Breaking News LIVE : சசிகலா தொடர்புடைய பையனூர் பங்களா முடக்கம்
Latest News in Tamil Today LIVE: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சமூகம் மற்றும் அரசியல் நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.
ABP NADU Last Updated: 08 Sep 2021 02:23 PM
Background
தமிழ்நாடு அரசின் 16 வது சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 21ம் தேதி அன்று தொடங்கியது. அவையைத் தொடக்கி வைத்துப் பேசிய ஆளுநர் தமிழக அரசின் பல்வேறு முக்கிய அம்சங்களையும், திட்டங்களையும் விவரித்தார். அதன்பிறகு ஆகஸ்ட் 23 ம்...More
தமிழ்நாடு அரசின் 16 வது சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 21ம் தேதி அன்று தொடங்கியது. அவையைத் தொடக்கி வைத்துப் பேசிய ஆளுநர் தமிழக அரசின் பல்வேறு முக்கிய அம்சங்களையும், திட்டங்களையும் விவரித்தார். அதன்பிறகு ஆகஸ்ட் 23 ம் தேதி துவங்கிய மானியக் கோரிக்கை மீதான விவாதம், வருகின்ற செப்டம்பர் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. சட்டமன்ற கூட்டத் தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் இன்று காலையில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆகிய துறைகளுக்கான மானிய கோரிக்கை மீதான விவாதம், வாக்கெடுப்பு, அமைச்சர்கள் பதில் உரை ஆகிய அலுவல்கள் நடைபெற உள்ளது. தமிழ்நாடு சட்டப் பேரவையில் இன்று சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தை இரத்து செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
சசிகலா தொடர்புடைய பையனூர் பங்களா முடக்கம்
சென்னை அடுத்த மாமல்லபுரம் அருகேயுள்ள பையனூரில் 22 ஏக்கரில் அமைந்துள்ள சசிகலாவுக்கு தொடர்புடைய பங்களா உள்ளிட்ட சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. 2017ஆம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில் பினாமி சட்டத்தின்கீழ் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பங்களாவை முடக்கி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.