ஒரு ரூபாய்க்கு ஆக்சிஜன் நிரப்பித்தரும் உத்தர பிரதேச தொழிலதிபர்..

“நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டேன். அந்தக் கஷ்டம் எனக்குப் புரியும் அதனால்தான் மிகக்குறைந்த விலைக்கு ஆக்சிஜன் நிரப்பித் தருகிறேன்" என்கிறார் மனோஜ் குப்தா

Continues below advertisement

உத்திரப்பிரதேச மாநிலம் சுமேர்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் மனோஜ் குப்தா ரூ.1-க்கு, தனது தொழிற்சாலையிலிருந்து ஆக்சிஜன் நிரப்பித் தந்துவருகிறார். இதுவரை 1000 சிலிண்டர்கள் வரை நிரப்பிக் கொடுத்துள்ளார்.

Continues below advertisement

கருப்புச் சந்தையில் ரூ. 30,000-க்கு மேல் ஆக்சிஜன் விற்கப்பட்டுவரும் நிலையில் அவரது இந்த சேவை பாராட்டப்பட்டு வருகிறது.  இதுகுறித்து மனோஜ் பேசுகையில், “நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டேன். அந்தக் கஷ்டம் எனக்குப் புரியும் அதனால்தான் மிகக் குறைந்த விலைக்கு ஆக்சிஜன் நிரப்பித் தருகிறேன். எனது தொழிற்சாலையில் நாளொன்றுக்கு 1000 சிலிண்டர்கள் நிரப்பும் திறன் இருக்கிறது” என்றார். உத்தரப்பிரதேசம் கடும் ஆக்சிஜன் நெருக்கடியைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement
Sponsored Links by Taboola