TOP 10 Headlines: பெட்ரோல் டீசல் விலை உயர்வு.. இபிஎஸ்-க்கே உரிமை.. நீட் மறுத்தேர்வு - டாப் 10 செய்திகள்
Top 10 News Headlines Today May 15th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

மகளிர் உரிமைத் தொகை
மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வங்கிக் கணக்கில் வரவுவைப்புமுதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு அமைந்த பின் முதல்முறையாக மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை உயர்வு
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது மத்திய அரசு பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டு, ரூ.103.67க்கு விற்பனை; டீசல் விலையும் லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டு, ரூ.95.25க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சட்ட விரோதமாக வாக்களிப்பு
வெளிநாடுகளில் குடியுரிமை பெற்ற இந்தியர்கள் 25 பேர் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்ததாக கைது. இலங்கை, இங்கிலாந்து, இந்தோனேசியா, கனடாவில் குடியுரிமை பெற்றவர்கள், சென்னை, மதுரை விமான நிலையத்தில் பரிசோதனையின்போது கை விரலில் மை இருந்ததால் சிக்கினர்.
சிஎன்ஜி விலை உயர்வு
ஆட்டோ, கார்களுக்கான சிஎன்ஜி எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.2 உயர்ந்து சென்னையில் ரூ.91.50ஆக அதிகரித்தது. பெட்ரோல், டீசல் விலை 3 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில் சிஎன்ஜி எரிவாயு விலையும் உயர்வு; அமெரிக்கா - ஈரான் போரால் கச்சா எண்ணெய், எரிவாயு வரத்து குறைந்த நிலையில் நீடிக்கும் தாக்கம்
எடப்பாடிக்கே அதிகாரம்:
அதிமுகவின் பொதுச்செயலர் என்ற முறையில் கொறடாவை நியமிக்க எடப்பாடி பழனிசாமிக்கே அதிகாரம் உள்ளது. அதிமுக எம்எல்ஏக்களை அமைச்சரவையில் சேர்க்க விரும்பினால் அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும்; முறையாக தவெகவில் இணைந்து இடைத்தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என விசிக எம்.பி. ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு
நாடு முழுவதும் நீட் மறுதேர்வு ஜூன் 21ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு, வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டது
பிளே ஆஃப் செல்லுமா சிஎஸ்கே
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.10 உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.103.90க்கு விற்பனை; டீசல் லிட்டருக்கு ரூ.3.08
உயர்ந்து ரூ.95.47க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கேரளா முதல்வர் உரிமைக்கோரல்
கேரள புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட விடி.சதீசன் அம்மாநில ஆளுநர் அர்லேகரை நேரில் |சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். வரும்| 18ம் தேதி புதிய அரசு பதவியேற்கும் என தகவல். முதலமைச்சர் சதீசனுடன் 21 பேர் கொண்ட அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என எதிர்பார்ப்பு
காற்றழுத்த தாழ்வு நிலை
அரபிக் கடலில் அடுத்தடுத்து 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு.17ம் தேதி வாக்கில் தென்கிழக்கு அரபிக் கடலில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு. 24ம் தேதி வாக்கில் தெற்கு அரபிக் கடலில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியும் உருவாக வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
Before You Go
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
ட்ரெண்டிங் செய்திகள்






















