமைந்துள்ள மிக முக்கிய தலமான காஞ்சிபுரம் நெல்லுக்காரத் தெருவில் உள்ள சித்ரகுப்த சுவாமி கோயிலில், இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி விழா மிகுந்த கோலாகலத்துடன் நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;திருக்கல்யாண வைபவம் மற்றும் வீதியுலா&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விழாவின் தொடக்கமாக, வியாழக்கிழமை இரவு சித்ரகுப்த சுவாமிக்கும் கர்ணகி அம்பாளுக்கும் ஆகம விதிகளின்படி மிக விமரிசையாக திருக்கல்யாணம் நடைபெற்றது. மணக்கோலத்தில் காட்சியளித்த சுவாமியும் அம்பாளும், சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வந்தனர். வீதியுலாவின் போது வழிநெடுகிலும் திரண்டிருந்த பக்தர்கள் சுவாமிக்கு அர்ச்சனை செய்து தரிசனம் பெற்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சிறப்பு அபிஷேகம் மற்றும் தடையற்ற தரிசனம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சித்ரா பௌர்ணமி தினமான வெள்ளிக்கிழமை அதிகாலை, மூலவர் சித்ரகுப்த சுவாமிக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்களும், மகா தீபாராதனைகளும் நடைபெற்றன. பொதுவாக மதிய வேளையில் நடை சாற்றப்படுவது வழக்கம், ஆனால் பக்தர்களின் வருகை அதிகமாக இருந்த காரணத்தால், அதிகாலையிலிருந்து இரவு வரை கோயில் நடை திறக்கப்பட்டு தடையற்ற தரிசனத்திற்கு வழிவகை செய்யப்பட்டிருந்தது. சித்ரகுப்தரை வழிபடுவதன் மூலம் தங்கள் பாவங்கள் நீங்கி, புண்ணிய கணக்குகள் கூடும் என்ற நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பக்தர்களின் நீண்ட வரிசையும் கட்டண தரிசனமும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் 20 ரூபாய் கட்டணத்தில் சிறப்பு தரிசனத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கோயிலை ஒட்டியுள்ள நெல்லுக்காரத் தெருவில் மட்டும் வெயிலின் தாக்கத்தை குறைக்க பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. இருப்பினும், கூட்ட நெரிசல் காரணமாக வரிசை உலகளந்த பெருமாள் கோயில் அருகில் உள்ள சங்குபாணி விநாயகர் கோயில் வரை நீண்டிருந்தது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வெயிலின் தாக்கம் மற்றும் நிலவிய சிரமங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனர். பந்தல் வசதி இல்லாத இடங்களில் நின்றிருந்த பக்தர்கள் குடை பிடித்தும், தலையில் துணிகளைப் போர்த்திக் கொண்டும் வெயிலைச் சமாளித்தனர். பல தன்னார்வலர்கள் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினாலும், குடிநீர் மற்றும் முறையான கழிப்பறை வசதிகள் இல்லாததால் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இத்தகைய சிரமங்களுக்கு மத்தியிலும், மிகுந்த பக்தியுடன் சித்ரகுப்த சுவாமியை வழிபட்டுச் சென்றனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/01/fa44693b7eaf650e87bec8a27575c22617776382307531319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!]]></title><link>https://tamil.abplive.com/spiritual/flag-hoisting-ceremony-was-held-with-great-pomp-at-the-ashtapuja-perumal-temple-in-kanchipuram-on-the-occasion-of-the-brahmotsavam-in-the-month-of-chithirai-tnn-258043</link><comments>https://tamil.abplive.com/spiritual/flag-hoisting-ceremony-was-held-with-great-pomp-at-the-ashtapuja-perumal-temple-in-kanchipuram-on-the-occasion-of-the-brahmotsavam-in-the-month-of-chithirai-tnn-258043#respond</comments><pubDate>Fri, 1 May 2026 10:39:07 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ ஆன்மிகம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/spiritual/flag-hoisting-ceremony-was-held-with-great-pomp-at-the-ashtapuja-perumal-temple-in-kanchipuram-on-the-occasion-of-the-brahmotsavam-in-the-month-of-chithirai-tnn-258043</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், அந்த நகரில் 'சொர்க்கவாசல்' எனப்படும் பரமபதவாசல் கொண்ட ஒரே திருத்தலமுமான ஸ்ரீ புஷ்பவல்லி தாயார் சமேத அஷ்டபுஜ பெருமாள் கோவிலில், இந்த ஆண்டிற்கான சித்திரை மாத பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் மிக விமரிசையாகத் தொடங்கியது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவையொட்டி, இன்று அதிகாலை கோவில் கொடிமரத்திற்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பின்னர், கருடாழ்வார் உருவம் பொறிக்கப்பட்ட கொடியானது வேதமந்திரங்கள் முழங்க ஏற்றப்பட்டு, மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வெங்கடாத்திரி கொண்டை அலங்காரத்தில் வீதியுலா&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கொடியேற்றத்தைத் தொடர்ந்து, கோவில் அலங்கார மண்டபத்தில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியருடன் உற்சவர் ஆதிகேசவப் பெருமாள் எழுந்தருளினார். அப்போது சுவாமிக்கு வெங்கடாத்திரி கொண்டை அலங்காரம் செய்யப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முதல் நாளான இன்று மாலை, பெருமாள் கம்பீரமான சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா சென்றார். வரும் பத்து நாட்களும் காலை மற்றும் மாலை ஆகிய இருவேளைகளிலும் அன்ன வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறவுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;முக்கிய நிகழ்வுகள்: கருட சேவை மற்றும் தேரோட்டம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கருட சேவை உற்சவம் வரும் மே மாதம் 3-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நடைபெற உள்ளது. அன்று இரவு சுவாமி ஹனுமந்த வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். விழாவின் மற்றொரு சிறப்பம்சமான திருத்தேர் உற்சவம் (தேரோட்டம்) மே மாதம் 7-ம் தேதி காலை மிக விமரிசையாக நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விழா ஏற்பாடுகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்தோஷ்குமார், கோவில் செயல் அலுவலர், தீர்த்தகாரர்கள் மற்றும் உபயதாரர்கள் ஒருங்கிணைந்து சிறப்பான முறையில் செய்துள்ளனர். விழாவையொட்டி கோவிலில் மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளதுடன், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. பத்து நாட்களும் களைகட்டப்போகும் இந்த விழாவால் காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவில் பகுதி தற்போது ஆன்மீக மணம் கமழ்ந்து காணப்படுகிறது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/01/733a86948291f9cf83a71c1eb997de5c17776121114221319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[சோழர் காலத்து அற்புதம்: உலக வரைபடத்தில் சித்திரகுப்தருக்கு என இருக்கும் ஒரே ஒரு கோவில்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/kanchipuram-chitragupta-temple-history-chitra-pournami-2026-rituals-full-history-in-tamil-tnn-257987</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/kanchipuram-chitragupta-temple-history-chitra-pournami-2026-rituals-full-history-in-tamil-tnn-257987#respond</comments><pubDate>Thu, 30 Apr 2026 14:12:16 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/kanchipuram-chitragupta-temple-history-chitra-pournami-2026-rituals-full-history-in-tamil-tnn-257987</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span style=&quot;color: #ba372a;&quot;&gt;&lt;strong&gt;History of Chitragupta Temple Kanchipuram:&lt;/strong&gt; &lt;/span&gt;ஆன்மீக பூமியான காஞ்சிபுரத்தில் அத்தி வரதர், காமாட்சி அம்மன் போன்ற புகழ்பெற்ற சன்னதிகளுக்கு இடையே, மனித குலத்தின் செயல்களைக் கணக்கெடுக்கும் தெய்வமான சித்திரகுப்தருக்கு எனத் தனி ஆலயமிருப்பது பெரும் சிறப்பாகும். புராணங்களின்படி, இந்த உலகம் இயங்குவதற்குத் தர்மம் மிக முக்கியமானது. மனிதர்கள் பூமியில் வாழும் காலத்தில் செய்யும் நற்செயல்கள் மற்றும் தீய செயல்களைத் துல்லியமாகக் கணக்கிட்டு, அவர்கள் மரணத்திற்குப் பின் அதற்கேற்ற பலன்களை வழங்க எமதர்மனுக்கு ஒரு உதவியாளர் தேவைப்பட்டார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதற்காகச் சிவபெருமான், பார்வதி தேவி வரைந்த ஒரு அழகான ஓவியத்திற்கு உயிர் கொடுத்தார். சித்திரத்திலிருந்து தோன்றியதால் இவர் 'சித்திரகுப்தர்' என்று அழைக்கப்பட்டார். மற்றொரு வரலாற்றின்படி, சூரிய பகவானுக்கும் நீலா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர் என்றும், இவருடைய பிறப்பே தர்மத்தின் கணக்குகளைச் சரியாகப் பராமரிப்பதற்காகவே அமைந்தது என்றும் கூறப்படுகிறது. உலகெங்கிலும் எமதர்மனுக்குச் சில கோவில்கள் இருந்தாலும், அவருடைய கணக்காளரான சித்திரகுப்தருக்குத் தனியாகக் கோவில் இருப்பது காஞ்சிபுரத்தில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;h4 style=&quot;text-align: justify;&quot;&gt;கட்டடக்கலை மற்றும் மூலவரின் திருவுருவச் சிறப்பு&lt;/h4&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோவில், தென்னிந்தியக் கட்டடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், அமைதியான சூழலில் கருவறை அமைந்துள்ளது. அங்கே மூலவர் சித்திரகுப்தர், ஒரு கையில் எழுத்தாணியும் மறு கையில் ஏடும் ஏந்தி, மக்களின் பாவ-புண்ணியங்களை எழுதுவதற்குத் தயாராக இருக்கும் நிலையில் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இவருடைய கண்கள் மிகவும் கூர்மையாகவும், கருணை நிறைந்தும் காணப்படுகின்றன. மூலவருடன் அவரது துணைவியார் கர்ணகி அம்பாளும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தின் தூண்களிலும், சுவர்களிலும் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் சோழர் காலத்துத் திறமையை நமக்கு உணர்த்துகின்றன. கேது பகவானின் அதிதேவதையாக இவர் விளங்குவதால், இக்கோவில் ஒரு சிறந்த பரிகாரத் தலமாகவும் போற்றப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வழிபாட்டு முறைகளும் கேது தோஷ நிவர்த்தியும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஜோதிட சாஸ்திரப்படி, நவக்கிரகங்களில் ஞானம் மற்றும் மோட்சத்திற்கு அதிபதியான கேது பகவானுக்குச் சித்திரகுப்தரே அதிதேவதை ஆவார். எனவே, ஜாதகத்தில் கேது தோஷம் உள்ளவர்கள், நாக தோஷம் இருப்பவர்கள் மற்றும் ராகு-கேது பெயர்ச்சியால் பாதிப்புக்குள்ளானவர்கள் இக்கோவிலுக்கு வந்து சிறப்புப் பூஜைகள் செய்கின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;குறிப்பாக, கேது தசை நடப்பவர்கள் சித்திரகுப்தருக்குக் கொள்ளு தானியம் படைத்து, நீல நிற மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தடைகள் நீங்கி நற்பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும், கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்கள் மற்றும் கணக்குத் துறையில் (Chartered Accountants, Auditors) பணிபுரிபவர்கள் தங்கள் தொழிலில் மேன்மையடையவும், துல்லியமான அறிவு பெறவும் இங்கு வந்து பிரார்த்தனை செய்கின்றனர். நம்முடைய தீய எண்ணங்களை அழித்து, நல்வழியில் நடக்கத் தேவையான மனவலிமையை இத்தல வழிபாடு வழங்குகிறது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சித்ரா பௌர்ணமி மற்றும் ஆன்மீகப் பலன்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இக்கோவிலின் மிக முக்கியமான திருவிழா சித்ரா பௌர்ணமி ஆகும். ஆண்டுதோறும் சித்திரை மாதம் வரும் பௌர்ணமி அன்று, சித்திரகுப்தருக்குச் சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் மற்றும் திருக்கல்யாண உற்சவம் மிக விமரிசையாக நடைபெறும். அன்றைய தினம் பௌர்ணமி நிலவின் ஒளியில் இறைவனைத் தரிசிப்பது கோடி புண்ணியங்களைத் தரும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பல பக்தர்கள் அன்று உப்பு சேர்க்காத உணவை உண்டு விரதமிருந்து, தங்களின் பாவங்களை மன்னிக்குமாறு இறைவனிடம் வேண்டிக்கொள்வார்கள். &quot;தெரிந்தோ தெரியாமலோ செய்த பிழைகளைப் பொறுத்தருள்வாய்&quot; என்று சித்திரகுப்தரிடம் சரணடைவது இக்கோவிலின் பிரதான வேண்டுதலாகும். இக்கோவிலுக்குச் சென்று வழிபடுவதன் மூலம் மனநிம்மதி கிடைப்பதோடு, எதிர்காலத்தில் தவறுகள் செய்யாத வண்ணம் ஒரு தார்மீக ஒழுக்கம் நம்முள் பிறக்கிறது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு மிக அருகிலேயே அமைந்துள்ள இத்தலம், ஆன்மீகப் பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/30/db8896a176beb9593b27188bc174157117775385019011319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[பனை மரம் ஏறியபோது நேர்ந்த விபரீதம்: டிரான்ஸ்பார்மர் வெடித்து 2 மாணவர்கள் உயிரிழப்பு!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/shocking-incident-of-two-college-students-dying-after-a-transformer-exploded-while-they-were-climbing-a-palm-tree-in-sriperumbudur-kanchipuram-district-tnn-257974</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/shocking-incident-of-two-college-students-dying-after-a-transformer-exploded-while-they-were-climbing-a-palm-tree-in-sriperumbudur-kanchipuram-district-tnn-257974#respond</comments><pubDate>Thu, 30 Apr 2026 12:53:54 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/shocking-incident-of-two-college-students-dying-after-a-transformer-exploded-while-they-were-climbing-a-palm-tree-in-sriperumbudur-kanchipuram-district-tnn-257974</guid><description><![CDATA[&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சிறு மாங்காடு கிராமத்தில், கோடை காலத்தின் தாகத்தைத் தணிக்க பனை மரத்தில் நுங்கு பறிக்கச் சென்ற இரண்டு இளம் கல்லூரி மாணவர்கள், மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) வெடித்து சிதறியதில் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;சம்பவத்தின் பின்னணி என்ன?&lt;/h3&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரம் மாவட்டம் சிறு மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த டெல்லி கணேஷ் (17) மற்றும் தட்சணாமூர்த்தி (17) ஆகிய இருவரும் முதலாம் ஆண்டு கல்லூரி பயின்று வந்தனர். கோடை விடுமுறை மற்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், இன்று தங்களது நண்பர்களுடன் இணைந்து அப்பகுதியில் உள்ள விளைநிலங்களுக்கு அருகில் இருக்கும் பனை மரங்களில் நுங்கு பறிக்கச் சென்றுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;அங்குள்ள ஒரு பனை மரம், உயர் அழுத்த மின்சாரம் பாயும் மின்மாற்றிக்கு (டிரான்ஸ்பார்மர்) மிக அருகாமையில் இருந்துள்ளது. மாணவர்கள் ஆர்வத்துடன் பனங்காய் பறித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஒரு நுங்கு குலை அல்லது மட்டை அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் வயர்களில் சிக்கிக் கொண்டது.&lt;/p&gt;
&lt;h3 dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து&lt;/h3&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;மின் வயரில் சிக்கிய நுங்கை எடுக்க மாணவர்கள் முயன்றபோது, திடீரென பலத்த சத்தத்துடன் டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியது. இதில் உயர் அழுத்த மின்சாரம் மாணவர்கள் இருவர் மீதும் பாய்ந்ததோடு, பயங்கரமான தீப்பொறிகள் அவர்கள் உடல் முழுவதும் பரவியது. இதனால் நிலைதடுமாறிய இருவரும் உடல் கருகிய நிலையில் கீழே விழுந்து துடிதுடித்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்களது நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அலறல் சத்தம் எழுப்பியவாறு ஓடி வந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;h3 dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;மருத்துவமனையில் நேர்ந்த சோகம்:&lt;/h3&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த டெல்லி கணேஷ் மற்றும் தட்சணாமூர்த்தி ஆகிய இருவரையும் மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்து ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். அவர்களின் உடல் முழுவதும் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டதே உயிரிழப்பிற்கு முக்கியக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;h3 dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;காவல்துறை விசாரணை மற்றும் உறவினர்களின் கண்ணீர்:&lt;/h3&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த கோர விபத்து குறித்து சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர், மாணவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, மின்வாரியத்தின் கவனக்குறைவு ஏதேனும் உள்ளதா அல்லது எதிர்பாராமல் நடந்த விபத்தா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;கல்லூரிக்குச் சென்று எதிர்காலத்தில் சாதிக்க வேண்டிய இரண்டு இளம் மாணவர்கள், ஒரு சிறு கவனக்குறைவால் உயிரிழந்ததைக் கண்டு அவர்களது பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்கச் செய்தது. கிராமத்தில் நிலவும் இந்தத் துயரச் சூழல் ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மின்மாற்றிகளுக்கு அருகில் உள்ள மரங்களில் ஏறும்போதும் அல்லது விளையாடும்போதும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/30/3c64b00fd8a8446593bd454e3c10b3f417775337257611319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோவில் சித்திரை உத்திரப் பெருவிழா: திருத்தேர் உற்சவம் கோலாகலம்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/tirither-utsavam-was-held-with-great-pomp-and-show-at-the-kanchipuram-kachhabeswarar-temple-on-the-occasion-of-the-chithirai-uttara-festival-tnn-257943</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/tirither-utsavam-was-held-with-great-pomp-and-show-at-the-kanchipuram-kachhabeswarar-temple-on-the-occasion-of-the-chithirai-uttara-festival-tnn-257943#respond</comments><pubDate>Thu, 30 Apr 2026 10:26:32 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/tirither-utsavam-was-held-with-great-pomp-and-show-at-the-kanchipuram-kachhabeswarar-temple-on-the-occasion-of-the-chithirai-uttara-festival-tnn-257943</guid><description><![CDATA[&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள மிகப்பழமையான மற்றும் முக்கிய சிவத்தலங்களில் ஒன்று சுந்தராம்பிகை சமேத கச்சபேஸ்வரர் திருக்கோவிலாகும். இத்தலம் வரலாற்று ரீதியாகவும், புராண ரீதியாகவும் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது. குறிப்பாக, திருமால் 'கூர்ம' (ஆமை) அவதாரம் எடுத்து, சிவபெருமானை பூஜித்து வரம் பெற்ற தலம் என்பதால் இது 'கச்சபேஸ்வரர்' திருக்கோவில் என்று அழைக்கப்படுகிறது (கச்சபம் என்றால் ஆமை என்று பொருள்).&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;இத்தகைய பெருமை வாய்ந்த இந்த ஆலயத்தில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரை உத்திரப் பெருவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான உற்சவம் கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்று வருகிறது.&lt;/p&gt;
&lt;h3 dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;ஏழாம் நாள் உற்சவம்: திருத்தேரில் எழுந்தருளிய கச்சபேஸ்வரர்&lt;/h3&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;உற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான 7-ம் நாள் திருத்தேர் உற்சவம் இன்று அதிகாலை முதல் மிகுந்த பக்திப் பரவசத்துடன் நடைபெற்றது. சித்திரை உத்திரப் பெருவிழாவின் சிகர நிகழ்ச்சியாகக் கருதப்படும் இந்த தேர் திருவிழாவைக் காண காஞ்சிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். முன்னதாக, அதிகாலை வேளையில் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன. உற்சவர் கச்சபேஸ்வரர் மற்றும் சுந்தராம்பிகை அம்மனுக்கு பட்டு வஸ்திரங்கள் உடுத்தப்பட்டு, வண்ணமயமான மலர் மாலைகள் மற்றும் திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர்.&lt;/p&gt;
&lt;h3 dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;பக்தர்களின் 'அரோகரா' முழக்கத்துடன் வீதி உலா&lt;/h3&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;சிறப்பு வழிபாடுகளுக்குப் பிறகு, மேளதாளங்கள் மற்றும் மங்கல இசையுடன் சுவாமியும் அம்மனும் பிரம்மாண்டமான திருத்தேரில் எழுந்தருளினர். பின்னர், கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் &quot;தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி&quot; என்றும் &quot;அரோகரா&quot; என்றும் விண்ணதிர முழக்கமிட்டு திருத்தேரின் வடத்தைப் பிடித்து இழுத்தனர். அலங்கரிக்கப்பட்ட திருத்தேர், காஞ்சிபுரத்தின் முக்கிய வீதிகளான நான்கு ராஜ வீதிகளிலும் ஆடி அசைந்து வந்த காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. தேர் சென்ற வழியெங்கும் பக்தர்கள் தங்கள் வீடுகளின் வாசலில் கோலமிட்டு, தீபாராதனை காட்டி இறைவனை மனமுருகி வழிபட்டனர்.&lt;/p&gt;
&lt;h3 dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;ஆன்மீகப் பெருவிழாவில் பக்தர்களின் பங்கேற்பு&lt;/h3&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த தேர் திருவிழாவை ஒட்டி நகரின் முக்கிய வீதிகள் விழாக்கோலம் பூண்டிருந்தன. வழியெங்கும் பக்தர்களுக்கு நீர் மோர், அன்னதானம் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளியூர் பயணிகளும் இந்த ஆன்மீக நிகழ்வில் கலந்து கொண்டு கச்சபேஸ்வரரின் அருளைப் பெற்றனர். தேர் திருவிழாவிற்கான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் காவல் துறையினர் செய்திருந்தனர். திருத்தேர் நான்கு ராஜ வீதிகளையும் சுற்றி மீண்டும் நிலையை அடைந்தபோது, அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீண்டும் ஒருமுறை தீபாராதனை காட்டி வழிபட்டனர். இந்த சித்திரை உத்திரப் பெருவிழா வரும் நாட்களில் தீர்த்தவாரி மற்றும் இதர சிறப்புப் பூஜைகளுடன் நிறைவு பெற உள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/30/69a9ee9e5b8f116f74b7823072fec3df17775249381201319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[ஸ்ரீபெரும்புதூரில் சோகம்: மூடி இல்லாத செப்டிக் டேங்கில் விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழப்பு!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/3-year-old-boy-tragically-died-after-falling-into-a-septic-tank-in-sriperumbudur-kanchipuram-district-where-modi-was-not-present-tnn-257893</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/3-year-old-boy-tragically-died-after-falling-into-a-septic-tank-in-sriperumbudur-kanchipuram-district-where-modi-was-not-present-tnn-257893#respond</comments><pubDate>Wed, 29 Apr 2026 18:16:45 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/3-year-old-boy-tragically-died-after-falling-into-a-septic-tank-in-sriperumbudur-kanchipuram-district-where-modi-was-not-present-tnn-257893</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மேவலூர் குப்பம் கிராமத்தில், வீட்டு உரிமையாளரின் அலட்சியத்தால் செப்டிக் டேங்கில் விழுந்து மூன்றரை வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விளையாடிக்கொண்டிருந்தபோது நேர்ந்த விபரீதம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திண்டிவனம் அருகே உள்ள ஒமிப்பூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் &amp;ndash; கவிதா தம்பதியினர், வேலை நிமித்தமாக கடந்த 21 ஆண்டுகளாக மேவலூர் குப்பம் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தர்ஷன் (3&amp;frac12; வயது) என்ற ஒரே மகன் இருந்தான். கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி காலை 8 மணியளவில், சிறுவன் வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது திடீரென சிறுவன் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தந்தையின் கண்ணீர்ப் போராட்டம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தேடுதலின் போது, வீட்டின் அருகே இருந்த செப்டிக் டேங்க் மூடி இல்லாமல் திறந்து கிடப்பதைக் கண்டு பெற்றோர் சந்தேகமடைந்தனர். பதற்றமடைந்த தந்தை மோகன்ராஜ், உடனடியாக செப்டிக் டேங்கிற்குள் குதித்து தேடியபோது, உள்ளே மூழ்கியிருந்த குழந்தையை மீட்டு வெளியே கொண்டு வந்தார். உடனடியாக சிறுவனை ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், தர்ஷன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வீட்டு உரிமையாளரின் அலட்சியமே காரணம்?&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சம்பவம் நடந்த வீடு காட்டகரம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது. இந்த செப்டிக் டேங்க் நீண்ட நாட்களாகப் பாதுகாப்பற்ற முறையில் மூடி இல்லாமல் இருந்ததாகவும், இது குறித்து பலமுறை வீட்டு உரிமையாளரிடம் முறையிட்டும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததே தங்கள் மகனின் உயிரிழப்புக்குக் காரணம் என அவர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;காவல்துறை விசாரணை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஒரே மகனைப் பறிகொடுத்த தம்பதியினரின் கதறல் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, வீட்டு உரிமையாளரின் அலட்சியம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/29/95df446d459dc9d6c026317dbb7f006317774667736641319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தேசிய அளவிலான பேண்டி விளையாட்டு: தமிழகத்திற்கு முதலிடம் - காஞ்சிபுரம் வீரர்கள் 20 பதக்கங்களை வென்று சாதனை]]></title><link>https://tamil.abplive.com/sports/tamil-nadu-team-has-achieved-first-place-in-the-national-pandy-competition-tnn-257889</link><comments>https://tamil.abplive.com/sports/tamil-nadu-team-has-achieved-first-place-in-the-national-pandy-competition-tnn-257889#respond</comments><pubDate>Wed, 29 Apr 2026 17:46:31 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ விளையாட்டு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/sports/tamil-nadu-team-has-achieved-first-place-in-the-national-pandy-competition-tnn-257889</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கோவாவில் நடைபெற்ற 8-வது இந்திய அளவிலான பேண்டி (Bandy) விளையாட்டுப் போட்டியில், தமிழ்நாடு அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. இந்த வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய காஞ்சிபுரம் மாவட்ட வீரர்களுக்கு நகரில் உற்சாக வரவேற்பு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கோவாவில் நடந்த விறுவிறுப்பான போட்டிகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவாவில் 8-வது ஆண்டு தேசிய பேண்டி விளையாட்டுப் போட்டிகள் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்தத் தொடரில் ஹரியானா, தெலுங்கானா, குஜராத், பஞ்சாப் மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து 500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பல்வேறு வயதுப் பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட இந்தப் போட்டிகளில், மாநில அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;20 பதக்கங்களை அள்ளிய காஞ்சி ஸ்கேட்டிங் அகாடமி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்தின் சார்பாக இந்தப் போட்டியில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த காஞ்சி ஸ்கேட்டிங் அகாடமி வீரர்கள் பெருமளவில் பங்கேற்றனர். ஆண் மற்றும் பெண் என இருபாலரும் தங்களது அபாரமான திறமையை வெளிப்படுத்தி, தமிழக அணி முதலிடம் பிடிக்க உறுதுணையாக இருந்தனர். தனிப்பட்ட சாதனையாக காஞ்சிபுரம் வீரர்கள் 15 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம் (சில்வர்) என மொத்தம் 20 பதக்கங்களை வென்று குவித்து, பட்டு நகரமான காஞ்சிபுரத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;உற்சாக வரவேற்பு மற்றும் பாராட்டு விழா&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வெற்றி வாகை சூடி தாயகம் திரும்பிய வீரர்களைக் கௌரவிக்கும் விதமாக, காஞ்சி ஸ்கேட்டிங் அகாடமி வளாகத்தில் சிறப்பான பாராட்டு விழா நடைபெற்றது. அகாடமி நிறுவனர் பாபு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ரோட்டரி சங்க மூத்த நிர்வாகி முருகேசன், அகாடமி தலைவர் சீனிவாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். பயிற்சியாளர்கள் தமிழ், யுகேஷ் மற்றும் வீரர்களின் பெற்றோர்கள் முன்னிலையில், வெற்றி பெற்ற வீரர்களுக்குப் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு இனிப்புகள் வழங்கி வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விளையாட்டு நகரமாக மாறும் காஞ்சிபுரம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விழாவில் பேசிய முக்கியப் பிரமுகர்கள், காஞ்சிபுரம் ஏற்கனவே 'பட்டு நகரம்' மற்றும் 'கோயில் நகரம்' என்று உலகப்புகழ் பெற்றுள்ள நிலையில், தற்போது வீரர்களின் தொடர் வெற்றிகளால் 'விளையாட்டு நகரம்' என்ற புதிய அடையாளத்தைப் பெற்று வருவதாக மகிழ்ச்சி தெரிவித்தனர். சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் விளையாட்டில் ஆர்வம் காட்டி, சர்வதேச அளவில் காஞ்சிபுரத்தின் பெயரை நிலைநாட்ட வேண்டும் என அவர்கள் ஊக்கப்படுத்தினர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஒலிம்பிக் கனவு: விரைவில் அறிவிப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த விழாவின் முத்தாய்ப்பாக ஒரு முக்கியத் தகவல் பகிரப்பட்டது. கோவா போட்டியில் சிறந்து விளங்கிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மூன்று வீரர்கள், குளிர்கால பேண்டி ஒலிம்பிக் (Winter Bandy Olympics) போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாகப் பயிற்சி நிறுவனம் தெரிவித்தது. இந்தத் தகவல் காஞ்சிபுரம் விளையாட்டு ஆர்வலர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/29/31bd6b0ae2114c8b92957ed2e2bb011717774649391971319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[பெருமாள் பிறந்தநாளிலேயே இப்படியா? காஞ்சி வரதராஜர் கோவில் கருவறை முன் மோதல் - போலீசார் குவிப்பு!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/devotees-were-shocked-after-a-clash-broke-out-between-two-groups-during-the-kanchipuram-varadaraja-perumal-avatar-utsavam-and-the-singing-of-hymns-tnn-257833</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/devotees-were-shocked-after-a-clash-broke-out-between-two-groups-during-the-kanchipuram-varadaraja-perumal-avatar-utsavam-and-the-singing-of-hymns-tnn-257833#respond</comments><pubDate>Wed, 29 Apr 2026 11:13:09 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/devotees-were-shocked-after-a-clash-broke-out-between-two-groups-during-the-kanchipuram-varadaraja-perumal-avatar-utsavam-and-the-singing-of-hymns-tnn-257833</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரம் அத்திகிரி வரதராஜ பெருமாள் திருக்கோவிலில், பெருமாளின் திரு அவதார உற்சவம் (பிறந்தநாள் விழா) இன்று காலை மிகச் சிறப்பாகத் தொடங்கியது. இந்த நன்னாளையொட்டி, மூலவர் தேவராஜ சுவாமிக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்யக் காத்திருந்த நிலையில், எதிர்பாராத விதமாக இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு நிலவியது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;உரிமை கோரி வாக்குவாதம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வழக்கத்தின்படி, பெருமாளின் கருவறை மண்டபத்தில் அமர்ந்து தாதாச்சாரியார் பிரிவினர் ஸ்தோத்திரப் பாடல்களைப் பாடுவது காலங்காலமாக நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், இன்று நடைபெற்ற உற்சவத்தின் போது, தங்களுக்கும் ஸ்தோத்திரப் பாடல்களைப் பாட உரிமை வழங்க வேண்டும் என்று தென்கலை ஐயங்கார் பிரிவினர் திடீரென கோரிக்கை விடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வழிபாட்டு முறையில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கருவறை முன்னே போலீஸ் குவிப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் ஒருகட்டத்தில் ஆக்ரோஷமாக மாறியது. சாமி கருவறை முன்பே இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் சாடிக்கொண்டதால் அசாதாரண சூழல் நிலவியது. நிலைமை கைமீறிச் செல்வதைத் தவிர்க்க, உடனடியாகத் திருக்கோவில் வளாகத்திலும், குறிப்பாகக் கருவறை மண்டபப் பகுதியிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசாரின் தலையீட்டிற்குப் பிறகும் இரு தரப்பினரும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் நீண்ட நேரம் பதற்றம் நீடித்தது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பக்தர்கள் அதிருப்தி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பெருமாளின் அவதார தினமான இன்று, அவரது புகழைப் பாடும் பாடல்களைப் பாடுவதில் பக்தியோடு செயல்பட வேண்டிய இரு தரப்பினரும், உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்டு மோதிக்கொண்டது அங்கு வந்திருந்த பக்தர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. &quot;பெருமாளின் திருநாளில் பக்திக்கு முக்கியத்துவம் தராமல், வீண் தகராறில் ஈடுபட்டது வருத்தமளிக்கிறது&quot; எனப் பக்தர்கள் முகம் சுளித்தபடி அங்கிருந்து சென்றனர். இந்த மோதல் சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/29/583c4e569f53bf2e0df06fd4b52c0ee617774412908911319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[திருமண