மேலும் அறிய

பீகார் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு 2025

(Source:  Poll of Polls)

135 லிட்டர் தண்ணி தான்! ஸ்மார்ட் மீட்டர் மூலம் குடிநீர் சிக்கலுக்கு தீர்வு? முழு விவரம்!

Kanchipuram Water Meter: காஞ்சிபுரம் மாநகராட்சியில் குடிநீர் பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி, காஞ்சிபுரத்தில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி தீவிரம்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் குடிநீர் மீட்டர் பொருத்தும் பணிகள் நடைபெற்ற வருகின்றன.

காஞ்சிபுரம் மாநகராட்சி - Kanchipuram Corporation 

தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் நகரங்களில் காஞ்சிபுரம் முக்கிய நகரமாக இருந்து வருகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. விரைவில் காஞ்சிபுரம் மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் கூடுதல் பகுதிகள் இணைக்கப்பட்டு, பெரிய மாநகராட்சியாக உருவெடுக்க உள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சி பொருத்தவரை, தற்போதைய சூழலில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி குடிநீர் பிரச்சினை

காஞ்சிபுரம் மாநகராட்சியை பொருத்தவரை குடிநீர் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. பல இடங்களில் முறையாக குடிநீர் விநியோகம் செய்வது கிடையாது என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. ஒரு சில இடங்களில் கழிவுநீர் கலந்த குடிநீர் வருவதாகவும், அவ்வப்போது பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சியை பொருத்தவரை நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு, 135 லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால் போதிய அளவு நீர் கிடைக்காததால், காஞ்சிபுரம் மாநகராட்சி மக்களுக்கு சராசரியாக 90 லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு தற்போது நாள் ஒன்றுக்கு, 23 பில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு குடிநீர் தேவை அதிகரிப்பு

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு திருப்பாற்கடல் மற்றும் ஓரிக்கை ஆகிய இரு பாலாறு திட்டங்கள் வாயிலாக குடிநீர் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்திற்கு இந்த திட்டம் போதுமானதாக இருக்காது என்பது கணிப்பாக இருந்து வருகிறது. இன்னும் 10 ஆண்டுகளில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கும் மாநகராட்சியாக உருவெடுக்கும்.

அப்போது காஞ்சிபுரம் மாநகராட்சியின் குடிநீர் தேவை 59 மில்லியன் லிட்டராக இருக்கும் என அதிகாரிகள் கணக்கெடுத்துள்ளனர்.‌எதிர்வரும் காலத்தை கருத்தில் கொண்டு 318 கோடி ரூபாயில் குடிநீர் மேம்பாட்டு திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மூன்று குடிநீர் சேகரிப்புக்குணர்கள், 5 ஆழ்துளை கிணறுகள், 6 நீர் உறிஞ்சு கிணறுகள், 431 கிலோமீட்டர் பகிர்மான குழாய்கள், 14 கிலோமீட்டர் தூரத்திற்கு பிரதான குழாய்கள் அமைக்கப்பட உள்ளன. 

புதிய குடிநீர் இணைப்புகள்

காஞ்சிபுரம் மாநகராட்சி பொருத்தவரை தற்போது குடியிருப்பு மற்றும் வணிக ரீதியாக 32,687 குடிநீர் இணைப்புகள். காஞ்சிபுரம் மாநகராட்சியில், புதிதாக 14,000 குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட உள்ளன. இவை 55 ஆயிரம் குடிநீர் இணைப்புகளாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே 94 குடிநீர் தொட்டிகள் மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கூடுதலாக 14 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட உள்ளன. இதுபோக காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு பகுதிகளில் புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு, ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி

ஸ்மார்ட் மீட்டர் மூலம் ஒரு குடும்பத்தில் இருக்கும் ஒருவருக்கு தல 135 லிட்டர் குடிநீர் முறையாக வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படுவதால், கூடுதல் குடிநீர் திருட்டு தடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

நவீன முறையில் குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்படுவதால், பூமிக்கு அடியில் இருந்து குடிநீர் குழாய் வழியாக தண்ணீர் திருடுவதும் தடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே போன்று தற்போது இருக்கும் நடைமுறையில், ஒரு சில இடங்களில் கழிவுநீருடன் குடிநீர், கலக்கக்கூடிய அவல நிலை ஏற்படுவதாகவும், இந்தக் குடிநீர் குழாய் மூலம் அவை தடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகள் ஆய்வு

இந்தநிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 32 வார்டு பகுதியில் காஞ்சிபுரம் 3வது மண்டல தலைவர் சாந்தி சீனிவாசன் மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சி பணிகள் குழு தலைவர் கார்த்தி ஆகியோர் அதிகாரிகளுடன் இன்று ஆய்வு மேற்கொண்டார். பணிகள் முறையாக நடைபெற வேண்டும், ஸ்மார்ட் மீட்டர்கள் முறையாக பொருத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.   

