Top 10 News Headlines: விஜயை வீழ்த்த வேண்டும், மீண்டும் போர் மூளும், குறைந்த தங்கம் விலை - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines Today Mar 26th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

மீனவர்கள் கைது
தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை, எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி சிறைபிடித்து இலங்கை கடற்படை அராஜகம்.
விஜயை வீழ்த்த வேண்டும் - எடப்பாடி
சென்னையில் பரப்புரையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தனக்கென தனியாக செல்வாக்கு இருக்கிறது என சொல்லிக் கொள்பவர்களை வீழ்த்த வேண்டும் என விஜயை மறைமுகமாக சாடினார். பெரம்பூரில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளரான திலகபாமாவிற்கு ஆதரவாக வ்சாக்கு சேகரித்தார்.
குறைந்த தங்கம் விலை
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 600 ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை. ஒரு கிராம் விலை 14 ஆயிரம் ரூபாய் ஆக நிர்ணயம்.
15 வருடங்களாக கத்திக்கிட்டு இருக்கேன்
“15 வருசமா நானும் கத்திகிட்டு இருக்கேன், உங்க காதுல விழமாட்டேங்குது; சுடுகாட்டில் போய் பேசியிருந்தா கூட, பாவம்னு பார்த்து நான்கு பிணமாவது எந்திச்சு வந்திருக்கும்.
இந்த தடவ எவ்வளவு பேருக்கு மானம், ரோஷம், சூடு, கோபம் எல்லாம் வருதுனு பார்ப்போம்”
-திருவொற்றியூரில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசம்
வாக்குப்பதிவு நிறுத்தம்
காரைக்காலில் உள்ள கோத்துகுளம் அரசு உயர் நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் இருக்கும்
VVPAT எந்திரத்தில் புகை வந்ததால் பரபரப்பு. பேட்டரியில் ஏற்பட்ட அதீத வெப்பத்தால் புகை வந்திருக்கலாம் எனத் தகவல். இதனால் வாக்குப்பதிவு நிறுத்தம்
தலைமை தேர்தல் ஆணையருடன் வாக்குவாதம்
மேற்கு வங்க தேர்தல் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் பொதுப் பார்வையாளரான ஐ.ஏ.எஸ். அதிகாரி அனுராக் யாதவ் இடையே வாக்குவாதம்; இதனால் அவர் தேர்தல் பணியில் இருந்து விடுவிப்பு. பூத் விபரங்களை சரியாக தெரிவிக்காத உ.பி. கேடர் அதிகாரியான அனுராக் யாதவை “வீட்டுக்குச் செல்லுங்கள்.." என ஞானேஷ் குமார் கூற, “நீங்கள் என்னை இப்படி நடத்தக் கூடாது; 25 ஆண்டுகள் பணி அயைவம் எனக்கு இருக்கிறது" என அவர் பதிலளித்துள்ளார்.
கேரளம், அசாமில் வாக்குப்பதிவு
அசாம் மற்றும் கேரளம் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
மீண்டும் போர் மூளும்
“ஈரான் உடனான ஒப்பந்தங்கள் முழுமையாக அமல்படுத்தப்படும் வரை அமெரிக்கப் படைகள் அங்கேயே முகாமிட்டிருக்கும். ஒருவேளை ஒப்பந்தம் மீறப்பட்டால் இதுவரை யாரும் கண்டிராத தாக்குதல்கள் தொடங்கும். அணு ஆயுதத் தடை, ஹார்முஸ் நீரிணைத் திறப்பு உள்ளிட்ட
நிபந்தனைகளில் எந்த மாற்றமும் இல்லை” -ட்ரம்ப், அமெரிக்க அதிபர்
இஸ்ரேல் தாக்குதலால் பதற்றம்
லெபானானில் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களில் நேற்று மட்டும் 254 பேர் உயிரிழப்பு என அந்நாட்டு அரசு தெரிவிப்பு. ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்தம் தங்களுக்கு பொருந்தாது எனக் கூறி இஸ்ரேல் இந்த தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது. இதனால் ஹார்மஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது.
கொல்கத்தா - லக்னோ மோதல்
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் சுற்று போட்டியில் கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன. ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்























