தமிழ்நாடு : 



  • சென்னை பரங்கிமலை கல்லூரி மாணவியை ஓடும் ரயிலில் தள்ளி கொலை செய்த இளைஞர் நள்ளிரவில் கைது.

  • நளினி உள்ளிட்ட 5 பேர் விடுதலை கோரிய வழக்கை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம் : நீதிமன்றத்தின் உத்தரவிற்கு கட்டுப்படுவோமென தமிழ்நாடு அரசு பதில்

  • எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்காமான காண்ட்ராக்டர் ரூ.2000 கோடி சொத்து குவித்தது அம்பலம் : புதுக்கோட்டை வீட்டில் 2வது நாளாக ரெய்டு

  • பள்ளிக்கல்வி துறையில் தேர்வு செய்யப்பட்ட 2,849 ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை : வழங்கினார் முதலமைச்சர் முக ஸ்டாலின் 

  • காற்று சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம் தகவல்

  • தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 300-க்கு கீழ் குறைந்துள்ளது.

  • பிரதமர் மோடி தமிழகம் வரும் தகவல் எங்கிருந்து பரவியதென்றே தெரியவில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  • சென்னை விமான நிலையத்தில் ரூ.1.25 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


இந்தியா: 



  • ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு : உச்ச நீதிமன்றத்தின் 3வது நீதிபதி விசாரிப்பார்.

  • கேரளா நரப்பலி விவகாரம்: மேலும் 26 பெண்கல் நரபலியா..? போலீசார் தீவிர விசாரணை

  • நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக காங்கிரஸ் எம்பி சசி தரூர் நியமனம்

  • பிரதமரின் தேசிய சிறார் விருதுக்கான கடைசித் தேதியை அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டித்து, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

  • ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் நகரில் பயங்தரவாதிகளுடனான மோதலின்போது படுகாயம் அடைந்த ராணுவ நாயுக்கு சிகிக்கை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அது உயிரிழந்துள்ளதாக ராணுவ அதிகாரிகள் தகவல் 

  • நேரடியாகப் பணப் பரிமாற்றம் செய்யும் வகையிலான இந்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள், ஆதார் பயன்பாடு என  இந்தியாவிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் - ஐஎம்எஃப் புகழாரம் 

  • மேற்கு வங்கத்தில் நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு பேரணியில் அண்ணா, கலைஞர், முக ஸ்டாலின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தனர்.


உலகம்:



  • உக்ரைனின் 4 பகுதிகள் இணைப்பு : ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நாவில் தீர்மானம் - இந்தியா உள்பட 35 நாடுகள் புறக்கணிப்பு 

  • பாகிஸ்தானில் 2 மணி நேரத்துக்கு ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல்

  • கடல் எல்லையை பகிர்ந்து கொள்வதில் இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையை தீர்த்து கொள்வதற்காக வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

  • இங்கிலாந்து நாட்டில் 2 லட்சம் அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்

  • காமிக்ஸ் புத்தகமாக வெளியானது “எலிசபெத்’ மகாராணியின் வாழ்க்கை.


விளையாட்டு:



  • ஆசிய கோப்பை மகளிர் டி20 போட்டி : 8வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா 

  • மல்யுத்த வீரர் சாகர் கொலை வழக்கு.. ஒலிம்பிக்ஸில் வென்ற சுஷில் குமார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.

  • எந்த பதவிக்கும் முடிவு காலம் உண்டு என சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.