மேலும் அறிய

இறந்து பிறந்த ட்வின்ஸ்..  வீடியோ காலில் பிரசவம் பார்த்த மருத்துவர்.. சுக்குநூறாக உடைந்த 7 ஆண்டு கனவு

பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, கர்ப்பிணி, மருத்துவமனைக்கு வந்துள்ளார். மருத்துவர் இல்லாத காரணத்தால் மருத்துவரின் ஆலோசனைகளை வீடியோ காலில் கேட்டு, செவிலியர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். இருப்பினும், இரண்டு குழந்தைகளும் இறந்தே பிறந்தது.

திருமணம் ஆகி 7 ஆண்டுகளுக்கு பிறகு செயற்கை கருத்தரிப்பு முறையால் இரட்டை குழந்தைகளுக்கு கர்ப்பமான பெண்ணின் கனவு சுக்குநூறாக உடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, கர்ப்பிணி, மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது, மருத்துவர் இல்லாத காரணத்தால் மருத்துவரின் ஆலோசனைகளை வீடியோ காலில் கேட்டு, செவிலியர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். இருப்பினும், இரண்டு குழந்தைகளும் இறந்தே பிறந்துள்ளது.

சுக்குநூறாக உடைந்த 7 ஆண்டு கனவு:

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் எலிமினெடு கிராமத்தை சேர்ந்தவர் கீர்த்தி. கல்யாணமாகி 7 ஆண்டுகளுக்கு பிறகும் இவருக்கு குழந்தை பிறக்கவில்லை. மருத்துவரின் ஆலோசனைகளுக்கு பிறகு, ஐந்து மாதங்களுக்கு முன்பு செயற்கை கருத்தரித்தல் அல்லது IVF முறை மூலம் இவர் கர்ப்பம் ஆனார். மருத்துவர் அனுஷா ரெட்டி என்பவரின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். கடந்த மாதம், விஜய லட்சுமி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காகச் சென்றிருக்கிறார்.

கீர்த்தியின் கருப்பை வாய் தளர்ந்து போயிருந்தது. சில தையல்கள் போடப்பட்டு, அவரை ஓய்வெடுக்கச் சொல்லி, வீட்டிற்கு அனுப்பி இருக்கிறார் மருத்துவர் அனுஷா ரெட்டி. பரிசோதனைக்குப் பிறகு சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு, கீர்த்திக்கும் கடுமையான பிரசவ வலி ஏற்பட்டது. நேற்று முன்தினம், அதிகாலை 4 மணியளவில், அவர் அதே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.

வீடியோ காலில் பிரசவம் பார்த்த மருத்துவர்:

அந்த நேரத்தில், மருத்துவர் இல்லாத காரணத்தால், வீடியோ கால் மூலம், ஊசி போடுவது உட்பட பல மருத்துவ நடைமுறைகளை மேற்கொள்ளுமாறு செவிலியர்களுக்கு மருத்துவர் அனுஷா ரெட்டி அறிவுறுத்தி இருக்கிறார். வலி நிவாரணத்திற்காக ஊசி போடும்போது, கீர்த்தியின் தையல்கள் பிரிந்ததாகக் கூறப்படுகிறது.

காலை 10.30 மணியளவில், கீர்த்தியின் வயிற்றில் இருந்து இரட்டையர்கள் அகற்றப்பட்டனர். அவருக்கு நிறைய ரத்தம் வெளியேறி இருக்கிறது. இதற்கு பின்னர்தான், மருத்துவமனைக்கது மருத்துவர் அனுஷா ரெட்டி வந்துள்ளார். அப்போது, ​​கீர்த்தியின் குழந்தைகள் இறந்துவிட்டதாக அவரிடம் கூறப்பட்டுள்ளது.

இதனால், கீர்த்தியின் 7 ஆண்டு கனவு சுக்குநூறாக உடைந்துள்ளது. மனம் உடைந்த அவர் இதுகுறித்து பேசுகையில், "எனக்கு வயிற்றில் வலி இருந்தது. மருத்துவமனைக்கு தொலைபேசியில் அழைத்தோம். ஊசி போட வேண்டும் என அவர்கள் சொன்னார்கள். நான் கவலைப்பட்டேன். அதனால் நாங்கள் அரை மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு வந்தோம். என்ன செய்ய வேண்டும் என செவிலியர்களுக்கு தொலைபேசியிலேயே மருத்துவர் அறிவுறுத்தினார். அவர்கள் அவரது அறிவுறுத்தலின் பேரில் சிகிச்சையைத் தொடங்கினர்.

அலட்சியமாக செயல்பட்டாரா மருத்துவர்?

செவிலியர் என்னை இரண்டு முறை பரிசோதித்தார். எனக்கு ரத்தப்போக்கு தொடங்கியது. என் குழந்தைகள் வெளியே வந்த பிறகுதான் மருத்துவர் வந்தார். குழந்தைகள் இறந்துவிட்டதாக அவர் சொன்னாக். மருத்துவர் என்னைப் பரிசோதிக்கவே இல்லை" என்றார்.

கீர்த்தியின் குடும்பத்தினர், இது பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அலட்சியமாக செயல்பட்ட உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையின் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரங்காரெட்டி மாவட்ட சுகாதார அதிகாரி வெங்கடேஸ்வர ராவ் கூறுகையில், "கீர்த்தி, தற்போது பாதுகாப்பாக உள்ளார். சிக்கலான அறுவை சிகிச்சையை செவிலியர்கள் செய்ய அனுமதித்தது மருத்துவரின் அலட்சிய செயல். நாங்கள் முழுமையான விசாரணை நடத்தி காவல்துறை மற்றும் உயர் அதிகாரிகளிடம் எங்கள் அறிக்கையை சமர்ப்பிப்போம்" என்றார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Cooking Gas Available : வெறும் 20 நாட்களுக்கு தான் சமையல் கேஸ் இருக்கு.! மத்திய அரசை அலர்ட் செய்யும் தமிழக அரசு
வெறும் 20 நாட்களுக்கு தான் சமையல் கேஸ் இருக்கு.! மத்திய அரசை அலர்ட் செய்யும் தமிழக அரசு
LPG Cylinder Shortage: வெடித்த சிலிண்டர் பிரச்னை; இனி பதுக்க முடியாது.! அதிரடி முடிவெடுத்த மத்திய அரசு; அது என்ன.?
வெடித்த சிலிண்டர் பிரச்னை; இனி பதுக்க முடியாது.! அதிரடி முடிவெடுத்த மத்திய அரசு; அது என்ன.?
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
LPG Cylinder Shortage: என்னது, இன்னைல இருந்து ஹோட்டல்கள் இயங்காதா.?! சிலிண்டர் தட்டுப்பாடால் உரிமையாளர்கள் அதிரடி.!
என்னது, இன்னைல இருந்து ஹோட்டல்கள் இயங்காதா.?! சிலிண்டர் தட்டுப்பாடால் உரிமையாளர்கள் அதிரடி.!
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LPG Cylinder Shortage: வெடித்த சிலிண்டர் பிரச்னை; இனி பதுக்க முடியாது.! அதிரடி முடிவெடுத்த மத்திய அரசு; அது என்ன.?
வெடித்த சிலிண்டர் பிரச்னை; இனி பதுக்க முடியாது.! அதிரடி முடிவெடுத்த மத்திய அரசு; அது என்ன.?
Fuel Shortage: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Fact Check: அரசுப்பள்ளி வகுப்பறையை அடித்து நொறுக்கும் மாணவ, மாணவிகள்; வைரலான வீடியோ- நடந்தது என்ன?
Fact Check: அரசுப்பள்ளி வகுப்பறையை அடித்து நொறுக்கும் மாணவ, மாணவிகள்; வைரலான வீடியோ- நடந்தது என்ன?
Top 10 News Headlines: சிலிண்டர் விநியோகம் நிறுத்தம், எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு, ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை - பரபரப்பான 11 மணி செய்திகள்
சிலிண்டர் விநியோகம் நிறுத்தம், எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு, ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை - பரபரப்பான 11 மணி செய்திகள்
Senthil Balaji: தப்பு தப்பா சொல்லாதீங்க..! சிபிஐ சம்மன், நான் ரெடியா இருக்கேன் - செந்தில் பாலாஜி விளக்கம்
Senthil Balaji: தப்பு தப்பா சொல்லாதீங்க..! சிபிஐ சம்மன், நான் ரெடியா இருக்கேன் - செந்தில் பாலாஜி விளக்கம்
Embed widget