Top 10 News Headlines: மும்மொழிக்கொள்கைக்கு அரசு கெடு, சென்னையில் 419 வேட்பாளர்கள், நாசா அப்டேட் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines Today Apr 10th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

முதலமைச்சர் ஸ்டாலின் நம்பிக்கை
“திமுக கூட்டணி 200+ இடங்களில் வெற்றி பெறும். அரசின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். மாநில உரிமைகள், கூட்டாட்சி தத்துவத்தில் சமரசம் செய்து கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை. எந்த அழுத்தத்துக்கும் தமிழ்நாடு ஒருபோதும் அடிபணியாது. பாசிச சக்திகளுக்கு எதிரான எங்களது போராட்டம் தொடரும்” -ஆங்கில நாளிதழுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
4,618 வேட்புமனுக்கள் ஏற்பு
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் 7,599 வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் 4,618 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு. 7,599 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் 521 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. 2,460 வேட்புமனுக்கள் நிராகரிப்பு. அதிகபட்சமாக கரூரில் 85 வேட்பாளர்கள், குறைவாக அம்பாசமுத்திரத்தில் 5 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
விஜய் வாகனத்தை பின்தொடர்ந்ததால் விபத்து
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பரப்புரை மேற்கொள்வதற்காக மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக சென்ற தவெக தலைவர் விஜயின் வாகனத்தை, இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த இரண்டு பேர் விபத்தில் சிக்கினர்.
சென்னையில் 419 வேட்பாளர்கள்
சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 419 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக பெரம்பூர் தொகுதியில் 47 வேட்பாளர்கள் போட்டி.
628 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் 173 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 24 பேர் வேட்புமனுவை வாபஸ் பெற்றனர்.
மும்மொழிக்கொள்கை - மத்திய அரசு கெடு
மும்மொழிக் கொள்கையை அடுத்த ஒரு வாரத்தில் செயல்படுத்த வேண்டும் என பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ உத்தரவு. NCERT-ன் மொழிப்பாட புத்தகங்களுக்கு காத்திருக்காமல், 6ம் வகுப்புகளில் 3வது மொழிப்பாடத்தை உடனடியாக பயிற்றுவிக்க தொடங்குமாறு உத்தரவு பிறப்பிப்பு. படிப்படியாக 2030-31க்குள் 10ம் வகுப்பு வரை இக்கொள்கையை கட்டாயமாக்க திட்டம்.
”இந்து மதத்திற்கு நல்லதல்ல”
“எனது வழக்கம், எனது மதம், எனது மதத்தினர், எனது பிரிவினர் மட்டுமே, எனது கோயிலுக்கு வர வேண்டும். வேறு யாரும் வரக்கூடாது என்று கூறுவது இந்து மதத்திற்கு நல்லதல்ல”
சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க எதிர்ப்புத் தெரிவித்து மத்திய அரசு வாதிடும் நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா கருத்து.
இஸ்ரேலின் போர் செலவு
ஈரான், லெபனான் மீதான இஸ்ரேலின் 40 நாள் போரில் $17.5 பில்லியன் (ரூ. 1.6 லட்சம் கோடி) | செலவானதாக இஸ்ரேல் நிதியமைச்சகம் மதிப்பீடு. ராணுவச் செலவுகள் $12.9 பில்லியன் என்றும், ஈரானிய தாக்குதலால் ஏற்பட்ட சேதம் $4.5 பில்லியன் எனவும் கணிப்பு. மறுசீரமைப்புச் செலவுகள், பொருளாதார முடக்கத்தால் ஏற்பட்ட இழப்புகள் இதில் சேர்க்கப்படவில்லை.
ஹார்மஸ் நீர்வழிப்பாதையில் கண்ணிவெடி
அமெரிக்கா உடனான போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரான், ஹார்முஸ் நீரிணையில் கடலுக்குள் கண்ணி வெடிகளைப் பதித்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக தகவல். இதுதொடர்பான வரைபடம் ஒன்றை அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளதால் பரபரப்பு.
பூமி திரும்பும் நாசா குழு..
நிலவை நோக்கிய வரலாற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்பும் நாசா விண்வெளி வீரர்கள், நாளை (ஏப்ரல் 11) அதிகாலை 5:30 மணிக்கு பசிபிக் பெருங்கடலில் தரையிறங்குகின்றனர். Artemis 2 விண்கலம் மூலம் பயணித்த 4 வீரர்கள், பூமியை நோக்கி பாதி தூரத்தைக் கடந்ததாக நாசா அறிவிப்பு.
ஐபிஎல் - இன்றைய போட்டி
ஐபிஎல் லீக் சுற்றின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு கவுகாத்தியில் தொடங்க உள்ளது. நடப்பு தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத, புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை தக்கவைத்துள்ள அணிகள் மோதுவதால், இன்றைய போட்டி கூடுதல் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்























