தமிழ்நாடு:



  • இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்று என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

  • வாக்காளர் அட்டை மற்றும் ஆதார் இணைப்பு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் இன்று தேர்தல் ஆணையம் ஆலோசனை.

  • கொடைக்கானலில் பெய்து வரும் மழை காரணமாக பல அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. 

  • மதுரையில் தொடர் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. 

  • தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இந்தியா:



  • நாடாளுமன்றத்தில் இன்று விலைவாசி உயர்வு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் பதிலளிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்.

  • சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • மேற்கு வாங்க காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 3 பேருக்கு 10 நாட்கள் சிறையில் அடைப்பு.

  • ஜம்முவில் மேக வெடிப்பால் பலத்த மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

  • ஆந்திராவில் எரிவாயு குழாயில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

  • மேற்கு வங்கத்தில் வேனில் மின்சாரம் பாய்ந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.


உலகம்:



  • ரஷ்யாவின் கடற்படை தின அணிவகுப்பு மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

  • இலங்கை முன்னாள் அதிபர் கோட்டபய மீண்டும் இலங்கை வர சரியான நேரமில்லை என ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார். 

  • பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களை பிரதமர் ஷாபாஸ் ஷெரிஃப் பார்வையிட்டார்.

  • உக்ரைன் நாட்டின் மீது 12 ஏவுகணைகள் வீசி ரஷ்யா தாக்கியுள்ளது.

  • போர்ர்ச்சுகலில் பரவி வரும் காட்டு தீயினால் அங்கு பல்வேறு பகுதிகளில் புகை சூழ்ந்துள்ளது.


விளையாட்டு:



  • காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்கு 3வது தங்கத்தை வென்று பளுதூக்குதல் வீரர் அச்சிந்தா ஷெயுலி அசத்தியுள்ளார். 

  • காமன்வெல்த் போட்டியில் இந்திய ஆடவர் டேபிள் டென்னிஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 

  • செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணிகள் அனைத்தும் நேற்று சிறப்பான வெற்றியை பெற்றன.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண