மேலும் அறிய
Top 10 News Headlines: முதல்வர் விஜய் ஆலோசனை, தங்கம் விலை உயர்வு, கச்சா எண்ணெய் விலை சரிவு, ட்ரம்ப் அச்சுறுத்தல் - 11 மணி செய்திகள்
Top 10 News Headlines Today May 25th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

11 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABP
- தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்து, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் அவசர ஆலோசனை.
- மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசு முயன்று வரும் நிலையில், தமிழக அரசின் உரிமையை நிலைநாட்டுவது தொடர்பாக முதலமைச்சர் விஜய் முக்கிய ஆலோசனை. நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்பு.
- போதை பொருள் கடத்துபவர்கள், பாலியல் வன்கொடுமை செய்பவர்கள், கொலைகாரர்கள் தமிழ்நாட்டில் சுதந்திரமாக நடமாடுவதாக அண்ணாமலை குற்றச்சாட்டு.
- கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கில் திடீர் திருப்பமாக சிறுமியின் தாய் மதுபோதையில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனை மறுத்துள்ள அவர் கணவர் குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
- மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே நேற்று நள்ளிரவு குபேந்திரன் என்ற 17 வயது சிறுவன் வெட்டிக் கொலை - சித்திரை திருவிழாவில் ஏற்பட்ட முன்பகை காரணமாக கொலை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
- சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.46 உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 வாரத்தில் மட்டும் 4வது முறையாக எரிபொருள் விலை உயர்ந்துள்ளது.
- சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,18,240க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.14,780க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்த்தில் ஆற்றில் சிப்பிகளை சேகரித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 66 பேருக்கு பத்ம விருதுகளை இன்று வழங்குகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 2 பேருக்கு பத்ம விபூஷண், 6 பேருக்கு பத்ம பூஷண், 58 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட உள்ளன.
- சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு கீழே சரிந்த போதிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.!
- அமெரிக்கா-ஈரான் இடையே அமைதிக்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுவரும் நிலையில், போர் விமானத்தில் குண்டு பொருத்தப்பட்டிருப்பது போன்ற ஏஐ புகைப்படத்தை வெளியிட்டு, ஈரானை மீண்டும் அச்சுறுத்தியுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion




















