உத்தர பிரதேச மாநிலத்தில் அரசு பணியாளர்கள் தங்களின் அசையும் அசையா சொத்து விவரங்களை ஆக.,31-ம் தேதிக்குள் சமர்பிக்காவிட்டால் இந்த மாதம்  சம்பளம் வழங்கப்படாது என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 


அரசு நிர்வாகத்தில் நடக்கும் ஊழலை தடுக்கும் வகையில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு புதிய கடந்தாண்டு (2023) ஆகஸ்ட் மாதம் புதிய உத்தரவை பிறப்பித்தது. அதன் படி, அரசு வேலை செய்பவர்கள் அனைவரும் தங்களது அசையும், அசையா சொத்து விவரங்களை அரசின் இணையதளமான Manav Sampada என்பதில் டிசம்பர் 31,2023-க்குள் சமர்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது. ஆனால், பெரும்பாலான பணியாளர்கள் விவரங்களை தாக்கல் செய்யாததால் அதற்கான கால அவசாகம் இந்தாண்டு (2024) ஜூன் 30- வரை நீட்டிக்கப்பட்டது; தொடர்ந்து ஜூலை 31 கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டது. இறுதியான ஆகஸ்ட் 31,ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 31-ம் தேதிக்குள் விவரங்களை ஆன்லைன் சமர்பிக்காவிட்டால் அரசு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என்று முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் அறிவித்துள்ளார். மேலும், யாரெல்லாம் விவரங்களை சமர்பிக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுவரை 26 சதவிகிதம் பேர் மட்டுமே தங்களது சொத்து விவரங்களை அரசின் இணையதளத்தில் பதிவிட்டிருக்கின்றனர். இன்னும் 13 லட்சம் பேர் அவர்களின் சொத்து விவரங்களை அளிக்கவில்லை. அரசு பலமுறை காலக்கெடுவை நீட்டித்தும் அரசு ஊழியர்கள் தங்களது சொத்து பற்றிய தகவல்களை தாக்கல் செய்யாத காரணத்தால் இப்போது இறுதியாக புதிய காலக்கெடுவை அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக மாநில தலைமைச் செயலாளர் மனோஜ் குமார் பிறப்பித்துள்ள உத்தரவில், ஆக்ஸ்ட் 31-ம் தேதிக்குள் அரசு ஊழியர்கள் தங்களது சொத்து விவரங்களை தெரிவிக்கவில்லை எனில், அவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் சம்பளம் வழ்னக்கப்பட்டது என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 


அரசின் இந்த நடவடிக்கைக்கு சமாஜ்வாடி கட்சி விமர்சனம் செய்துள்ளது. அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் Ashutosh Verma ,” மாநில அரசு இந்தத் திட்டத்தை 2017-ம் ஆண்டு ஏன் கொண்டுவரவில்லை. தங்களின் அரசு பணியாளர்கள் ஊழல்வாதிகள் என்று அரசு புரிந்துகொண்டுள்ளது. எனவே, இப்போது இந்த முடிவுக்கு வந்துள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.