மேலும் அறிய

தீபாவளி பட்டாசு விற்பனை களைகட்டுது! காஞ்சிபுரம் மக்கள் மகிழ்ச்சி! சீக்கிரமா போய் வாங்கிடுங்க!

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விற்பனை சூடு பிடித்துள்ளது- விற்பனையாளர்கள், உரிமையாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

தீபாவளியை முன்னிட்டு - வாலாஜாபாத் மற்றும் காஞ்சிபுரம் பகுதியில் எ பட்டாசு கடைகளில், பொதுமக்கள் குவிய தொடங்கியுள்ளனர். 

தீபாவளி பண்டிகை

தீபாவளி நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் பட்டாசு கடைகளில் வியாபாரம் களைகட்டி வருகின்றது. கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு கடையில் பெரிதளவில் விற்பனையாகாமல் வியாபாரம் குறைவாகவே இருந்தது.

பட்டாசு கடைகளில் குவியும் மக்கள்

இந்நிலையில் இந்த ஆண்டு கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடுகையில் பட்டாசு கடைகளில் விற்பனை களைகட்டி வருகிறது. இந்த ஆண்டு சிறியவர் முதல் பெரியவர்கள் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பல ரகங்களில் பல விதமான பட்டாசுகள் விற்பனைக்காக குவிந்துள்ளன.

காஞ்சிபுரம், வாலாஜாபாத் சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து கண்கவரும் பட்டாசுகளை வாங்கி செல்கின்றனர். இதனால் காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் பகுதியில் உள்ள பட்டாசு கடைகளில் பட்டாசுகளின் விற்பனை களைகட்டி வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 75 கடைக்கு அனுமதி

இதுகுறித்து விற்பனையாளர் தெரிவிக்கையில், இன்னும் இரண்டு நாட்கள்தான் உள்ள நிலையில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவரும் வகையில் 200க்கும் மேற்பட்ட வகையான பட்டாசுகள் புது வரவாக வந்துள்ளன. நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து காண்பதால் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. இதனால் இந்த ஆண்டு வியாபாரிகளும் விற்பனையாளர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என தெரிவித்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 75 கடைகளுக்கு பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது‌.

பொதுமக்கள் செய்யக்கூடாதது என்ன ? 

பாதுகாப்பான தீபாவளிக்கு பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை

1. பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.

2. மாவட்ட நிர்வாகம் / உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை

1. அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.

2. மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

3. குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget