தமிழ்நாடு:


* டெல்டா பாசன மாவட்டங்களில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொள்கிறார்.


* தமிழ்நாட்டு மாநிலங்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளராக ப.சிதம்பரம் தேர்வாகியுள்ளார்.


* ’சிங்காரச் சென்னை 2.0’ திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி தெருக்களின் பெயர்களில் உள்ள சாதிப்பெயர்களை நீக்கும் பணி தொடக்கம்.


* நாமக்கல்லில் விபத்தில் உயிரிழந்த ரசிகரின் உடலுக்கு நேரில் சென்று நடிகர் சூர்யா அஞ்சலி செலுத்தினார்.


* தயவு செய்து ஆன்லைன் ரம்மி விளையாடாதீர்கள் - டிஜிபி சைலேந்திர பாபு வேண்டுகோள்


* சென்னை தி.நகர் ஹெச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்கள் 100 பேர் கணக்கில் ரூ.13 கோடி வரவு வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


* தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்


இந்தியா:


* ஆதார் நகலை எங்கும் கொடுக்க வேண்டாம் என வெளியிட்ட அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றது.


* தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளை வழங்கிய மகளிர் குழுவுக்கு நன்றி மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.


* கேரளாவில் பரவும் புதிய வகை வைரஸால் ஒருவர் உயிரிழப்பு; கொசுக்கள், பறவைகள் மூலம் வைரஸ் பரவுகிறது.


* கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனால், தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.


* கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகையை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்.


* பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் பிரமுகரும், பாடகருமான சித்து மூஸ்வாலா சுட்டுக்கொலை.


உலகம்:


* நேபாளத்தில் மாயமான விமானம் கண்டுபிடிக்கப்பட்டது.


* உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53.152 கோடியாக அதிகரித்துள்ளது.


விளையாட்டு:


* ஐபிஎல் இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது குஜராத் அணி.


* 15ஆவது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லர் 8 விருதுகளை வென்றுள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண