மேலும் அறிய

"இலக்க இன்னும் அடையல" ஓய்வை திரும்பப் பெறுகிறாரா வினேஷ் போகத்.. உருக்கமான கடிதம்!

தொடர் சவால்களை சந்தித்து வரும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட உடனேயே ஓய்வை அறிவித்திருக்க கூடாது என அதில் குறிப்பிட்டுள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே ஓய்வை அறிவித்திருக்க கூடாது என்றும் வேறுவிதமான சூழ்நிலை இருந்திருந்தால் 2032 வரை விளையாடி இருப்பேன் என்றும் வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தின் 50 கிலோ எடை பிரிவில் இறுதி போட்டி வரை சென்று அசத்திய வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். உலகின் முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி இறுதி போட்டி வரை சென்றபோதிலும், போட்டிக்குரிய எடையை விட 100 கிராம் அதிகளவு இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

வினேஷ் போகத் எழுதிய உருக்கமான கடிதம்: இந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள் மற்றொரு சோகம் இந்திய ரசிகர்களுக்கு ஏற்பட்டது. மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்தார். இடி மேல் இடியாக மற்றொரு செய்தி வெளியானது. வெள்ளி பதக்கம் கோரி அவர் சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

தொடர் சவால்களை சந்தித்து வரும் வினேஷ் போகத், உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட உடனேயே ஓய்வை அறிவித்திருக்க கூடாது என்றும் வேறு சூழல் இருந்திருந்தால் 2032ஆம் ஆண்டு வரை விளையாடி இருப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.

வினேஷ் போகத் எழுதியுள்ள அந்த கடிதத்தில், "மல்யுத்தப் போராட்டத்தின் போது, ​​இந்திய பெண்களின் புனிதம், நமது இந்தியக் கொடியின் புனிதம், விழுமியங்களை பாதுகாக்க நான் கடுமையாகப் போராடினேன்.

ஆனால், 2023ஆம் ஆண்டு, மே 28ஆம் தேதி முதல் இந்தியக் கொடியுடன் நான் இருக்கும் படங்களைப் பார்க்கும்போது, ​​அது என்னை ஆட்டிப்படைக்கிறது. இந்த ஒலிம்பிக்கில் இந்தியக் கொடி உயரத்தில் பறக்க வேண்டும். விழுமியத்தை பிரதிபலிக்கும் புனிதத்தை மீட்டெடுக்கும் இந்தியக் கொடியுடன் நான் இருக்கும் படத்தை எடுக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.

ஓய்வை திரும்பப் பெறுகிறாரா? இப்படிச் செய்வதன் மூலம் கொடிக்கு நடந்ததும், இந்தியாவில் மல்யுத்த விளையாட்டுக்கு நடந்ததும் தவறு என உணர்த்த விரும்பினேன். அதை என் சக இந்தியர்களுக்குக் காட்ட வேண்டும் என்று நான் உண்மையில் எதிர்பார்த்தேன்.

சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால், அதை வெளிப்படுத்த வார்த்தைகள் போதுமானதாக இல்லை. நேரம் கிடைக்கும்போது நான் மீண்டும் பேசுவேன். ஆகஸ்ட் 6ம் தேதி இரவும், ஆகஸ்ட் 7ம் தேதி காலையும் நான் விட்டுகொடுக்கவில்லை. முயற்சிகள் நிற்கவில்லை. சரணடையவில்லை. ஆனால், நேரம் நின்றுவிட்டது. காலம், நியாயமானதாக இருக்கவில்லை. எனது தலைவிதியும் அப்படிதான்.

எனது குழுவிற்காக எனது சக இந்தியர்களுக்காக எனது குடும்பத்தினருக்காக, நான் உழைத்துக்கொண்டிருந்த இலக்கு, அடையத் திட்டமிட்டது நிறைவேறாதது போல் உணர்கிறேன். ஏதோ, ஒன்று எப்போதும் காணாமல் போனது போல் உணர்கிறேன். விஷயங்கள் மீண்டும் அப்படியே நடக்கபோவதில்லை.

வேறு சூழல் இருந்திருந்தால், 2032 வரை நான் விளையாடி இருப்பேன். ஏனென்றால், எனக்குள் போராட்டமும் என்னுள் மல்யுத்தமும் எப்போதும் இருக்கும். எதிர்காலம் என்ன, அடுத்த பயணத்தில் எனக்கு என்ன காத்திருக்கிறது என்பதை என்னால் கணிக்க முடியாது. ஆனால், நான் எதை நம்புகிறேனோ, சரியான விஷயத்திற்காக எப்போதும் போராடுவேன் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
ABP Premium

வீடியோ

Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Embed widget