• NDA கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகுவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், நாளை தனது ஆதரவாளர்களுடன் கூட்டணி குறித்து அவர் முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
  • எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை இன்று ஒரே நாளில் சிறைபிடித்து, விசைப் படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை அட்டூழியம்.
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.73,200-க்கு விற்பனை. ஒரு கிராம் ரூ.9,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • நெல்லை பாப்பாகுடியில், காவல் உதவி ஆய்வாளரை வெட்ட முயன்ற 17 வயது சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
  • மக்களவையில் நடைபெறும் ‘ஆபரேஷன் சிந்தூர்‘ விவாதத்தில் இன்று பிரதமர் மோடி நிறைவுரை ஆற்றுவார் என தகவல்.
  • பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முடிவு.
  • ஏமனில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிரந்தரமாக ரத்து. ஏமன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய கிராண்ட் முஃப்தி அபுபக்கர் அலுவலகம் தகவல்.
  • ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், உள்நாடு, சர்வதேச பயணிகளுக்கு டிக்கெட் கட்டணங்களில் தள்ளுபடி, சலுகைகளை அறிவித்துள்ளது. 15 - 25% வரை தள்ளுபடி அறிவிப்பு.
  • உக்ரைன் உடனான போரை 12 நாட்களுக்குள் நிறுத்த, புதினுக்கு ட்ரம்ப் கெடு. போரை நிறுத்தாவிட்டால் கடும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என எச்சரிக்கை.
  • அமெரிக்க ஸ்மார்ட்போன் சந்தையில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா 44% பங்குகளை கைப்பற்றியுள்ளது. கடந்த ஆண்டு 60% பங்களிப்பை வைத்திருந்த சீனா தற்போது 25% மட்டுமே வைத்துள்ளது.
  • உலகக் கோப்பை செஸ் தொடரை வென்று சாதனை படைத்த திவ்யா தேஷ்முக்கிற்கு குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து. 2-ம் இடம் பிடித்த கோனேரு ஹம்பியும் திறமையை வெளிப்படுத்தியதாக பாராட்டு.