மேலும் அறிய
Top 10 News Headlines: ‘தமிழ்நாடு என்றால் மகளிர் நாடு‘, தமிழ்நாட்டில் அமித் ஷா, எகிப்து பிரமிடுகளில் தமிழர்களின் பெயர்கள் - 11 மணி செய்திகள்
Top 10 News Headlines Today Feb.13th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

11 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABPLIVE AI
- 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முன்கூட்டியே 3 மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 1.31 கோடி மகளிருக்கு ரூ.3,000 மட்டுமல்லாமல், கோடை கால சிறப்புத் தொகையாக ரூ.2,000 என ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது.
- 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வென்று ஆட்சியமைக்கும்போது மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000லிருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
- தமிழ்நாடு என்றால் மகளிர் நாடு என்பதை முதல்வர் தலைமையிலான திராவிட மாடல் அரசு மீண்டும் உறுதி செய்திருப்பதாக, மகளிர் தொகை உயர்த்தப்பட்டதற்கு துணை முதல்வர் உதயநிதி வரவேற்பு.
- சிவகங்கை மாவட்டம் கீழடியில் ரூ.22 கோடியில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி அருங்காட்சியகத்தை இன்று திறந்த வைக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
- சேலத்தில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார் தவெக தலைவர் விஜய். 5,000 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1600 குறைந்து ரூ.1,15,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.200 குறைந்து ரூ.14,400க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை ரூ.20 கிராமுக்கு குறைந்து ரூ.280க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாட்கள் பயணமாக இன்றிரவு தமிழ்நாடு வருகை தருகிறார். சட்டமன்ற தேர்தல் குறித்து அதிமுகவுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- அதானி அணுசக்தி லிமிடெட் என்ற புதிய துணை நிறுவனத்தை தொடங்கி, அணுசக்தித் துறையில் நழைந்துள்ளது அதானி குழுமம்.
- எகிப்தில் உள்ள பிரமிடுகளில் தமிழர்களின் பெயர் பொறித்த கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு. பிரான்ஸ் மற்றம் சுவிட்சர்லாந்து நாட்டு ஆய்வாளர்களின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல். கல்வெட்டுகள் கிபி 1 முதல் 3-ம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியைச் சேர்தவை என்றும் தகவல்.
- வங்கதேச பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று 17 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியை பிடித்த BNP கட்சிக்கும் அதன் தலைவர் தாரிக் ரஹமானுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- சமூக ஊடகங்களை 16 மணி நேரம் பயன்படுத்துவது அடிமைத்தனம் இல்லை என வாதிட்ட இன்ஸ்டாகிராம் தலைமை செயல் அதிகாரி, சிறுவர்களின் மனநலப் பாதிப்பிற்கு இன்ஸ்டாகிராம் தளம்தான் காரணம் என்ற குற்றச்சாட்டை ஏற்கவும் மறுப்பு.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement























