காசு கொடுக்கிறியா? இல்லை கோர்ட்டுக்கு வரியா? - வட இந்தியர்களின் ஆன்லைன் வேலைவாய்ப்பு மோசடி
தமிழ்நாட்டு பெண் ஒருவரிடம் வட இந்தியர்கள் நூதன முறையில் ஆன்லைனில் மோசடி செய்துள்ளனர்.
இந்தியாவில் டிஜிட்டல் பயன்பாடு அதிகரித்தும் வரும் சூழலில் ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்துத்தான் வருகின்றன. இந்த வகையான மோசடிகளில் பலர் சிக்கி தங்களுடைய பணம், தகவல் உள்ளிட்டவற்றை இழந்து தவித்து வருகின்றனர். அனைத்து மாநிலங்களிலும் ஆன்லைன் புகார் தொடர்பாக விசாரிக்க சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர் இருக்கின்றனர். இருப்பினும் இந்த சைபர் கிரைம் புகார்கள் தொடர்ந்து அதிகரித்துதான் வருகின்றன. அத்துடன் ஒவ்வொரு புகாரும் வரும் போது அவை எவ்வளவு நூதனமாக இருக்கிறது என்பது நமக்கு தெரிய வருகிறது.
Thread
— பட்டாசு (@pattaasu) May 27, 2021
ஒரு பொண்ணு quikr ல வந்த ஒரு நோட்டிபிகேசன் பாத்துட்டு, eBook typer வேலைக்கு ஆன்லைன்ல அப்ளை பண்ணிருக்காங்க. எல்லா கண்டிசனுக்கும் வழக்கம் போல OK குடுத்து இருக்காங்க. கடைசியா ஒரு பக்கத்துக்கு 2ரூவான்னு வரவும் கடைசி கண்டிசனுக்கு not interested ன்னு குடுத்திருக்காங்க.
1/6
அந்தவகையில் தற்போது பெண் ஒருவரை வட இந்தியர்கள் நூதன முறையில் மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி பெண் ஒருவர் இ-புத்தகம் டைப் செய்யும் வேலைக்கு குயிக்கர் வேலை தேடம் தளம் மூலம் விண்ணப்பிக்க முயன்றுள்ளார். இதற்காக தன்னுடைய அனைத்து தகவல்களையும் கொடுத்துள்ளார். எனினும் இறுதியில் அவருக்கு ஒரு பக்கத்திற்கு 2 ரூபாய் என்ற தொகை பிடிக்காத காரணத்தால் பாதியிலேயே அவர் அதை நிறுத்தியுள்ளார்.
இனியும் எங்க கூட தொடரணுமுன்னா 15000 சில்ற கட்டுங்க. இல்லேன்னா நீங்க குஜராத் கோர்ட்டுக்கு நேர்ல வந்து 78,000 கட்ட வேண்டியது இருக்குமுன்னு ஒரு மெய்ல் அனுப்பிருக்கானுக. மேற்கொண்டு போன் பண்ணி உடனே செட்டில் பண்ணனும் இல்லேன்னா பெரிய problem ஆகும்ன்னு மிரட்டிருக்கானுக.
— பட்டாசு (@pattaasu) May 27, 2021
3/6
இதனைத் தொடர்ந்து அவருக்கு குஜராத்திலிருந்து ஒருவர் கைப்பேசியில் அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஒப்பந்தத்தை ஏற்று கொள்ளுங்கள் சம்பள விவரம் தொடர்பாக பின்னர் பேசி கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். அவரின் பேச்சை கேட்ட அப்பெண் இந்த வேலை ஒப்பந்தத்தை ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்பு அப்பெண்ணிற்கு மின்னஞ்சல் மூலம் அந்த கும்பல் மிரட்டல் விடுத்துள்ளது. அதில் நீங்கள் ஒப்பந்தத்தை மீறினால் புகார் அளிக்கப்படும். அதை தவிர்க்க உடனடியாக நீங்கள் 15 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அப்படி செய்யவில்லை என்றால் குஜராத் நீதிமன்றத்தில் வந்து 78 ஆயிரம் வரை அபராதம் கட்ட வேண்டும் என்று பயம் காட்டியுள்ளதாக தெரிகிறது.
போலீஸ் நடவடிக்கையை தவிர்க்கணுமுன்னா, உடனே 8,000 ரூவாய இன்ஸ்பெக்டர் நம்பருக்கு phonepe பண்ணி விடுங்கன்னு அனுப்பிருக்கான் அந்த பன்னிப்பய. கூடவே மெய்ல் ஐடி, போன் நம்பர்ல்லாம். 😂 வடக்கூரானுக கார்டு மேல இருக்க 16 நம்பர் போயி, ஆன்லைன் அட்வகேட்டா அப்டேட் ஆயிட்டானுக.
— பட்டாசு (@pattaasu) May 27, 2021
5/6
அதன்பின்னர் மீண்டும் வழக்கறிஞர் எண் என்று ஒரு நம்பரை கொடுத்துள்ளனர். அந்த நம்பருக்கு அப்பெண் தொடர்பு கொண்டுள்ளார். அதை எடுக்காமல் ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளனர். அதில் தற்போது வழக்கு காவல்துறைக்கு சென்றுள்ளது. எனவே காவலரின் போன்பே கணக்குக்கு 8 ஆயிரம் ரூபாய் அனுப்பு வேண்டும் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பெண் குஜராத் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த மாதிரியான புகார் நிறையே காவல்துறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் போலீஸுக்கு தகவல் சொன்னா, அப்ப்டியான்னு கேக்குறானுக. தேடிப்பாத்தா ஆன்லைன் கம்ப்ளைண்டே ஆயிரத்துக்கு மேல இருக்கு. நீங்க பண்ற பிராடுத்தனத்த இங்க சுட்டி டிவி பாக்குற குழந்தைக கூட கண்டுபிடிச்சிருமேடா.
— பட்டாசு (@pattaasu) May 27, 2021
6/6
சூதானம் மக்களே.. pic.twitter.com/Ux6n8DTILE
ஆகவே இந்த மாதிரியான ஆன்லைன் மோசடிகளிலிருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தனக்கு தெரிந்த ஒருவரின் அனுபவத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ட்விட்டர்வாசி.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets