• தமிழ்நாடு : 
    கோவை கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக நாகை அருகே உள்ள சிக்கல் பகுதியில் முஸ்லீம் அமைப்பைச் சேர்ந்த இருவரின் வீடுகளில் காவல் துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.

  • கோவை கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்தில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகளும் நேற்று சோதனை நடத்தினர்.

  • வடகிழக்குப் பருவ மழையையொட்டி, சென்னை குடிநீர் வாரியம் சார்பில் இரவு நேரங்களில் மேற்கொள்ளப்படும் களப்பணிகளை மேற்பார்வையிட மண்டல வாரியாக செயற்பொறியாளர்கள் சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

  • தமிழ்நாடு முழுவதும் மழை பாதிப்புக்குள்ளான பகுதிகளில் அரசு, தனியார் மருத்துவமனைகள் வாயிலாக மருத்துவ முகாம்கள் நடத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

  • தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான இணையதளத்தில் இதுவரை 10 ஆண்டுகளுக்கான விவாதக் குறிப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், 1921-ம் ஆண்டில் இருந்து பேரவையில் நடைபெற்ற விவாதங்கள் பதிவேற்றம் செய்ய பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

  • தமிழகத்தில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்தார்.

  • புதுமைப் பெண் திட்டத்திற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். www.pudhumaipenn.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.


இந்தியா



  • குஜராத்தில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 132-ஆக உயர்ந்துள்ளது.

  • முழு சந்திர கிரகணம் நவம்பர் 8ம் தேதி நிகழவுள்ளது. கொல்கத்தா உள்பட நமது நாட்டின் பல முக்கிய நகரங்களில் இந்த நிகழ்வைக் காண முடியும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

  • உலகின் அதி முக்கியமான உற்பத்தி மையமாக இந்தியா மாறி வருகிறது என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

  • ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையில் மாநில சட்டசபைகளுக்கும் மக்களவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரான ஓ.பி.ராவத் தெரிவித்தார்.

  • தெலங்கானாவில் எனது ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக, 20-30 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சி செய்வதாக தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவரும், அந்த மாநில முதல்வருமான சந்திரசேகர் ராவ் குற்றம்சாட்டினார். 


விளையாட்டு



  • டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 30வது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி.

  • இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான ஆட்டத்தில் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்தவர் என்ற சாதனையை படைத்தார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி.

  • தமிழ்நாடு விளையாட்டுத் தலைநகரமாக விரைவில் மாறும் என மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

  • இந்தியாவில் நடைபெற்ற 17 வயதுக்கு உள்பட்ட பெண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்றது.                                                                                               உலகம்

  • தென் கொரியாவில் நடைபெற்ற "ஹேலோவீன்" தின கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 153ஆக அதிகரித்துள்ளது.

  • கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் நிகழ்ந்த இரட்டை கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆகியுள்ளது.

  • பிரிட்டன் முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ் வெளியுறவு அமைச்சராக இருந்தபோது அவருடைய போனில் ஊடுருவி உரையாடல்கள் ஒட்டுகேட்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக அதுகுறித்து விசாரிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

  • பிரேசில் அதிபர் தேர்தலில் லூலா டி சில்வா வெற்றி பெற்றார்.