மேலும் அறிய
Top 10 Headlines: அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு.. வெள்ளை அறிக்கை வெளியிட்ட கேரளா.. 11 மணி வரை இன்று!
Top 10 News Headlines Today June 5th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

இந்தியா செய்திகள்
Source : ABP
- தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் ராஜினாமா கடிதத்தை தேசிய தலைமை ஏற்றதாக அறிவிப்பு - இன்று பகல் 12 மணிக்கு அண்ணாமலை ஆதரவாளருடன் உரையாட உள்ளார்.
- முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. வெற்றித்தமிழகம் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
- சென்னை, பெரம்பூரில் முன்னாள் காதலன் வீடு தேடி வந்து தாக்கிய நிலையில் போலீஸில் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை என இளம்பெண் வீடியோ வெளியிட்டு குற்றம்சாட்டியுள்ளார்.
- தவெக தலைமையிலான கூட்டணிக்கு தமிழ்நாடு சமூகநீதி முற்போக்கு கூட்டணி என பெயரிடப்பட்டுள்ளதாக பிரவீன் சக்ரவர்த்தி குறிப்பிட்ட நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் அதுதொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளார்.
- சென்னை அண்ணாசாலையில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் திமுகவினரும் காங்கிரஸ் கட்சியினரும் மோதிக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மு.க.ஸ்டாலின் வருகை தரும் நேரத்தில் செல்வப்பெருந்தகை வந்ததால் பிரச்னை வெடித்ததாக சொல்லப்பட்டுள்ளது.
- சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.14,430க்கும், ஒரு சவரன் ரூ.1,15,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- மின்வாரிய அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள் மாயமான விவகாரத்தில் திடீர் திருப்பமாக கைதான நபரிடமிருது 34 ஹார்ட் டிஸ்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- இந்தியா, வங்கதேசம் இடையே வரும் 8ம் தேதி நடைபெறும் எல்லை காவல் மாநாட்டில் இந்தியாவுக்குள் ஊடுருவும் வங்கதேச குற்றவாளிகளைத் தடுப்பது குறித்து விவாதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
- வரும் 18ம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்தது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள இடத்திற்கு பிரவீன் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- நெடுஞ்சாலைத் துறையில் பினாமி நிறுவனங்களுக்கு இடமில்லாத வெளிப்படையான நிர்வாகம் உறுதி செய்யப்படும் என தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
- திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோது வருகிறது. கிட்டதட்ட 15 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
- கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை தடுக்க தாலுக்கா அளவில் தனிப்படை அமைக்கப்படும் என முதலமைச்சர் டி.கே.ஷிவக்குமார் தெரிவித்துள்ளார்.
Also Read: CM Joseph Vijay: உங்க பேச்சு அருவருப்பா இருக்கு.. முதல்வர் விஜயை விளாசிய வினோதினி!
- நீட் தேர்வு எழுதிய மத்தியப்பிரதேச மாநில மாணவி தற்கொலை - பிரதமர் மோடி கல்வியை சீரழித்ததற்காக இளம் தலைமுறை விலை கொடுத்து கொண்டிருக்கிறது.
- கேரள மாநில அரசின் கடன் ரூ.5.07 கோடி என வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார் மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
- கர்நாடகாவில் பதவியேற்ற 3 நாட்களில் அமைச்சர் ஒருவர் தனக்கு விருப்பமில்லாத துறையை ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறி ராஜினாமா செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Before You Go
Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















