"அரசியல் கொரோனா.. சமூகத்துல ஊடுருவி போச்சு" துணை ஜனாதிபதி தன்கர் பரபர கருத்து!
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வெளிப்பாடுகள் மூலம் இந்திய நாட்டின் ஜனநாயக செயல்முறையை மாற்றியமைக்க முயன்றது தெரிய வருகிறது என துணை ஜனாதிபதி தன்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியலையும் சமூகத்தையும் அரசியல் கொரோனா பாதித்து, ஜனநாயகத்தை பலவீனப்படுத்தியுள்ளதாக குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் பல்வேறு நாடுகளுக்கு அளிக்கப்பட்டு வந்த நிதியுதவிகளை நிறுத்துவதாக புதிதாக பொறுப்பேற்ற ட்ரம்ப் அரசு அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க, அமெரிக்கா சார்பில் வழங்கப்பட்டுவந்த 21 மில்லியன் டாலர் நிதி உதவியை நிறுத்துவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.
துணை ஜனாதிபதி தன்கர் என்ன பேசினார்?
இந்திய தேர்தலில் தலையிட்டு, வேறு யாரையாவது வெற்றி பெற வைக்க ஜோ பைடன் நிர்வாகம் முயன்றிருக்கலாம் என யூகிப்பதாகக் கூறி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
ட்ரம்பின் குற்றச்சாட்டுகள் குறித்து பேசிய குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர், "இதனால் திகைத்துப் போனேன். ட்ரம்பின் வெளிப்பாடுகள் மூலம் இந்த நாட்டின் ஜனநாயக செயல்முறையை மாற்றியமைக்க முயன்றது தெரிய வருகிறது.
"ஜனநாயகத்தை சீர்குலைக்கிறார்கள்"
தேர்ந்தெடுக்கும் உரிமை இந்திய மக்களுக்கு மட்டுமே உண்டு. அந்த செயல்முறையை யாரேனும் மாற்றினால் அல்லது கட்டுப்படுத்தினால் அவர்கள் நமது ஜனநாயக விழுமியங்களை மட்டுப்படுத்தாகும். அந்த செயல்பாட்டின் மூலம் நமது ஜனநாயகத்தை சீர்குலைக்கிறார்கள். நம்மை அடிமைத்தனத்திற்கு கீழ்ப்படுத்துகிறார்கள்.
The latest that has come as a shocking expose is by the President of the United States.
— Vice-President of India (@VPIndia) February 21, 2025
He said that fiscal muscle was used, funds were pumped in to doctor and manipulate our democratic result. He has gone to the extent of saying, I must give my thought on it, that someone else… pic.twitter.com/yChX2bLVYh
அரசியல் கோவிட் நமது சமூகத்திற்குள் ஊடுருவி நமது ஜனநாயகத்தை அழிக்கிறது. இந்த மோசமான செயல் குறித்து பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த தீங்கு விளைவிக்கும் உத்தியால் பயனடைந்த அனைவரும் வெட்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். முழுமையாக அம்பலப்படுத்தப்பட வேண்டும்.
நமது அரசியலமைப்புச் சட்டப் பணியாளர்கள், அது ஜனாதிபதி, துணை ஜனாதிபதி அல்லது பிரதமராக இருந்தாலும் சரி, அவர்களை கேலி செய்யும் போக்கு இருக்கிறது. இவை அரசியல் பதவிகள் அல்ல, இவை நமது நிறுவனங்கள். மக்கள் குறைந்தபட்ச மரியாதையைக் கூட காட்டத் தவறிவிடுகிறார்கள்" என்றார்.





