ஆசை நிறைவேறவில்லையா? வல்லக்கோட்டை முருகன் கோயில் கல்யாணப் பரிகாரம் பற்றி தெரியுமா? ]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/devotees-thronged-the-temple-for-the-wedding-auspicious-ceremony-at-the-murugan-temple-in-vallakottai-kanchipuram-district-tnn-257817</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/devotees-thronged-the-temple-for-the-wedding-auspicious-ceremony-at-the-murugan-temple-in-vallakottai-kanchipuram-district-tnn-257817#respond</comments><pubDate>Wed, 29 Apr 2026 09:01:34 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/devotees-thronged-the-temple-for-the-wedding-auspicious-ceremony-at-the-murugan-temple-in-vallakottai-kanchipuram-district-tnn-257817</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு செவ்வாய்க்கிழமையினை முன்னிட்டு கருவறையில் ஏழு அடி உயரத்தில் காட்சிதரும் முருகப்பெருமான் மஞ்சள் சாமந்தி வெற்றிலை மாலைகள் அணிந்து காட்சியளித்தார். வல்லன் எனும் அசுரனை முருகப்பெருமான் அழித்து கோயில் கொண்டமையால் இத்தலம் வல்லக்கோட்டை என்று வழங்கப்படுகிறது. சத்ரு சம்கார யாகம் செய்து வழிபடுவது இங்கு பரிகார சிறப்பாகும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வல்லக்கோட்டை கல்யாண பரிகாரத் தளம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இத்தலம் திருப்புகழ் பாடப்பெற்றதாகும். தேவர்களின் தலைவன் இந்திரன் வந்து வழிபட்டு இந்திராணியை கல்யாணம் செய்து கொண்ட புராண சிறப்பு வாய்ந்தமையால் வல்லக்கோட்டை கல்யாண பரிகாரத் தலமாக உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வாரந்தோறும் இங்கு கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது. இதில் கல்யாண வரம்வேண்டி பிரார்த்தனை செய்தவர்களும் கல்யாணம் முடிந்தவர்களும் பெருமளவில் வந்து கலந்து கொள்கின்றனர். அதனால் வந்தாரை வாழ வைக்கும் வல்லக்கோட்டை முருகன் என்ற சிறப்பு இத்தலத்திற்கு உண்டு.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;திரை பிரபலங்கள் வழிபடும் முருகர் கோயில்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும் சினிமா நடிகர்களும், சின்னத்திரை கலைஞர்களும், அரசியல் பிரமுகர்களும் வந்து வழிபட்டு வளர்ச்சிடைந்துள்ளனர். புதிய சினிமா படத்தைத் தொடங்குவதற்கு முன்னர் இங்கு வந்து திரைப் பிரபலங்கள் வழிபடுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கு செவ்வாய் கிழமையினை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டு கோ பூஜை செய்யப்பட்டது. பிறகு மூலவருக்கு பால் தயிர் மஞ்சள் விபூதி முதலிய பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று மஞ்சள் சாமந்தி வெற்றிலை மாலை அலங்காரம் செய்யப்பட்டது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனைத்தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அரோகரா கோஷத்துடன் திரளான பக்தர்கள் வந்து வல்லக்கோட்டை முருகனை வழிபட்டனர். உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு காலையில் பால் அபிஷேகம் செய்யப்பட்டு இரத்தினாங்கி மஞ்சள் சாமந்தி படிமாலை அணிந்து காட்சியளித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காலை 9 மணிக்கு உற்சவர் கோடையாண்டவருக்கு கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருமண மாலை அணிந்து கொண்டு கலந்து கொண்டனர். முருகப்பெருமானின் அட்சதையும் இரட்சையும் பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த உற்சவத்தில் இந்துசமய அறநிலையத்துறை காஞ்சிபுரம் துணை ஆணையர் திருமதி.மா.ஜெயா அவர்கள் கலந்து கொண்டு வந்திருந்த பக்தர்களிடம் குறைகளைக் கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்திட அறிவுரை வழங்கினார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கோவில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கல்யாண உற்சவம் முடிந்தபிறகு மணக்கோலத்தில் முருகப்பெருமான் திருக்கோயில் பிரகாரத்தில் மூன்றுமுறை வலம்வந்தார். முருகனுக்கு உகந்த செவ்வாய்கிழமையாதலால் திரளான பக்தர்கள் வல்லக்கோட்டைக்கு வந்திருந்தனர். அவர்களுக்குத் தேவையான குடிநீர் முதலிய அடிப்படை வசதிகளை திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். உற்சவத்திற்கான ஏற்பாடுகளை மண்டல இணை ஆணையர் சி.குமரதுரை அறிவுரைப்படி, திருக்கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் ஜா. செந்தில்தேவ்ராஜ், அறங்காவலர்கள் த.விஜயகுமார், கலைச்செல்வி கோபால், கே.மோகனகிருஷ்ணன், பு.செல்வகுமரன் செய்திருந்தனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/29/8aad956998cd0c48e2d2ad6fb69b847217774333960081319_original.jpg" width="220"/></item></channel></rss>