- இன்றைக்கு யார் யாரோ கிளம்பி திமுகவை அழிக்கலாம், ஒழிக்கலாம் என கனவு காண்கிறார்கள். ஆனால் எந்த கொம்பனனாலும் இந்த இயக்கத்தை தொட முடியாது என சென்னை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
- அதிமுகவுக்கு உழைத்தவர்களை மறந்து விட்டு பணக்காரரர்களுக்கு எடப்பாடி பழனிசாமி சீட் கொடுத்தார் என அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.வுமான செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் பிரிந்த அதிமுகவை ஒருங்கிணைக்க பாஜக என்னை தான் அழைத்தது எனவும் அவர் கூறியுள்ளார்.
- நாயகன் படம் ரீ- ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் படத்தின் வெளியீட்டு உரிமை பெற்றதாக கூறி தயாரிப்பாளர் எஸ்.ஆர்.ராஜன் என்பவர் வழக்கு தாக்கல் செய்டிருந்தார். ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டுமே ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதால் படத்தை திரையிடுவதற்கு தடை விதிக்க நீதிபதி மறுத்து விட்டார்.
- அதிமுகவில் செங்கோட்டையன் தரப்பைச் சார்ந்த முன்னாள் எம்.பி., சத்தியபாமா உள்ளிட்ட 14 பேரை எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கியுள்ளார்.
- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த அறிவிப்பை ரத்து செய்யக்கோரி திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை ஏற்றது உச்சநீதிமன்றம். இந்த வழக்கு வரும் நவம்பர் 11ம் தேதி விசாரணை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.50 குறைந்து ரூ.11,270க்கும், ஒரு சவரன் ரூ.90,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போடு செய்த தவறுக்காக இப்போது ஓ.பன்னீர்செல்வம் அனுபவிக்கிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். கூட்டணிக்கு வர மதிமுக தயாராக இல்லை என ஜெயலலிதாவிடம் தவறாக கூறினார் என குற்றம் சாட்டியுள்ளார்.
- சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்கள், கால்நடைகள் உள்ளிட்ட அனைத்து விலங்குகளையும் உடனடியாக அகற்றும் வகையில், நெடுஞ்சாலை ரோந்து குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாநில அரசுகளும் இதனை உறுதியாக கடைபிடித்து 8 வாரங்களுக்குள் நிலை அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் எறும்பு மீதான பயத்தால் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வந்தே மாதரம் பாடல் வெளியாகி 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் டெல்லியில் சிறப்பு நாணயம், அஞ்சல் தலை ஆகியவற்றை பிரதமர் மோடி வெளியிட்டார்.
- இந்தியா உடனான பேச்சுவார்த்தை நன்றாக சென்று கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி அழைத்தால் அடுத்தாண்டு இந்தியா செல்வேன் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
- வியட்நாம் நாட்டில் கல்மேகி புயல் கரையை கடக்க தொடங்கிய நிலையில் அங்கு நிலைமை மிக மோசமாகியுள்ளது. இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி நவம்பர் 16ம் தேதி தொடங்குகிறது.
Afternoon Headlines: இபிஎஸ் மீது செங்கோட்டையன் கடும் விமர்சனம்.. சவால் விட்ட முதல்வர் ஸ்டாலின்.. இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள்!
பேச்சி ஆவுடையப்பன் | 07 Nov 2025 01:07 PM (IST)
Top 10 News Headlines Today November 7th: இந்தியா முழுவதிலும் காலை முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.
முக்கிய செய்திகள்
Published at: 07 Nov 2025 01:07 PM (IST)