மேலும் அறிய
Top 10 News Headlines: முத்துராமலிங்க தேவர் பெயரில் திருமண மண்டபம், கேரளாவிலும் மகளிருக்கு ரூ.1000, ட்ரம்ப்-ஜின்பிங் சந்திப்பு - 11 மணி செய்திகள்
Top 10 News Headlines Today Oct. 30th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

11 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABP
- முத்துராமலிங்க தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் குருபூஜையை ஒட்டி, பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மரியாதை.
- மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
- பசும்பொன்னில் தேவர் திருமகனார் பெயரில் ரூ.3 கோடி மதிப்பில் திருமண மண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,800 குறைந்துள்ளது. ஒரு கிராமிற்கு ரூ.225 குறைந்து, கிராம் ரூ.11,100-க்கும், ஒரு சவரன் ரூ.88,800-க்கும் விற்பனை.
- கோவை மாவட்டம் வால்பாறைக்கு செல்ல, வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயம் என ஆட்சியர் அறிவிப்பு. போக்குவரத்து நெரிசலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை.
- திருப்பதியில், பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் பயன்படுத்திய விவகாரத்தில், தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பா ரெட்டியின் தனிப்பட்ட உதவியாளர் கைது.
- கேரளாவில், அரசின் எந்த திட்டத்திலும் பயனாளியாக இல்லாத 31.34 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு.
- தென்கொரியாவில் நடந்த ஆசிய-பசிபிக் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக மீண்டும் பேச்சு.
- சீனாவும் அமெரிக்காவும் கூட்டாளிகளாகவும், நண்பர்களாகவும் இருக்க வேண்டும் என்றும், இரு நாடுகளின் வளர்ச்சிக்கு ஒரு நல்ல சூழலை உருவாக்க வேண்டும் என்றும் தென் கொரியாவில் ட்ரம்ப் உடனான சந்திப்பில் சீன அதிபர் ஷி ஜின்பிங் பேச்சு.
- உலகின் முதல் 5 ட்ரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட நிறுவனமாக உருவெடுத்துள்ளது Nvidia நிறுவனம். இந்நிறுவனத்தின் சிப்-களுக்கு சந்தையில் பெரும் டிமாண்ட் ஏற்பட்டுள்ளதன் காரணமாக இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
- மகளிர் ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதிப் போட்டியில் இன்று ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது இந்திய மகளிர் அணி. இதில் வெற்றி பெறும் அணி, வரும் 2-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ளும்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