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Bihar Exit Poll Result: பீகாரில் அரியணை ஏறப்போவது யார்.? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்; மீண்டும் பாஜக.?
பீகாரில் அரியணை ஏறப்போவது யார்.? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்; மீண்டும் பாஜக.?
Bihar Election Record Polling: பீகாரில் வரலாறு காணாத வாக்குப்பதிவு; 2-ம் கட்டத்தில் 67%; ஆட்சியை பிடிக்கப் போவது யார்.?
பீகாரில் வரலாறு காணாத வாக்குப்பதிவு; 2-ம் கட்டத்தில் 67%; ஆட்சியை பிடிக்கப் போவது யார்.?
Bihar Election 2nd Phase: பின்னியெடுக்கும் 2-ம் கட்ட வாக்குப்பதிவு; பிற்பகல் 3 மணி வரை 60.40% - மாற்றத்தை நோக்கி பீகார்.?
பின்னியெடுக்கும் 2-ம் கட்ட வாக்குப்பதிவு; பிற்பகல் 3 மணி வரை 60.40% - மாற்றத்தை நோக்கி பீகார்.?
குடும்பத்தையே பிரித்த ஆதவ் ஆர்ஜூனா... தூக்கி எறிந்த திமுக, விசிக- உண்மையை போட்டுடைக்கும் சார்லஸ் மார்ட்டின்
குடும்பத்தையே பிரித்த ஆதவ் ஆர்ஜூனா... தூக்கி எறிந்த திமுக, விசிக- உண்மையை போட்டுடைக்கும் சார்லஸ் மார்ட்டின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Terrorist Umar Mohammed Profile| பாகிஸ்தானின் SLEEPER CELL பழிதீர்க்க வந்த பயங்கரவாதியார் இந்த உமர்?
Delhi Car Blast CCTV | டெல்லி கார் குண்டு வெடிப்புபின்னணியில் காஷ்மீர் மருத்துவர்?சிசிடிவி காட்சிகள்
ஆட்டோ, விசில், பேட்... விஜய்யின் 10 சின்னம்! தேர்தல் ஆணையத்தில் தவெக
மழைக்கு ரெடியா? நவம்பர் நிலைமை என்ன?வெதர்மேன் அப்டேட்
Delhi Car Blast | செங்கோட்டை அருகேவெடித்து சிதறிய கார்பதற்றத்தில் டெல்லி!பரபரப்பு காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bihar Exit Poll Result: பீகாரில் அரியணை ஏறப்போவது யார்.? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்; மீண்டும் பாஜக.?
பீகாரில் அரியணை ஏறப்போவது யார்.? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்; மீண்டும் பாஜக.?
Bihar Election Record Polling: பீகாரில் வரலாறு காணாத வாக்குப்பதிவு; 2-ம் கட்டத்தில் 67%; ஆட்சியை பிடிக்கப் போவது யார்.?
பீகாரில் வரலாறு காணாத வாக்குப்பதிவு; 2-ம் கட்டத்தில் 67%; ஆட்சியை பிடிக்கப் போவது யார்.?
Bihar Election 2nd Phase: பின்னியெடுக்கும் 2-ம் கட்ட வாக்குப்பதிவு; பிற்பகல் 3 மணி வரை 60.40% - மாற்றத்தை நோக்கி பீகார்.?
பின்னியெடுக்கும் 2-ம் கட்ட வாக்குப்பதிவு; பிற்பகல் 3 மணி வரை 60.40% - மாற்றத்தை நோக்கி பீகார்.?
குடும்பத்தையே பிரித்த ஆதவ் ஆர்ஜூனா... தூக்கி எறிந்த திமுக, விசிக- உண்மையை போட்டுடைக்கும் சார்லஸ் மார்ட்டின்
குடும்பத்தையே பிரித்த ஆதவ் ஆர்ஜூனா... தூக்கி எறிந்த திமுக, விசிக- உண்மையை போட்டுடைக்கும் சார்லஸ் மார்ட்டின்
TVK VIJAY: விஜய்க்கு கிடைக்கப்போவது இந்த சின்னமா.?  தேர்தல் ஆணையத்தில் லிஸ்ட்டை கொடுத்த தவெக
விஜய்க்கு கிடைக்கப்போவது இந்த சின்னமா.? தேர்தல் ஆணையத்தில் லிஸ்ட்டை கொடுத்த தவெக
SC on SIR Ban: SIR-க்கு தடை கோரிய வழக்கு; தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க உத்தரவு; பணிகள் தொடரலாம் - உச்சநீதிமன்றம்
SIR-க்கு தடை கோரிய வழக்கு; தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க உத்தரவு; பணிகள் தொடரலாம் - உச்சநீதிமன்றம்
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
Tasmac: மதுப்பிரியர்களுக்கு குஷி.! இனி ஒரு ரூபாய் கூட கூடுதலாக வாங்க முடியாது- டாஸ்மாக்கில் அசத்தலான திட்டம் அறிமுகம்
மதுப்பிரியர்களுக்கு குஷி.! இனி ஒரு ரூபாய் கூட கூடுதலாக வாங்க முடியாது- டாஸ்மாக்கில் அசத்தலான திட்டம் அறிமுகம்
Embed widget