மேலும் அறிய
Top 10 News Headlines: துல்கர், மம்முட்டி வீடுகளில் ED சோதனை, EC-க்கு SC அதிரடி உத்தரவு, ட்ரம்ப்புக்கு ஹமாஸ் கன்டிஷன் - பரபரப்பான 11 மணி செய்திகள்
Top 10 News Headlines Today Oct. 8th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

11 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABP
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து, 90 ஆயிரத்தை கடந்தது. ஒரு கிராமிற்கு ரூ.100 உயர்ந்து, கிராம் ரூ.11,300-க்கும், ஒரு சவரன் ரூ.90,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- கரூர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களிடம் நலம் விசாரித்து, அரசின் நிதி உதவியை வழங்கினார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.
- 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாமகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிக்க உள்ளதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், தவெக உடன் கூட்டணியா என்பது போகப் போக தெரியும் எனவும் அன்புமணி ராமதாஸ் விளக்கம்.
- சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை. பூடானிலிருந்து சட்டவிரோதமாக சொகுசுக் கார்கள் இறக்குமதி செய்த புகாரில் நடவடிக்கை. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நடிகர் மம்முட்டி இல்லத்திலும் சோதனை.
- தமிழ்நாட்டில், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
- விழுப்புரம் பவர் ஹவுஸ் பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேல் வசித்து வந்த 40 குடும்பத்தினரின் வீடுகளை, நீதிமன்ற உத்தரவுப்படி இடித்து அகற்றிய அதிகாரிகள். ரயில்வேக்கு சொந்தமான இடம் எனக் கூறி வழக்கு தொடரப்பட்டதில் நடவடிக்கை.
- நடிகர் மோகன்லால் பிராந்திய ராணுவத்தில் இணைந்து 16 ஆண்டுகள் முடிந்ததை அடுத்து ராணுவம் சார்பில் சிறப்பு மரியாதை.
- பீகாரில் இறுதி வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட 3.6 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.
- பீகாரில், என்டிஏ கூட்டணியில் 25 இடங்களை மட்டுமே ஒதுக்க பாஜக முன்வந்துள்ளதால் எல்ஜேபி தலைவர் சிராக் பாஸ்வான் அதிருப்தி என தகவல்.
- இரு நாட்கள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், 128 உறுப்பினர்கள் கொண்ட வர்த்தகக் குழுவுன் மும்பை வந்தடைந்தார்.
- ராஜஸ்தானில், ஜெய்ப்பூர்-அஜ்மர் நெடுஞ்சாலையில் கேஸ் சிலிண்டர் கொண்டு சென்ற லாரியின் மீது ரசாயம் ஏற்றிச் சென்ற லாரி மோதியதில் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறி பெரும் தீ விபத்து. ஒருவர் உயிரிழப்பு.
- இஸ்ரேலை நம்ப முடியாது என்றும், காசா ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள ட்ரம்ப் தங்களுக்கு சில உறுதிமொழிகளை அளிக்க வேண்டும் எனவும் ஹமாஸ் அமைப்பு கோரியுள்ளது.
- காசாவில் போரினால் ஏற்பட்ட இடிபாடுகளை முழுமையாக அகற்ற 10 ஆண்டுகள் ஆகலாம் என ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை.
- யூபிஐ பேமென்ட்டை மேலும் எளிமையாக்கும் வகையில் முகப்பதிவு அல்லது விரல்பதிவு மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று முதல் அமல்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement






















