Breaking | பெகாசஸ் உளவு விவகாரம்: மத்திய அமைச்சரிடம் அறிக்கையை பிடுங்கி கிழித்தெறிந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சஸ்பெண்ட்

தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகளை உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 23 Jul 2021 11:40 AM

Background

பெகாசஸ் தொலைபேசி தகவல் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக, கடந்த 18 -ம் தேதி இணையதளம் மூலமாக பரப்பப்பட்ட தகவல் இந்திய ஜனநாயகத்திற்கு எதிரானது என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்....More

மத்திய அமைச்சரிடம் அறிக்கையை பிடுங்கி கிழித்தெறிந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சஸ்பெண்ட்

மாநிலங்களவையில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி  அஸ்வினி வைஷ்ணவ்  பெகாசஸ் உளவு விவகாரம்  தொடர்பான அறிக்கையை வாசிக்க எழுந்தவுடன், நேற்று திரிணாமுல் எம்.பி. சாந்தனு சென் எழுந்து ஆவணங்களை பறித்து, கிழித்து, துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் பக்கம் பறக்கவிட்டார். ஆவணங்கள் காற்றில் பறக்கவிடப்பட்டதால், மந்திரி தனது அறிக்கையை படிக்க முடியவில்லை, அதற்கு பதிலாக அதன் நகலை சபையின் மேசையில் வைத்தார். எம்.பி சாந்தனு சென் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்