மேலும் அறிய
Top 10 News Headlines: சிபிஐ வளையத்தில் விஜய்.. இந்தியாவுக்கான ஆப்கான் தூதர் நியமனம்.. 11 மணி வரை இன்று!
Top 10 News Headlines Today January 10th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

இந்தியா செய்திகள்
Source : ABPLIVE AI
- சென்னை நுங்கம்பாக்கத்தில் பகுதி நேர ஆசியர்கள் சம ஊதியம் வழங்கக்கோரி தொடர்ந்து 3வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த தொண்டர்களிடம் 2ஆவது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேர்காணல் நடத்தி வருகிறார். கன்னியாகுமரி, மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெறுகிறது.
- கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜயின் பரப்புரை வாகன ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது. கரூர் தான்தோன்றிமலையில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்ட பரப்புரை வாகனத்தில் சிபிஐ, தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
- வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது. இன்று மாலை யாழ்ப்பாணம்-திருகோணமலை இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- சென்னையில் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 4,079 வாக்குச்சாவடி மையங்களில் 2 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது.
- பொங்கல் வெளியீடாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி படம் இன்று தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகியுள்ளது.
- முதல்முறையாக இந்தியாவுக்கான தூதரக அதிகாரியை ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசு நியமித்தது.
தாலிபான் அரசு நியமிக்கும் தூதரக பிரதிநிதிகளை இந்தியா ஏற்க வேண்டும் என்று சமீபத்தில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை அடுத்து, நூர் அகமது நூர் என்பவர் தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். - மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா IPAC நிறுவனத்தில் நடந்த அமலாக்கத்துறை சோதனை குறித்த வழக்கு விசாரணையில் உயர்நீதிமன்ற அறைக்குள் கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக நீதிபதி வெளியேறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- புதுச்சேரியில் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.4000 வழங்க, முதலமைச்சர் ரங்கசாமி அனுப்பிய கோப்புகளை போதிய நிதி இல்லை என நிதித்துறை அதிகாரிகள் திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
- மகளிர் பிரீமியர் லீக் தொடரில் முதல் போட்டியில் கடைசி ஓவரில் பெங்களூரு அணி மும்பையை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
கிரிக்கெட்
தமிழ்நாடு
Advertisement
Advertisement





















