Top 10 News Headlines: முதலமைச்சர் ஸ்டாலின் சவால், திமுகவின் சூழ்ச்சி, கண்ணிவெடிகள் எங்கே? - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines Today Apr 10th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சவால்
“நெல்லுக்கு மாநில அரசு தரும் ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்யுமாறும், ஊக்கத்தொகை வழங்குவதை நிறுவத்துவது தொடர்பாகப் பரிசீலனை செய்யவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள், "குறைந்தபட்ச ஆதார விலையைத் தாண்டி ஊக்கத்தொகை வழங்குவது மாநில அரசின் முடிவு எனவும், அதனை யாரும் பறிக்கவில்லை" என்றும் கூறியிருக்கிறீர்கள். அது உண்மை என்றால், அந்தக் கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தாங்கள் தயாரா?” என ஸ்டாலின் சவால்
நலம் விசாரித்த முதலமைச்சர் ஸ்டாலின்
பாமக நிறுவனர் ராமதாஸை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் |விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சேலத்தில் நேற்று பரப்புரை முடிந்து மேடையில் இருந்து இறங்கியபோது திடீரென மயங்கினார் ராமதாஸ். உயர் சிகிச்சைக்காக சேலத்தில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளார்.
திமுக சதிகாரர்களின் சூழ்ச்சி.. - அன்புமணி
”எனக்கும் விசிக தலைவர் திருமாவளவனுக்கும் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனாலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் போராடி வருகிறார். அதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது. கடந்த காலங்களில் நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து போராடினோம். இடையில் திமுக சதிகாரர்கள் வந்து சூழ்ச்சி செய்து எங்கள் பிரித்துவிட்டார்கள் - பாமக தலைவர் அன்புமணி
குறைந்த தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.230 குறைந்து ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 14 ஆயிரத்து 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பிரதமர் மோடி ஆலோசனை
பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் காணொலி காட்சி மூலம் இன்று காலை 11 மணிக்கு உரையாடுகிறார் பிரதமர் மோடி. தேர்தல் வியூகம், பூத் கமிட்டி பொறுப்பாளர்களின் வேலை உள்ளிட்டவை குறித்து நிர்வாகிகளுக்கு பிரதமர் ஆலோசனைகளை வழங்க உள்ளார்.
கண்ணிவெடிகள் எங்கே?
ஹார்மஸ் நீரிணை கடல்பகுதியில், கண்ணிவெடிகள் எங்கெல்லாம் இருக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்க முடியாததால் நீரிணையை முழுமையாக திறப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
கடலுக்கு மேலே மிதந்த கண்ணிவெடிகளை ஈரான் ராணுவம் அகற்றியது கடலுக்கு சில நூறு அடி ஆழத்தில் எங்கெல்லாம் கண்ணிவெடிகள் வீசப்பட்டன என்பது குறித்து தெளிவான விவரங்கள் இல்லாததால் சிரமம்.
விராட் கோலி சாதனை
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 1,000க்கும் மேற்பட்ட ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஆர்சிபி வீரர் விராட் கோலி. இப்பட்டியலில் கே.எல்.ராகுல் (977*) ஷிகர் தவான் (901) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
இன்றைய ஐபிஎல் போட்டி
ஐபிஎல் லீக் சுற்றில் இன்று நடைபெற உள்ள போட்டியில், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ள ராஜஸ்தான் அணியை ஏழாவது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி எதிர்கொள்கிறது. ஐதராபாத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்























